Monday, October 30, 2006

இங்கே... போயிருக்கிறீர்களா... (2).

"ஏம்பா கணேஷ் வீட்டுக்கு எந்தப்பக்கம் போனோம்" என்று திரும்பிப் பார்த்தால் நம்ப ஆளுக்கு பயங்கர வரவேற்பு." ஹாய் கணேஷ் எப்போ வந்தே" என்று பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண் கணேஸனை கலக்கிக்கொண்டு இருந்தாள். நான் ஓரமாக முன் கை நீண்டால்தான் முழங்கை நீளமுடியும் என்று நின்றேன். கணேஷும் சீக்கிரமே கணக்கை முடித்துக்கொண்டு ஒரு ஆட்டோ பார்த்து ஊருக்குள் போனோம் நானும் அவனும். போகும் வழியெல்லாம் கான்கிரீட் ரோடு போட்டு இரண்டு பக்கமும் ஒரே மாதிரி வீடுகள்.நேராக வீட்டிற்கு சென்றோம்.
வீட்டில் அம்பியின் அப்பாவும் அம்மாவும் நல்ல வரவேற்பு,என்னை அறிமுகபடுத்திக்கொள்ளலாம் என்று நினைத்தால் ஏற்கனவே அம்பி என்னைப்பற்றிய எல்லாவிவரங்களையும் சொல்லியிருந்தான்.குளித்துவிட்டு,டிபன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு கிளம்பினோம்.கல்லிடைகுரிச்சிக்கு வந்தேன் என்று சொன்னேனே ஒழிய எதற்கு என்று சொல்லவே இல்லயே. புராட்டாசி மாதம் வரும் எல்லா சனிக்கிழமைகளிலும் அங்குள்ள ஆதி வராக ஸ்வாமிக்கு கருடோத்ஸ்வம் மிக விசேஷமாக நடக்கும். நாங்கள் சென்ற அன்று திருநெல்வேலியில் உள்ள ஒரு பிரபல சிமிட் கம்பெனியின் மண்டகப்படி.
கோவிலுக்குப் போகும் வழியெல்லாம் கணேஷுக்கு ஒவ்வெரு வீட்டு வாசல் படியிலும் மண்டகப்படி.தேங்கா உடைத்து கற்பூரம் காட்டாத குறைதான்.கணேசனும் ஒவ்வொரு வீட்டு வாசல் படியுலும் பஞ்சாயித்து போர்ட் குப்பைவண்டி மாடு தானாகவே நின்னு போவது மாதிரி குசலம் விசரித்துக்கொண்டு வந்தான்,"எலே கணேஷு எப்படா வந்தே,பங்களுர்லே படிக்கிறயா?இல்லே வேலைக்கு போறயா? இப்படியெல்லாம் விசரித்தது யார் என்று நினைக்கிறீர்கள்,பத்துவயது பையன்,வயசுப்பொண்கள்,மாமக்கள்,80 வயது பாட்டிகள்,கணேசனுக்கும் பெருமை வேலைக்குச் சேர்ந்தபின் முதல்தடைவையாக ஊருக்கு வந்திருக்கிறான்.சயங்காலம் நடக்கப்போகும் கருடசேவைக்கு இது ஒரு 'கர்டன் ரெய்சர்' மாதிரி இருந்தது.
ஒரு வழியாகக் கோவிலுக்குள் சென்றோம். அங்கு நுழைந்தவுடனே ஒரு 10/15 பெருசுகள் கணேசனை கட்டி அணைத்துகொண்ட காட்சி கண்கொள்ளா காட்சி. ஸ்வாமிக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து கற்பூரம் காண்பித்தார்கள்.நல்ல தரிசனம்.வெளியே வந்து பிரசாதம் வாங்கிக்கொண்டு திரும்பிப் பார்த்தால் நம்ம ஆளை மறுபடியும் காணவில்லை. பார்த்தால் அங்கே ஒரு பெண் ஆஞ்சநேயரை சுற்றிக்கொண்டு இருந்தாள். நம்ம ஆள் அவளைச் சுற்றிக்கொண்டு இருந்தான் ."சார் என்னோட காலேஜிலே படித்தவள்" என்றான்."சரி.... சரி".... என்றேன். முன்பு சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன் "அம்பியோட தம்பியேதான் இவன் சந்தேகமே இல்லை".
திரும்பிப் போகும்போதும் கிட்டதட்டே அதே மண்டகப்படிதான் வீடு போய் சேரும்வரை. என்ன இந்தத் தடவை எல்லாம் அவன் வயசுப் பசங்கள்."எலே மாப்ளே எங்கேடா வேலை...என்னா சம்பளம் ..இத்யாதி இத்யாதி .....தொடரும்

Sunday, October 29, 2006

இங்கே... போயிருக்கிறீர்களா....

