Sunday, December 31, 2006

புத்தாண்டே வருக...வருக புன்னகை பூக்கும் நாட்களைத் தருக

வலையுலக நண்பர்களுக்கு பொலிக... பொலிக... புத்தாண்டு 2007

வாழ்க...வாழ்க... வளமுடன்

குடும்பத்தில் நல்லவை நடந்து மகிழ்ச்சிப் பொங்கட்டும்.

என்றும் அன்புடன் தி.ரா.ச.(TRC)

புத்தாண்டுக்கு என்ன எழுதலாம் என்று தேடியபோது
கண்ணில் பட்டு கருத்தைக் கவர்ந்தது
அவள் விகடனில் வந்த ஒரு கவிதை.:-

தண்ணீர் பஞ்சம் தொலைய வேண்டும்
தங்கம் விலை குறைய வேண்டும்

அழுகை இல்லா சீரியல் வேண்டும்
அழாமல் பிள்ளை சாப்பிட வேண்டும்

வாரா வாரம் அவுட்டிங் வேண்டும்
வஞ்சனை இல்லா ஷாப்பிங் வேண்டும்

சண்டை போடாத சர்வன்ட் வேண்டும்
சமையலில் உதவும் ஹஸ்பண்ட் வேண்டும்

வாக்கிங் இன்றி மெலிய வேண்டும்
வல்கர் சினிமா ஒழிய வேண்டும்

தொடர்பு விட்ட தோழிகள் வேண்டும்
தொல்லை தராத சொந்தங்கள் வேண்டும்

மயக்கம் இல்லாத மசக்கை வேண்டும்
மதியம் குட்டித் தூக்கம் வேண்டும்

மளிகைச் செலவு குறைய வேண்டும்
மாசக் கடைசியிலும் மகிழ்ச்சி வேண்டும்

வேண்டும் வேண்டும் இறைவா--என்
ஏக்கங்கள் எல்லாம் தீர்ப்பாயா
புன்னகை ததும்பும் வாழ்வை--நீ
புத்தாண்டு வரமாய் சேர்ப்பாயா!

நன்றி:- அவள் விகடன் எழுதியவர்:- மிஸஸ்.எக்ஸ்.

இது முற்றுப்பெறவில்லை நீங்களும் உங்கள் பங்குக்கு புதிய வருடத்தில் உங்கள் விருப்பங்களைச் எதிர்பார்ப்புக்களைச் சேர்க்கலாம்.
இதோ என் பங்குக்கு:-

குப்பை இல்லாத சென்னை வேண்டும்
தொப்பை இல்லாத போலீஸ் வேண்டும்

Friday, December 29, 2006

வைகுண்ட ஏகாதசி


நாளை வைகுண்ட ஏகாதசி. சீரி ரங்கத்தில் கூட்டம் உளுந்து போட்டால் உளுந்து விழாது. அரங்கனைக்காண பக்தர்கள் அலை மோதுவார்கள். அரங்கன் சொர்கவாசல் தரிசனமும் பரமபத சேவையும் காண ஆயிரம் கண்போதாது. அதைவிட முக்கியம் தாயார் ரங்கநாயகி படிதாண்டா பத்தினி வெளியே வந்து அரங்கனை காணும் காட்சி இருக்கிறதே அதை வார்த்தைகளால் வர்ணிப்பது கடினம். நம்மால் அந்த கூட்டத்தில் போய் பார்க்க முடியுமா? அதனால் இங்கேயே பார்த்துவிடுங்கள்.
ஆமாம் அரங்கன் ஏன் பள்ளிகொண்ட நிலையிலேயே இருக்கிறான். காரணம் தெரியவேண்டுமா அருனாசல கவிராயரைக் கேளுங்கள். " ஏன் பள்ளீ கொண்டீர் ஐய்யா ச்ரீ ரங்கநாதா" என்ற பாட்டில் விவரமாகக் கூறுகிறார். அதை திருமதி.அருணா சாய்ராம் இசையின் மூலமாக கேட்கலாமா? பாட்டைக் கேட்க இங்கே

'><"a >

Wednesday, December 27, 2006

கிருஷ்ணப்பிரவாஹம்.

இன்று காலையில் தினமலர் பேப்பரில் ஒரு செய்தி.கிருஷ்ணா நதித் தண்ணீர் சென்னை வந்து புழலேரி நிறைந்தது. புழலேரி நிறைந்ததோ இல்லையோ ஆனால் டிஸெம்பர் 26ஆம்தேதியன்று மாலை நாரத கான சபாவில் இருந்த ரசிகர்கள் கிருஷ்ணாவின் சங்கீத பிரவாகத்தில் முழுகி மனது நிறைந்தவர்களாக ஆனார்கள்.

