Saturday, September 11, 2010

வராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன்


விநாயகரைப் பற்றிய நினைப்பு வந்தாலே இந்த ஸோத்திரமும் நினைவுக்கு வரும். ஆதி சங்கரரால் புனையப்பட்ட எளிமையான ஸ்லோகங்களுள் இதுவும் ஒன்று. குழந்தைகளுக்கு கற்பிக்கவேண்டிய ஸ்லோகம் இது.சிறுவயதில் பழக்கப்படுத்திக்கொண்டால் நாக்கு நன்கு புரளும் வார்த்தைகள் தெளிவாக வரும்..பக்கவாத நோய் வந்து நாக்கு பேச வராதவர்கள் இந்த ஸ்லோகத்தை சொல்லப் பழகி பேசும் திறன் பெற்றவர்களும் உண்டு. இந்த புனித விநாயக சதுர்த்தியன்று விருப்பமுள்ளவர்கள் சொல்லிப் பழகுங்கள். எம் ஸ் அம்மாவின் குரலில் சேர்ந்து சொல்லிப்பாருங்கள்
கணேஷ பஞ்ச ரத்னம்
முதா கராத்த மோகம் ஸதா விமுக்தி சாதகம்
(சந்தோஷத்துடன் கையினில் மோதகத்தை வைத்திருப்பவரும் தன்னை அண்டியவருக்கு எப்பொழுதும் மோக்ஷத்தை கொடுப்பவரும்)
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
( பாலசந்திரனை விரும்பி அணிந்துகொண்டவரும்,அன்புள்ளம் கொண்டோரை காத்து ரக்ஷிப்பவரும்)
அநாய்கைக நாயகம் விநாசிதேப தைத்யகம்

(ஆதரவுஅற்றவர்களுக்கு நாயகனாய் இருப்பவரும் அடியவர்களின் குறைகளைத் தீர்ப்பவரும்)
நதாஸுபா பாசுரம் நாமாமிதம் விநாயகம்
(கஜமுகாஸுரனை கொன்றவருமான விநாயகனை நான் வணங்குகிறேன்)
நதேத்ராதி பீகரம் நவோதி துர்க்க பாஸ்வரம்

(வணங்காதவருக்கு பீதியைக் கொடுப்பவரும்,உதய சூரியனுக்கு ஒப்பானவரும்)
நம்த் ஸுராரி நிர்ஜ்ஜரம் நதாதிகாப துத்தரம்
(தேவர்களால் வணங்கப்படுபவரும், வணங்கியவர்களின் துக்கத்தைப்போக்குபவரும்)
ஸுரேஸ்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம்
(தேவர்களுக்கு தலைவரும்,அஷ்டநிதிகளை தருபவரும்,கஜமுகாசுரனுக்கும் தேவகணங்களுக்கும் தலைவராகவும்))
ஹேஸ்வரம் ஸ்மாஸ்ரயே பராத்பரம் நிரந்தரம்
(பரம்பொருளுக்கு நிகரானவரும், சாஸ்வதமாக வீடுபேறு அளிக்கவல்லவருமான விநாயகரை வணங்குகிறேன்)
ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்சரம்
(கஜமுகாஸுரனை அழித்து உலகுக்கு நன்மை செய்தவரும்)
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம்

(அழகிய யானை முகமும் பெருத்ததொந்தியும் உடையவரும்)
கிருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஷ்கரம்
(கருணை நிறைந்தவரும், குற்றங்களை மன்னிப்பவராகவும், மகிழ்ச்சியையும் புகழையும் அளிப்பவராகவும்)
மனஸ்கரம் நமஸ்கிருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்
(தன்னை மனதால் வணங்குபவர்க்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவரை வணங்குகிறேன்)
அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
(வறியவர்களின் துன்பத்தை களைபவரும்,உபநிஷதங்களில் உயர்வாகச்சொல்லப்பட்டவரும்)
புராரி பூர்வபுரா நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
(சிவனின் தலைமகனாய் அஸுரர்களின் கர்வத்தை அடக்கியவரும்)
ப்ரஞ்சநாச பீஷணம் தன்ஞ்ஜயாதி பூஷணம்
(உலகத்தைக் காப்பவரும் நன்கு அலங்கரிக்கப்பட்டவரும்)
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்
( மதஜலத்தால் மிளிர்கின்றவரும் புராணங்களுக்கு நாயகருமானவரைத் துதிக்கிறேன்)
நிதந்த காந்த தந்த காந்தி மந்தகாந்த காத்மஜம்

(முகத்திலிருக்கும் தந்தத்தின் ஒளியினால் முகமெல்லாம் பிரகாசிப்பவரும்)
அசிந்த்ய ரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்

(எண்ணத்தில் பதிக்கவொண்ணா உருவம் கொண்டவரும் யமனை அடக்கிய சிவனின் புதல்வரும்)
ஹிருதந்த்ரே நிரந்தரம் வஸந்தமேவ யோகினாம்
(முனிவர்களின் மனதை ஆனந்தநிலயமாக கொண்டவரும்)

