Friday, February 16, 2007

தமிழ்த் தியாகைய்யா திரு. பாபநாசம் சிவன்(6)

)






இன்று சிவராத்திரி. சந்திரசேகரனான சிவனைப் பற்றி பேசுவது நினைப்பது அல்லது அவனுடைய சமபாதியான உமாவைப் பற்றிய பாடல்களை கேட்பது நல்லது.

பாபநாசம் சிவனுக்கு பிறந்த ஊர் நாகப்பட்டினம். அந்த ஊர்க்கோயிலின் அம்மன் பெயர் நீலாயாதாக்ஷி. அந்தச்சொல்லைத் தன் பாடல்களில் நிறைய இடங்களில்உபயோகித்து இருக்கிறார். கல்யாணி ராகத்தில் அமைந்த இந்த "உன்னை அல்லால் வேறே கதி இல்லை அம்மா. உலகெலாம் ஈன்ற அன்னை" பாடலில்
அருமையாக உருகி பாடியுள்ளார்.கல்லும் கரையும் இந்தப்பாட்டை திரு. சஞ்சய்சுப்ரமணியன் தன் இனிய இளமையான குரலில் அள்ளிவழங்கியிருக்கிறார்.பாட்டின் வரிகளைப் பார்ப்போமா

ராகம்:- கல்யாணி தாளம் :- ஆதி.

பல்லவி

உன்னை அல்லால் வேறேகதி இல்லை அம்மா உலகெலாம் ஈன்ற அன்னை(உன்னை)


அனுபல்லவி

என்னையோர் வேடமிட்டு உலக நாடக அரங்கினில் ஆடவிட்டாய்
என்னால் இனி ஆடமுடியாது திருவுளமிரங்கி ஆடினது போதுமென்று ஓய்வளிக்க (உன்னை)


சரணம்

நீயே மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாட்க்ஷி
எனப் பல பெயருடன்
எங்கும் நிறைந்தவள் என் மனக்கோயிலிலும் எழுந்தருளிய தாயே
திருமயிலை வளர் (உன்னை அல்லால்)


கல்யாணி ராகத்தின் ஆரோகணம் ஸ ரி க ம ப த நி ஸ
அவரோகணம் ஸ நி த ப ம க ரி ஸ
ரொம்ப சங்கீதமா இருக்குன்னு பயப்படவேண்டம். அறிந்து கொள்வதில் தவறு இல்லை. இதில் கல்யாணியின் ஜீவஸ்வரம் நி . இதை வைத்துகொண்டு சிவன் இந்தக்கீர்த்தணையில் சரணத்தில் விளையாடியிருக்கிறார்
நீயே மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாட்க்ஷி என்ற வரிகளில் நிஷாதத்தை உயர்த்தி நி த ம க ரி ச என்று ஷட்சமத்தை கடைசியில் இறக்கி முடிக்கிறார்.

இன்னொறு சிறப்பு இதில் நீ என்று ஆரம்பித்து மீனாக்ஷி காமாக்ஷி தரிசனத்தை முடித்துக் கொண்டு தன்னுடைய பிறந்த ஊரின் நாயகியான
நீலயதாட்க்ஷியின் பாதாரவிந்தங்களில் சரணமாகி ஷட்சமத்தில் முடிப்பது அவருடையமேதா விலாசத்தையும்அபரிமிதமான சங்கீத ஞானத்தையும் புலப்படுத்துகிறது.

அதற்காக தன்னைஆதரித்தகற்பகாம்பளையும்மறக்கவில்லை. கடைசியில் மேலே சொன்ன மூன்றுபேரும் வேறு யாரும் இல்லை திரு மயிலை வளர் கற்பகாம்பாள்தான் என்று முடிக்கிறார்.பாடல் வரிகளையும் பாட்டையும் சேர்த்து மறுமுறை கேளுங்கள் சிறப்பாக இருக்கும். திரை இசையிலும் கல்யாணியை விட்டு வைக்கவில்லை.மன்னவன் வந்தானடி தோழி எனற பாடல் திருஅருட்ச்செல்வர் படத்தில் சக்கை போடு போட்டது. அதேமாதிரி அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையினிலே (பாவம் அம்பி பாடமுடியாது) தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் மனத்தை அள்ளும்.

மன்னவன் வந்தானடி பாடல் கேட்க'><"இங்கே க்ளிக் செய்யவும்">

அமுதும் தேனும் எதற்கு பாடல் கேட்க'><"இங்கே க்ளிக் செய்யவும்">

இத்துடன் பாபநாசம்சிவன் தமிழ்த்தியகைய்யா முடிவுபெறுகிறது.