மணி4.30க்குத்தான் கச்சேரி ஆனால் 4.15க்கே ஹால் நிரம்பி வழிந்தது.4.40(10 நிமிடம் லேட்)க்கு கரகோஷத்துடன் கச்சேரி ஆராம்பம். அவருக்கு பக்காபலாமாக திரு. வரதராஜன் வயலின்,கரைக்குடி திரு. மணி மிருதங்கம்,திரு.சுரேஷ் கடம் பக்கபலமாக வாத்தியக்காரர்கள். நல்ல ஜமாவுடன் "சாமி தயாசூடா... என்ற கேதரகௌள வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பம் அடுத்து வந்தது"வினதா சுத வாஹனா ச்ரி ராமா" என்ற ஜயந்தசேனா ராகத்தில் அமைந்த கிருதி. இந்த மாதிரி புதிய ராகங்களையும் கிருதிகளயும் பல வித்வான்கள் தொடுவதே இல்லை நமக்கு ஏன் வம்பு என்று.ஆனால் திரு. கிருஷ்ணா இதையும் லாவகமாக எடுத்து அருமையாகப் பாடி ரசிகர்களை குஷிப் படுத்தினார்

அடுத்தது வந்தது யதுகுல காம்போதி.ஒரு 20 நிமிஷம் நாரத கான சபா கிருஷ்ணா கான சபா ஆகிவிட்டது. அதாவது கிருஷ்ணா கான மழைதான். அதனுடன் கொஞ்சி விளையாடி யதுகுலகாம்போதியின் முழு ராகஸ்வரூபத்தையும் கொஞ்சம் கூட ரசிகர்களுக்கு சந்தேகமே வராதமாதிரி வெளிச்சம் போட்டு காட்டி விட்டார். திரு. வரதராஜனும் அப்படியே அதை வாங்கி அதே நெளிவு சுளிவுகளுடன் திருப்பிக் கொடுத்து தன் கணக்கை சரி பண்ணி விட்டார். எடுத்துக்கொண்ட கிருதியும் மறைந்த திரு.ஜி.என்.பி யின் "பரம கிருபா சாகரி பாஹி பரமேஸ்வரி".பின்னே கேட்கவேண்டுமா வெற்றிக்கு.

அதன் பின்னர் ஹிந்தோளவசந்தம் ராகத்தில் "சந்தான ராமஸ்வமினம்' என்ற கிருதியை துரித காலத்தில் சுருக்கமாக சுறு சுறுப்புட்ன வழங்கி விட்டு மெய்ன் ராகமான கீரவணிக்குத் தாவினார்.

கீரவாணியை மூன்று காலங்களிலும் விஸ்த்தாரமாக பாடி ஒரு அலசு அலசிவிட்டார்.பிருகாக்களும்,கோர்வைகளும் பின்னிவர ராகத்தின் லக்ஷ்ணங்களை அழகாக படிப்படியாக மேலே கொண்டு போய் "அவுட் வாணம்" போல் வானவேடிக்கைதான் போங்கள்.தியகராஜரின் "கலிகியுண்டே கதா" தான் கீர்த்தணை.நிரவல்,அதைத்தொடர்ந்து வந்த ஸ்வரப்பிரஸ்தாரங்களும் கீரவாணியை கச்சேரியின் ரகாof the day ஆக மாற்றிவிட்டது.

கரைக்குடி திரு. மணி தாள வாத்தியத்தின் மதிப்பை உயர்த்தியவர்.பரம ஞானஸ்த்தர்,நல்ல அனுபவசாலி,பாடகர்களுக்கும் பாட்டிற்கும் போஷித்து வாசிக்கும் வல்லமை படைத்தவர். அன்று அவர் வாசித்த தனி ஆவர்த்தனத்தில் அவரது கை விரல்களில் நெருப்பு பொறி பறந்தது. அப்படி ஒரு லய வாசிப்பு. அன்று அவர் வைத்த மொஹராக்களும்,ப்ரன்களும்,முத்தாய்ப்பும் மற்றும் தாளப்பங்கீடும் அலாதி முத்திரையை பதித்தது.இருந்தாலும் மிருதங்கத்தின் நாதத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஆனால் கடம் திரு சுரேஷ் தன்னுடைய பங்குக்கு தனியில் தனிக்கொடி நாட்டி சாதித்துவிட்டார். என்ன நாதம் ஐய்யா அது,இன்னும் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டு இருக்கிறது கச்சேரியின் ஆரம்பம் முதல் கடைசிவரை கச்சிதமான சபையோரைக் கவர்ந்த வாசிப்பு.

திரு கிருஷ்ணா பின்னர் சஹாணாவை ராகத்தை எடுத்துக்கொண்டு ஒரு மினி ராகம் தானம் பல்லவி பாடி அவையோரின் கரகோஷத்தையும். ஆஹாக்களயும்,உச்சு உச்சுக்களையும் ஏராளமக பெற்றுக்கொண்டார்.பல்லவி எளிமையானது"வடிவேலனை நிதம் போற்றுவொம். வையம் எல்லாம் அருள்புரிந்து காக்கும்...." அன்றைய கச்சேரியை மதுவந்தி ராகத்தில் சதாசிவ பிரும்மேந்திரரின் "ஸ்ர்வம் பிரும்ம மயம்" என்ற கிருதியுடனும் மற்றும் ரசிகர்களின் மனதை உருகச்செய்து உருகிபடிய 'இரக்கம் வராமல் போனதென்ன காரணம்" என்ற பெஹாஹ் ராகத்தோடு முடித்துக் கொண்டார்

வயலின் வாசித்த திரு வரதராஜனைப் பற்றி ஒரு வார்த்தை. ஆரம்பமுதல் தலையைக்குனிந்து கொண்டு வயலின் நாதம் எங்கிருந்து வருகிறது என்ற சந்தேகம் வருகிறமாதிரி அப்படி ஒரு அடக்கமான வாசிப்பு.பாடகரை நிழல் போலத்தொடர்ந்து அனுசரனையான வாசிப்பு.பாடகர் எந்தப் பிடி கொடுத்தாலும் இந்தா 'பிடி" என்று அதே வேகத்தில் திருப்பி வழங்கும் அலட்டல் இல்லாத வாசிப்பு. நல்ல ஒரு முழு நிறைவுள்ள கச்சேரியை கேட்ட திருப்தியுடன் வீடு திரும்பினேன்.