எனது அத்யந்த சிஷ்யனும், எனது அன்புக்கும் ஆசிக்கும் உரிய,பால்வடியும் முகம் கொண்ட அம்பியின் அழைப்பை ஏற்று கல்லிடகுறிச்சிக்கு விரைந்தேன் இந்த மாத தொடக்கத்தில்.மேலே படியுங்கள்........

திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷ்னலில் ஒருவர் ஸெல்போனில் பேசிக்கொண்டு இருக்கிறார்"டி.ஆர்.சி. சார் எங்கேஇருக்கீங்க? பின்னால் ஒருவர் அவர் தோளைத்தட்டி "கணேஷ் இப்படித் திரும்பி பார் இங்கேதான் இருக்கேன்" "சார் நீங்க இங்கேயா இருக்கீங்க,என் பஸ் கொஞ்சம் லேட் வாங்க போவோம் கல்லிடைகுறிச்சிக்கி"

கணேசனைப் பற்றி சில வார்த்தை. களைததும்பும் கள்ளம் கபடு இல்லாத முகம்,அபரிமிகுந்தபக்தி,அதனால் விளைந்த பணிவு,எம்பத்திஐந்து வயது பெரியவர் முதல் எட்டுமாத குழந்தை வரை எல்லோராலும் விரும்பப்படும் பெற்றோரிடத்தில் மரியதையும் அன்பும் உள்ள நல்ல பையன்.இத்தனை நல்ல குணங்கள் இருந்தாலும் குறை ஒன்றுமில்லை. அம்பியின் தம்பி மாதிரியே இல்லை
ஊருக்கு வெளியே இருந்த புதுப் பஸ்டாண்டுக்கு வந்து பாபநாசம் செல்லும் பஸ்சில் ஏறி உட்கார்ந்து கொண்டோம். வழிநெடுகிலும் பச்சைப்பசேலென்று நெல் வயல்களும்,வாழைத்தோட்டங்களும்,மலையும் மலைச்சார்ந்த இடமும் கண்ணுக்கு ரம்யமாக இருந்தது.சிமிட்டுச்சிறையில் இருந்த என்போன்றவர்களுக்கு ஏதோ பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையைப் பார்த்தால் போலிருந்தது.

"சார் ஊர் வந்தாச்சு இறங்குங்கோ" கணேசன் என்னை மீட்டுக்கொண்டு வந்தான்.கல்லிடையில் முதல் முதலாக கால் வைத்தேன்.அந்த ஊரைப்பற்றி ஒன்றுமே தெரியாது ஏதோ அப்பளாத்துக்கு பேர்போனது என்றுதான் நினைத்தேன்.நான் நினைத்தெல்லாம் தவறு என்று தெரிய ரெண்டுநாள் ஆயிற்று.மெதுவாக ஊருக்குள் செல்ல ஆரம்பித்தோம்......தொடரும்

Friday, October 27, 2006

கோபுர தரிசனம்..... கோடி புண்ணியம்...


தமிழ்த் தியாகய்யா திரு.பாபநாசம் சிவனுடைய பாடல்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.மிக எளிமையான பக்தி பாவம் ததும்பும் பாடலகளைத் தமிழ் உலகுக்கு தந்தவர் அவர்.சினிமாத்துறையிலும் கொடிகட்டிப் பறந்து "மன்மத லீலயை வென்றார் உண்டோ", "ராதே உனக்கு கோபம் ஆகாதடி",போன்ற பாடல்களைத் தந்தவர்.அவர் எழுதிய பாடல்கள் பலவற்றில் எனக்கு பிடித்தபாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று.

ராகம்= ச்ரிரஜ்ஜனி

காணவேண்டாமோ இரு கண்ணிருக்கும் போதே ஐய்யனின் விண்ணுயர் கோபுரம்......(காண)

வீணில் உலகைச் சுற்றிச் சுற்றி வந்தால் மேதினி போற்றும் சிதம்பர தேவனை.....(காண)

வைய்யத்திலே கருப்பையுள்ளே கிடந்து நைய்யப் பிறாவாமல் ஐயன் திரு நடனம்.....(காண)

ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக் கூட்டிலிருந்து உயிர் ஒட்டம் பிடிக்கும் முன்..... (காண)

இந்தப் பாடலின் ஒலி வடிவம் கேட்க கிளிக் செய்யவும் இங்கே">