தமேக தந்த மேவதம் விசிந்தாயாமி ஸ்ந்ததம்
(ஒற்றைக் கொம்பனான கணபதியை எப்பொழுதும் மனதில் தியானிக்கிறேன்)
மஹா கணேச பஞ்ச ரத்ன மாதரேயோன் வஹம்(இப்படிப்பட்ட மஹா கணேச ஐந்து ரதனங்கள் போன்ற ஸோஸ்த்திரத்தை)
பிரஜல்பதி ப்ரபாதிகே ஹிருதி ஸ்மரன் கணேஸ்வரம்
(எவனொருவன் பக்தியுடன் காலைவேளையில் கணபதியை நினைத்து
சொல்லுகிறானோ)
அரோகத மதோஷதாம் ஸூஸாகிதீம் ஸுபுத்ரதாம்
(அவன் நோய் நொடி இலா வாழ்வும்,கலையாத கல்வியும்,தவறாத சந்தனாமும்,மாறாத கீர்த்தியும் மற்றும்)ஸ்மாஹிதாயுரஷ்ஸ்ட பூதி மப்யுபைதி ஸோசிராத்
(எல்லாச்செல்வங்களையும் வளங்களயும் பெற்று என்னச்சேர்ந்தவன் ஆகிறான்.)
இப்போது வீடியோவில் எம் ஸ் அம்மாவின் குரலில் காண்டும் கேட்டும் ரஸியுங்கள். பாட்டைக் கேட்டுக்கொண்டே படங்களையும் ரஸியுங்கள்.


கொசுறு: இதே ராகத்தில் ஒரு சினிமா பாட்டு உண்டு. எஸ்.பி.பாலு பாடியது. சொல்லுங்கள் பார்க்கலாம்

சரி எல்லோரும் பூஜை முடிந்து கொழுக்கட்டை, வடை,எல்லாம் சாப்பிட்டுவிட்டு மாலை இந்த பஜனையில் கலந்துகொண்டு வேழமுகத்தானின் ஆசியைப் பெற வாருங்கள். இதில் பக்தி பாடல்களை பாடுபவர்என்நண்பர்திரு.கணேஷ்குமார்அவர்கள். மும்பையில் மிகப் பெரிய தொழில் அதிபர்.மராத்திய அபங்கம்களைப் பாடுவதில் விற்பன்னர். நல்ல சாரீரவளமுடையவர். அதென்ன ஐய்யா அப்படி ஒரு சுருதி சுத்தம். பத்து செகண்டுக்குள் பஞ்சமத்தைப் பிடித்து விட்டு அதில் அப்படியே ஐந்து நிமிடங்களுக்கு மேல் சஞ்சாரிக்கும் வளம் உடனே ஐந்து

செகண்டுக்குள் ஷட்சமத்தை நோக்கி விர்ர்ர்ர் என்று இறங்கும் வண்ணத்தைக் காணலாம்.ஹார்மோனியத்தில் கைவண்ணம் பார்க்கவேண்டுமே விரல்களில் அனல் பறக்கும் போட்டி போட்டு குரலும் கையும் நம்மை அப்படியே தூக்கிச்செல்லும்.இதோ அவருடைய கணேசே கானங்களை கேட்டுவிட்டு சொல்லுங்கள். சொல்ல மறந்து விட்டேனே இவ்வளவு இருந்தும் பழகுவதற்கு மிகவும் எளிமையான மனிதர்.கூடப் பாடுபவர்களும் மிகப் பெரிய பதவிகளில் இருப்பவர்கள்.
கணபதி பூஜை என்றால் மஹாரஷ்ட்ராதான் நினைவுக்கு வரும். அதுவும் மும்பை சித்தி விநாயக் மந்திர் அழகே அழகு.வாருங்கள் பிரபாதேவிக்கு போய் மந்திரில் இருக்கும் விநாயகரை தரிசனம் செய்து கொண்டே
பாடல்களை பார்த்து கேட்டு அனுபவியுங்கள்.


சரி விநாயகரிடம் எப்படி வேண்டிக்கொள்ளவேண்டும்<"எம்.ஸ்.அம்மாவின் வேண்டுதலை இங்கே கேட்கவும்">


வராது வந்த நாயகன் வரம் தரும் வினாயகன்
தந்தம் கொண்டு பாரதத்தை சந்தமாக எழுதியவன்


மூலமாக வந்தவன் ஆதிமூல நாயகன்
தடைகள் நீக்கி வரங்கள் அருளும் தயாபரன்
ஏழை எளிமை மக்களும் எளிதில் வணங்கும் உமாசுதன்
யானை முகமும் பானை வயிரும் கொண்டு ஞலம் காக்க வந்தவன்


விஸ்வக்ஷேணன், விக்னராஜன், எனப்பெயரும் கொண்டு
தனவருக்கும், வானவருக்கும்,நம்மவருக்கும்
தரணிதன்னில் பாலசந்திரனாக வந்து காத்து அருளும்
சக்தி தந்த சாதகன்


அகத்தியருக்கு அருள் புரிந்து காவிரி கவிழ்த்த கஜானனன்
அழகன் திருத்தணி முருகனுக்கு வள்ளியை மணம் முடிக்க
யானை வடிவில் வந்த அண்ணனை போற்றூவோம்
ஆழமான பக்திசெய்து அன்புடனே வணங்குவோம்


இந்த நன்னாளில் எளியேன் செய்த கவிதையை அவனுக்கே அர்ப்பணிக்கிறேன்