Wednesday, December 20, 2006

திரு. பாபநாசம் சிவன் தமிழ்த் தியாகய்யா...(4)

சிறுவயது முதல் எனக்கு பிடித்த பாடல் இந்தப்பதிவில் உள்ளது.இரும்புத்திரை என்ற படத்திற்காக எழுதப்பட்ட பாடல்.கரஹரப்ப்ரியா ராகத்தில் அமைந்த பாடல் இது.(அம்பி சொல்வது :- என்ன சார் நீங்க எதோ ராகம்னு சொல்லறீங்க ஆனால் பாதிதான் புரியரது பிரியாங்கறது கேட்டா பெயரா இருக்கு ஆனா கரஹரா புரியலைஎதோ சாப்பிட்ட பேர் மாதிரி இருக்கு)மாதவிப் பெண்மயிலாள் தோகை விரித்தாள் நல்ல மையிட்ட கண்களுக்கு.... என்ற பாடல் இருமலர்கள் படத்தில் வரும் இதுவும் கரகஹரப்ரியா ராகம்தான்.
மயிலை கற்பகவல்லியின் முன்பு நிற்கும்போதெல்லாம் இந்தப் பாட்டின் முதல் இரண்டு வரிகளை என் வாய் முனுமுனுக்கும்."என்ன செய்தாலும் எந்தன் துணை நீயேஎன் அன்னையே உமையே-- நீ என்ன செய்தாலும்..."திருமணத்திற்கு பிறகும் இந்தப்பாட்டுதான் பிடித்தமான பாட்டு. என்ன மூன்றாவது அடியையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்"என்ன செய்தாலும் எந்தன் துணை நீயேசினந்தென்னை அடித்தாலும், பரிந்தென்னை அணைத்தாலும்என் அன்னையே உமாவே... நீ என்ன செய்தாலும் "


படத்தில் இந்தப் பாடலை பாடியவர்கள் தாயும் மகளும். மகள் திருமதி. வைஜயந்திமாலா அவர்கள்.வைஜயந்தியின் தாயாக நடித்தவர் யார் என்று கூறுங்கள் பார்க்கலாம். விடையை பிறகு பின்னுட்டத்தில் தருகிறேன்.இனி பாட்டைப் பார்ப்போம்

ராகம்:-கரஹரப்பிரியா தாளம்: ஆதி
பல்லவி

என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
என் அன்னையே உமையே-- என்னை நீ
அனு பல்லவி
சின்ன வயது முதல் உன்னையே நம்பினேன்
சினந்து என்னை அடித்தாலும் பரிந்து என்னை அணைத்தாலும்....(என்ன) சரணம்
முன்வினையால் இன்ப துன்பங்கள் விளைந்திட
மூடமதி கொண்டுன்னை நோவது என் பேதமை
என் விதியால் இடராயிரம் சூழினும்
எல்லாம் உன் திருவிளையாடல் என்று எண்ணி இனி...(என்ன) Papanasam Sivan: The Tamil Tyagarajar (4)

அனுமனைத் துதி மனமே...தினமே..

ஸ்ரீ ராம ஜெயம்
மாதவம் செய்த...
மாதவம் செய்த மாதவள் அஞ்சனை மடிதனில் மலர்ந்தவனாம்
மாதவன் ராமன் தூதுவன் என்றே மாகடல் கடந்தவனாம் ---(மாதவம்)

ராமனைப் போற்றிப் பாடிடும் நேரம் ரகசியமாய் வருவான்
கைத் தாளங்கள் போட்டு ஆனந்தமாக மனங்குளிர்ந்தே மகிழ்வான்
கண் மடல் மூடிமெய் மலர் சூடி செவி மடல் திறந்திடுவான்
நாதனின் காதை யாவும் கேட்டு விழி மழை சொரிந்திடுவான் ---(மாதவம்)

ராமனை நெஞ்சில் மாமலை கையில் சுமந்திடும் ஜெய ஹனுமான்
பீமனை அள்ளி மார்புடன் சேர்த்து அணைத்திடும் ஜெய ஹனுமான்
சந்தன வாசம் வீசிட எங்கும் வலம் வருவான் ஹனுமான்
நித்திலம் தன்னில் நித்தியம் வாழ்ந்து ஜெயம் தரும் ஜெய ஹனுமான் ---(மாதவம்)

கோமகனாக வாழ்ந்திடும் சீலன் கோயில் நாம் அடைவோம்
கோசலை ராமன் நாமத்தைப்பாடி அவனருள் வேண்டிடுவோம்
வீழ்ச்சியை மாற்றி மீட்சிகள் சேர்க்கும் பாடிடு அவன் மகிமை
வான் மழை போல பூமழை வார்க்கும் மாருதி அவன் கருணை ---(மாதவம்)

நன்றி.. ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்திப்பாமாலை இரட்டைப்பாதை சேகர்

இன்று ஹனுமத் ஜயந்தி

Wednesday, December 13, 2006

திரு.பாபநாசம் சிவன் --தமிழ்த்தியாகய்யா(3)

