Wednesday, November 07, 2007

தீபமங்கள ஜோதியும் தீபாவளியும்

நல்ல சீலங்கள், நல்ல குணங்கள் வரவேண்டுமென்றால் நல்ல ஆசாரங்கள் இருக்கவேண்டும். மனசு சுத்தமாக இருந்தால்தான்மட்டுமே சீலம் வரும்.
கெட்டது என்பதே மனதில் புகாதபடி
நல்லது முழுவதும் நிரம்பியிருந்தால்தான்
சீலம் வரும்.கண்ணாடியைப் பார்க்கிறோம்.
அழுக்கு இருந்தால் பார்க்கமுடிகிறதா?
சுத்தமாகத் துடைத்து விட்டுப் பார்த்தால்
நன்றாகத் தெரியும். கண்ணாடி சுத்தமாக
இருப்பதுடன் அசையாமல், நிலையாகவும் இருக்க
வேண்டும்.அப்போதுதான் உண்மை பிராகாசிக்கும்
சித்தமென்பது ஒரு கண்ணாடிபோன்றது.
பரம்பொருள்தான் உண்மை! உலகைப் படைத்த
ஆண்டவனைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால்,
நம்முடையசித்தத்தைஅழுக்கில்லாமல்,ஆடாமல்,
அசையாமல்,நிலையாக வைத்துக்
கொள்ளவேண்டும்.

காஞ்சி பரமாசாரியார் வாக்கு

எல்லோருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.தலைதீபாவளி கொண்டாடும் அம்பிக்கும்,இன்னும் தலை தீபாவளியை தனியே கொண்டாடும் அருணுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.தீபாவளி என்றாலே புதுத்துணிகள்,பட்டாசுகள், வண்ணமலர் மத்தாப்புகள், இனிப்பு மற்றும் காரவகைகள், குழந்தைகளின் மகிழ்ச்சி ஆரவாரம்,பெரிசுகளின் கலகலப்பும் மிகுந்த நாள். நாங்கள் இந்தியாவில் இல்லையே பட்டாசு வெடிக்க முடியவில்லையே என்று வருத்தம் வேண்டாம் இதோ பட்டாசுடன் கொண்டாடுங்கள்


முந்தி முந்தி விநாயகனைத் தொழுது கும்பிடுங்கள்


என்ன சார் என்னை மாதிரி குழந்தைக்கு பட்சணம்கிடையாதா என்று கேட்கப்போகும் அம்பிக்கு இதோ


வாணவேடிக்கை போதாது என்பவர்களுக்கு மேலும் சிறப்பு கீழேபார்த்து ரசியுங்கள்.