சிலசமயம் பாடல்கள் பாடியவர்களால் பெருமை பெறும். சில சமயம் படியவர்கள் பாட்டினால் பெருமை பெறுவார்கள்.பாடியவர்களாலும் பாட்டை எழுதியவர்களாலும் பாடல் பெருமை பெறும். அந்த மூன்றாம்வகையைச் சேர்ந்ததுதான் இந்தப் பாடல்.பசுக்களையும்(விலங்கினத்தையும்) குழந்தைகளையும் மயங்கச்செய்யும் கீதம்.மீரா படத்திற்காக திரு பாபநாசம் சிவன் எழுதி,எம்.ஸ் அம்மா அவர்கள் தன் இனிய குரலால் எல்லோரையும் கவர்ந்த பாடல்.இதற்கு இசை அமைத்தவர் திரு ஸ்.வி.வெங்கடராமன் என்று நினைக்கிறேன்.கல்லையும் கனிய வைக்கும் கீதம் உங்களையும் நிச்சியமாக கனியவைக்கும்.எம்.ஸ் அம்மாவின் பிறந்த நாள் அன்று போடவேண்டும் என்று நினைத்திருந்தேன் அன்று வெளியூர் சென்று இருந்த காரணத்தால் முடியவில்லை. காற்றினிலே வரும் கீதம்

Wednesday, December 06, 2006

திரு.பாபநாசம் சிவன் --தமிழ்த்தியாகய்யா--(2)

திரு. பாபநாசம் சிவன் பாடல்கள் எளிய தமிழில் இருந்ததால் எல்லா தரப்பு மக்களையும் சென்று அடைந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை.தமிழ் சினிமா முதலில் பேசாத படமாக இருந்து பின்பு பேசும் படமாக ஆனாலும் அதை காது கொடுத்து கேட்கும் படமாக ஆக்கியவர் திரு.சிவன் அவர்கள்

அவரது பல பாடல்கள் மனதைக்கவர்ந்தாலும் குறிப்பாக இந்தப் பாடல் எல்லோருக்கும் பிடிக்கும்.கண்ணனை வளர்த்த யசோதை என்ன தவம் செய்து இருக்கவேண்டும் என்பதை கொஞ்சி விளையாடும் தமிழில் அவர் வயலின் வித்தகர் லால்குடி திரு.ஜெயராமனுக்கவே எழுதிய பாடல் என்றால் மிகையாகது.இந்தப்பாடல் நடனத்திற்கும் மிகவும் பொருந்தும்.பாடலைப் பற்றி திரு ஜெயராமன் என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்.பின்னர் அவருடைய வயலின் வாசிப்புக்கு இந்தப்பாடலை திருமதி. ச்ரிநிதி சிதம்பரம்(இப்போது ச்ரிநிதி கார்த்திக்)நடனத்தை அழகாக ஆடி இருப்பதையும் பார்க்கலாம்.

ராகம்:--காபி பல்லவி தாளம்:--ஆதி

என்ன தவம் செய்தனை-- யசோதா
எங்கும் நிறை பரபிரும்மம் அம்மா என்று அழைக்க.........என்ன)
அனுபல்லவி


ஈரேழு புவனங்கள் படைத்தவனைக் கையில்
ஏந்திச் சீராட்டி பாலூட்டி தாலாட்ட நீ...............(என்ன)

சரணம்

பிரமனும் இந்திர்னும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய்பொத்திக் கெஞ்சவைத் தாயே.............(என்ன)
சனாகதியர் தவயோகம் செய்து வருந்தி
சாதித்ததை புனிதமாதே எளிதில் பெற................(என்ன)

சரி இப்போது பாட்டை கண்டும் கேட்டும் அனுபவியுங்கள், நாளை அடுத்த பதிவில் சந்திக்கலாம்

Papanasam Sivan: The Tamil Tyagarajar (II)



பாபநாசம் சிவன் -தமிழ்த் தியாகய்யா.

Papanasam Sivan: The Tamil Tyagarajar (I)
தமிழ்த் தியாகய்யா திரு.பாபநாசம் சிவனுடைய பாடல்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.மிக எளிமையான பக்தி பாவம் ததும்பும் பாடலகளைத் தமிழ் உலகுக்கு தந்தவர் அவர்.சினிமாத்துறையிலும் கொடிகட்டிப் பறந்து "மன்மத லீலயை வென்றார் உண்டோ", "ராதே உனக்கு கோபம் ஆகாதடி",போன்ற பாடல்களைத் தந்தவர்.அவரது வரலாறு இன்றைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்புக்கள் அதிகம் இல்லை.அவரைப்பற்றித் சிறிதுதெரிந்து கொள்வோமா.இன்று முதல் பாகம்.

Monday, December 04, 2006

வாழு.....வாழவிடு....


உலகத்தில் மிக வேகமாக அழிந்துவரும் விலங்கினத்தில் புலிதான் முதலிடம் வகிக்கிறது.வெங்கண் சிவந்து வடிவால் முறுக்கி சீறிப்பாயும் இந்தப் புலி இனம் இப்படியே போயிக்கொண்டு இருந்தால் 2020யில் பார்க்கவே முடியாது என்று புலி இயல் வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.
1920களில் ஒரு லக்ஷ்மாக இருந்த இதன் எண்ணிக்கை இப்போது5000 முதல் 7000வரைதான் உள்ளது.முதலில் எட்டுவகை புலிகள் இருந்தது அதில் பாலி,கேப்சிகன்,ஜாவன் வ்கைகள் அறவே அழிந்த நிலையில் பெங்கால்,சைபீரியன்,இந்தோசைனா,சுமத்ரான்,தெற்குசைனா இந்த ஐந்து வகைகளும் வாழ்வதற்குப் போராடிக் கொண்டு இருக்கின்றன
இப்போது இந்தியாவில்600 முதல் 800வரைஎண்ணிக்கையில் புலிகள் இருந்து வருகின்றன.மனிதனின்சந்தோஷத்திற்காகவும்,விளையாட்டிற்காகவும் அதன் தோலுக்கவும் புலிகள் திருட்டுத்தனமாக வேட்டையாடப்படுகின்றன.புலிகளின் உணவுபெரும்பாலும் மான்,காட்டெருமை,மாடு,பன்றிதான்.ஆனால் வயதான வேட்டைக்குச் செல்ல முடியாத புலிகள்தான் மனிதனைத்தின்னும்.புலிகள் மனிதனைகண்டு அஞ்சி ஒடி ஓளிந்து கொள்ளும்.புலியினுடைய தோலை கள்ள மார்கெட்டில் USS$ 10000(Rs.4,50,00)க்கு விற்கப் படுகிறது.

வெள்ளைப் புலிகள் இந்தியாவில் மட்டும்தான் உருவக்கப்படுகின்றன.இயற்கையிலேயே கருப்பு வரிகளும் நீல நிறக்கண்களும் பார்க்க மிக அழகாகவும் அருகில் சென்றால் ஆபத்தை விளைவிக்கும் குணமும் கொண்டவை.தவிர்க்கப்பட்ட இனச்சேர்க்கையின் மூலமாகத்தான் இவைகள் உருவாகின்றன.
இந்த அரிய இனத்தை பாதுகாக்க வேண்டிய முயற்சிகளைச் செய்யுவோம்.இந்த அழகில் புலி இந்தியாவின் தேசிய மிருகம் வேறு.அதென்னவோ தெரியவில்லை நமக்கு தேசிய விலங்கு(புலி)தேசியப் பறவை(மயில்),தேசியத்தந்தை(மஹாத்மா காந்தி)இதெல்லாம் கொல்லுவதற்காத்தான் என்ற எண்ணம். அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு நாமும் வாழ்வோம் புலியையும் வாழவைப்போம்

Thursday, November 16, 2006

நினைத்துப் பார்க்கிறேன்......

இன்றோடு 31 வருடங்கள் முடிவடைந்து விட்டது. இந்த மாதிரியான தினத்தை கொண்டாடும் வழக்கம் இல்லை என்றாலும் நினைத்துப் பார்ப்பதில் சில உண்மைகள் தெரியவருகிறது.
நாம் இதுவரை ஒரு பணம் முதலீடு செய்த பங்குதாரராக மட்டும்தான் இருந்தோம் என்பது.அது மட்டும் இல்லை கூட்டு வியாபாரத்தில் சேர்த்துக் கொண்ட "மைனர்" பங்குதாரர் மாதிரிதான் இருந்தோம் என்பதும் தெரியவருகிறது.அதில்"மைனருக்கு' லாபத்தில் மட்டுமே பங்கு உண்டு,நஷ்டம் வந்தால் அதை மற்ற "மேஜர்' பார்ட்னர்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதுதான் சட்டம்.
அது என்னவோ என்வரை உண்மைதான்.எனக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது இந்த குடும்ப வியாபாரத்தில்.வீட்டை கவனிப்பது,குழந்தைகளை வளர்ப்பது,படிக்க வைப்பது,காலேஜில் சேர்ப்பது எல்லாம் "மேஜர்" பார்ட்னர் வேலைதான். வேலைக்கும் போய்க்கொண்டு, வீட்டயும் கவனித்துக் கொள்வது மிகவும் சிரமமான வேலை.இதில் என் உபஹாரமாக எனக்கு ஐந்துஆக்சிடென்ட்,இரண்டு தடவை இதயக்கோளாறு ஹாஸ்பிடலுக்கும் வீட்டிற்கும் அலைச்சல்,கவலை,எல்லாம் போனஸாகக் கொடுத்ததுதான்.

இதையெல்லாம் பார்க்கும்போது நினைவுக்கு வருவது நம் பாரதியின் கவிதை வரிகள்தான் சில மாற்றங்களுடன்.
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன் வீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்; தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்; மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய் ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப்
பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப் பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய், எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான்.
இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்! கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம், தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்! கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொ ண்டேன்! கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!
இதில் கண்ணனுக்குப் பதிலாக நம்ப 'மேஜர் பார்ட்னர்" பெயரைபோட்டுவிட்டால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்
இந்த நாள் இனிய நாள்தானே.

இந்த நாளுக்காக என்மகனும் மருமகளும் சிங்கப்பூரிலிருந்து வாழ்த்தி அனுப்பித்த விநாயகரைப் பார்த்ததும் எழுந்த நினைவு அலைகள்.......

Wednesday, November 08, 2006

இங்கே... போயிருக்கிறீர்களா...( 6 )





அகத்தியர் அருவி குளியளோடு இந்தப் பதிவுக்கு ஒரு முழுக்கு போட்டுவிடலாம். மறுநாள் காலை 6.00 மணிக்கெல்லாம் எழுந்து நம் கைடு சொல்படி கிளம்பியாகி விட்டது. பஸ் ஸ்டாப்ப்புக்குப் போய் பாபநாசம் பஸ்சைப் பிடித்து அங்கே இறங்கினோம்.மணி 6.30 என்பதால் மலை அருவிக்குப் போக பஸ் வசதி இல்லை. எட்டு மணிக்குத்தான் அடுத்த பஸ் என்றார்கள்.

" சார் நடந்தே போய் விடலாம் ஒரு 1 கி.மீ தான் இருக்கும்'இது கணேஷ்.எனக்கு உடனே மனத்திரையில் வீட்டில் சொல்லி அனுப்பிய அறிவுறைகள் ஞாபகத்துக்கு வந்தது.இதயக்கோளாறு உள்ளதால் மாடி முக்கியமாக மலை ஏறக்கூடாது. சரி வந்தது வரட்டும் என்று அவனுடன் மலை ஏறத்துடங்கினேன். 2 கி. மீ தூரம் அதுவும் ஏற்றம். பாதி தூரம் போவதற்குள் அடைபட்ட ரத்தக்குழாய் வேலையை காட்டத்துடங்கி விட்டது.கணேஷ்க்குத் தெரியாமல் ஒருவாறு பேசாமல் சமாளித்தேன்.

அருவிக்கு போன பிறகுதான் உயிர் வந்தது.பாருங்கள் அருவியின் அழகை.ரம்யமான சுழ்நிலை.அருவியின் அட்டகாசமான ஓசை, குளிர்ச்சி, குரங்குகளின் ஆட்டபாட்டம்."வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும் , மந்தி சிந்தும்கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்" என்ற ராசப்ப கவிராயரின் பாடல்தான் நினைவுக்கு வந்தது. அருமையாக ஒர் மணிநேரக் குளியல்.அருவித்தண்ணீர் மேலே விழும்போது என்ன சுகம் .உடம்பு வலியெல்லாம் போய்விட்டது.கஷ்டப்பட்டு ஏறி வந்ததற்கு நல்ல பலன்.


மற்றொரு படம் ஒரு அதிசயமான படம் ஒரு மரத்தை வெட்டி கருக்கியிருந்தார்கள். அதில் நடுவில் பார்த்தால் பெரிய கல் நடுவில் இருந்தது. எப்படி இந்தக் கல் உள்ளே போயிற்று,எப்படி மரத்துடன் வளர்ந்து மேலே சென்றது . எல்லாமே அதிசியம்தான்.இதுதான் கல்லிடைக்குறுச்சியோ?

தமிரபரணியை இப்போது பாருங்கள். இதுவா பேரிரைச்சலுடன் விழுந்த அருவி,எப்படி இப்பொழுது சமர்த்தாக ஓடுகிறது.இது பாபநாசத்தில் எடுத்தது.

ஊருக்கு வந்து அம்பியின் குடும்பத்திலிருந்து பிரியா விடைபெற்று திரும்பினேன்.என்ன அன்பு என்ன உபசரிப்பு. இத்தனைக்கும் நான் அவர்களுக்கு நன்கு பரிச்சியம் இல்லாதவன்.

திருநெல்வேலி வந்து கணேஷிடம் விடைபெற்று ஊர் திரும்பினேன்.அப்பா கணேஷா நீ நல்லா அமோகமா இருக்கணம். ரயிலிருந்து இறங்கியதிலிருந்து மறுபடி ஏறும் வரை என்னை என் மகனைப்போல் பார்த்துகொண்டான்.

கடைசியாக ஒரு வார்த்தை திருநெல்வேலிகாரர்கள் முதலில் அறிவோடுதான் சமாதானமாகப் பேசுகிறார்கள். அதற்கு சரிபடவில்லை என்றால்தான் அரிவாளோடு பேசுவார்கள் போலும்.அவர்களுடைய உபசரிப்புக்கு நிகரே கிடையாது. முடிந்தவர்கள் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடம். போய்வாருங்கள்.

Monday, November 06, 2006

கார்த்திகேய... காங்கேய... கௌரி...தனயா...


ஷண்முகச்செல்வர் நண்பர் திரு.இராகவன் விருப்பத்திற்கு இணங்க முருகனுக்குகந்த கிருத்திகை தினமான இன்று திரு பாபநாசம் சிவன் அவர்களின் இந்தப்பாடலை இடுகிறேன். தமிழ் கொஞ்சும் இந்தப்பாடலை பிரபலப் படுதியவர் திரு. மதுரை மணி ஐய்யர் அவர்கள். அவர் இந்தப்பாடலை பாடத கச்சேரியே கிடையாது. அதுபோல ரசிகர்கள் மறுமுறையும் அவர்களை இந்தப் பாடலை பாடச்சொல்லாத கச்சேரியே கிடையாது. முருகனை குழந்தையாக பாவித்து திரு சிவன் அவர்கள் அனுபவித்து பாடியது. நாமும் அனுபவிக்கலாமா:-


ராகம்:- தோடி தாளம்- ஆதி

கார்த்திகேய காங்கேய கௌரி தனய
கருணாலய அருள் திருக்....... (கார்த்திகேய)

கீர்த்திமேய தென்பரங்குன்று திருச்
செந்தில் பழனி ஸ்வாமிமலை மேலும் வளர் (கார்த்திகேய)

குன்றுதோரும் அழகர் கோயில் தனிலும்
குஞ்சரியும் குறக்கொடியும் தழுவுதிண்
குன்றம் அனைய ஈராறு தோள்களோடு
குஞ்சரமென உலவும் சரவன்பவ (கார்த்திகேய)

மால்மருக ஷண்முக முருக குஹா
மகபதியும் விதியும் தொழும்
மாதங்க வதன ஸஹோதர அழகா
வேல் மருவும் அமல கரகமலா
குறுநகை தவழ் ஆறுமுகா
விரைவுகொள் மயூரபரி
மேல்வரு குமரா சூரனை ஸமருக்கொள் (கார்த்திகேய)


ஆறு படை வீடுகளயும் ஒரே பாட்டில் கொண்டு வந்து விட்டார்.மகபதியும் விதியும் தொழக்கூடியவன்,மாதங்கனின் சகோதரன்,கையில் வேல்வைத்திருக்கும் அழகன்,குறுநகை தவழும் குழந்தை முகம் கொண்டவன், பக்தர்களைக் காப்பதற்காக மயிலின்மீது விரைவாகக் வரக்கூடியவன் என்றெல்லாம் புகழ்கிறார். அருமையான மனதைக் கவரும் பாட்டு என்பதில் சந்தேகமே கிடையாது இதை ராகவனும் ஒத்துகொள்வார்.

இனி நெய்வேலி திரு சந்தான கோபலன் பாடிய பாட்டைக் கேட்க கிளிக் செயவும்
">

Friday, November 03, 2006

இங்கே... போயிருக்கிறீர்களா...( 5 )


அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து என் மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான்.
நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்குக் கண்கள்அசும்பொழுக நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே
பெருமாளை அருகில் சென்று களியுங்கள்.வண்ணமலர்மாலைகளின் நடுவே மதுர மதுர வேணுகீத மதன சுகுமார நாயகனாக வீற்று இருக்கிறான் நாராயணன்.வெள்ளை மல்லிகை மலர்க்கூட்டத்தின் நடுவே தங்கமென ஜ்வலிக்கும் கருடாழ்வாரைப் பாருங்கள்.இருகைகளாலும் பெருமாளைத் தாங்கிக்கொண்டு முகத்தில் பரிபூரண ஆனாந்தம் பொங்க காட்சிஅளிக்கிறார்.
இந்த ஆனந்தத்திற்கு காரணம் என்னவாக இருக்கலாம் என்பதற்கு ஒரு பட்டி மண்டப தலைப்பு கொடுத்து திரு ஜி.ரா,திரு.ராமநாதன் ஆகிய இருவரையும் ஒரு அணியிலும் ,மற்றொரு அணியில் திரு ஸ்.கெ,மற்றும் கே.ஆர் ஸ் அவர்களையும் வாதிடுமாறு அழைக்கிறேன். தலைப்பு இதுதான். கருடன் முகத்தில் ஆனந்ததிற்கு காரணம் "அகில உலகங்களையும் தங்கி நிற்க்கும் பெருமாளையே நாம் தங்கிக்கொள்ளும் பாக்கியம் கிடைத்ததற்காகவா" அல்லது" ஈசனும், பிரும்மாவும், மற்ற தேவர்களும் வணங்கும் பாதத்தை தன் தலை மீது வைத்துக்கொண்டு சேவைசாதிக்கும் பாக்கியம் கிடைத்ததினாலா". நானே நடுவராக இருந்து கடைசியில் தீர்ப்பு வழங்குகிறேன்.
கண்ணனை கண்ணார கண்டுவிட்டீர்களா.போதுமா முடிந்தால் கண்ணிமைக்காமல் பாருங்கள்.கண்ணிமைத்து காண்பார்தாம் கண் என்ன கண்ணே.........தொடரும்

Thursday, November 02, 2006

இங்கே... போயிருக்கிறீர்களா...( 4 )


கண்டோ ம் கண்டோ ம் கண்டோ ம் கண்ணுக் கினியன கண்டோ ம், தொண்டீர். எல்லீரும் வாரீர் ழுது தொழுதுநின் றார்த்தும், வண்டார் தண்ணந்து ழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல், பண்டான் பாடிநின் றாடிப் பரந்து திரிகின் றனவே.

காண்பதற்கு அரிய சேவை.இதோ வந்து விட்டார் ஆதிவராகஸ்வாமி கருட வாகனத்தில் ஏறிக்கொண்டு தன் பக்தர்களை பார்ப்பதற்கு. கடவுளைப் பார்த்தது எல்லோருக்கும் ஏதவது வேண்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும். எல்லாவற்றையும் துறந்த நம் தியாகராஜஸ்வாமிகளுக்கும் அந்த எண்ணம் வந்ததும் இப்படி வேண்டிக்கொண்டார்: "ஞனமு சகராதா கருட கமன ராதா ஞானமு சகராதா'" கருடனின் மீது எழுந்தருளியிருக்கும் பெருமாளே எனக்கு உன்னைத் தவிர வேறொன்றையும் நினைக்காத ஞானத்தை அருள்வாய்". நாமும் அதையே வேண்டிகொள்ளுவோம். இதோ மல்லாரி மிக அருகில் துல்லியமாகக் கேட்கிறது. திருப்பாதம் தாங்கிகள் அந்த இசைக்கு ஏற்ப ஆடிகொண்டு வருகிறார்கள். அவர்கள் ஆட்டுவிப்பதால் ஆண்டவனும் அதற்கேட்ப ஆடுகிறான். ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். ந்ம்மையெல்லாம் சம்சாரசாகரத்தில் இந்த ஆட்டம் ஆடுவிகின்ற ஆண்டவனயே ஆட்டுவிக்கிறார்கள் என்றால் அவர்கள் என்ன பாக்கியம் செய்தவர்கள். மல்லாரிக்கு ஒரு தனி குணம் உண்டு.அதைகேட்க்கும்போது இசை தெரியாதவர்கள் உடலிலும் தானே வரும் ஆட்டம், அதனால் தானே வரும் இறைவனின் மீது நாட்டம். நாமும் மிக அருகில் சென்று அவனைக் கண்ணாரக் காண்போம் நாளை.

Wednesday, November 01, 2006

இங்கே... போயிருக்கிறீர்களா... (3)

வீட்டிற்கு சென்று நல்ல சாப்பாடு அதுவும் திருநெல்வேலிச் சமையல் ருசிக்கு கேட்கவேண்டுமா?ஒரு பிடி பிடித்தேன்.அம்பியின் பெற்றோர்களின் உபசரிப்பு அபாரம்.பிறகு என்ன உண்ட களைப்பு உறக்கம்தான்.நான்கு மணிக்கு எழுந்தவுடன் " சார் தமிரபரணி ஆற்றுக்குப் போலாமா" என்றான் கணேஷ். சரி என்று கையில் துண்டை எடுதுக்கொண்டு கிளம்பி ஆற்றுக்குப் போனோம். மாலை வெய்யிலில் தமிரபரணி தங்க பரணியாக ஜொலித்துக்கொண்டு இருந்தது.என்ன ஒரு ரம்யமான காட்சி.ஆற்றுக்கு இரு புறமும் வயல்வெளிகள். இந்தப்பக்கம் கல்லிடைக்குறிச்சி(கொத்ஸ் திருப்தியா) அந்தப்பக்கம் அம்பாசமுத்ரம். ஆற்றின் நடுவே இருந்த பாறைகளில் முட்டி மோதிக்கொண்டு நிர்மலமான தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது.ஒரு பக்கெட் உப்புத்தண்ணீரில் அவசர அவசரமாக குளியலை முடிதுக்கொள்ளும் எனக்கு இது அதிசயமாக இருந்தது. "சார் பார்த்து இறங்குங்கோ பாறை இருக்கும்" என்று எச்சரிக்கை கொடுத்தானே தவிர மற்றொன்றைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை ஜிலு ஜிலு என்ற தண்ணீரில் "பார்த்து' இறங்கி சுகமான குளியல்.உடம்புக்கு எதமாக இருந்தது.முங்கி குளித்தபோது கணேஷ் சொல்லாதவர் வந்து கால்களில் கொத்த ஆரம்பித்தார்.சிறு சிறு மீன்கள் அங்கும் இங்கும் பாய்ந்து பாய்ந்து கொத்தி உடம்பில் சிலிர்ப்பை ஏற்படித்தன.இருந்தாலும் குளியல் ஆனாந்தமாகத்தான் இருந்தது.இருட்டாகிவிட்டது என்று அரைகுறை மனத்துடன் குளியலை முடித்துக்கொண்டு கரை ஏறி போகும் வழியில் இருந்த சங்கரமடத்தில் ஸ்வாமி தரிசனம் செய்து கொண்டு(நேரமின்மை காரணமாக கணேஷின் மற்ற மண்டகபடிகளை விவரிக்காமல்) வீட்டிற்க்ச் சென்று இரவு கருட சேவைக்கு ஆயுத்தமானோம். இரவு 11 மணிக்குத்தான் மாடவீதிக்குள் பெருமாள் அருள்வார் என்ற செய்தியும் கிடைதது.

இரவு 11.00 மணிக்கு மாடவீதிக்கு வந்தோம். நல்ல கூட்டமாக இருந்தது.சுற்றி இருக்கும் இடங்களில் இருந்து கருடசேவையைப் பார்ப்பதற்காக வந்த கூட்டம்.எல்லார் கைகளிலும் தேங்காய், பழம், பூ இவைகளைத் தட்டில் வைத்துக் கொண்டு காத்திருந்தனர்.தெருவின் மூலையில் சலசலப்பு.பார்த்தால் நாதஸ்வர கோஷ்டியினர் வசித்துக்கொண்டு வந்து கொண்டு இருந்தனர்.அதுவும் "மல்லாரி'வெளுத்துவாங்கிக்கொண்டு இருந்தார்கள்.மல்லாரி ஸ்வாமி புறப்பாட்டுக்காகவே ஏற்பட்ட ராகம்.அதுவும் இரவு நேரத்தில் நிசப்த்தமான சுழ்நிலையில் கேட்கவேண்டும்.சொர்க்கலோகமே இங்கே வந்துவிடும். திடீரென்று ஒரு வெளிச்சம் தெரு மூலையில் ஆதி வராஹஸ்வாமி கருட வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். பார்க்க வேண்டுமா .. நாளைவரை காத்திருங்கள் ......

Monday, October 30, 2006

இங்கே... போயிருக்கிறீர்களா... (2).

"ஏம்பா கணேஷ் வீட்டுக்கு எந்தப்பக்கம் போனோம்" என்று திரும்பிப் பார்த்தால் நம்ப ஆளுக்கு பயங்கர வரவேற்பு." ஹாய் கணேஷ் எப்போ வந்தே" என்று பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண் கணேஸனை கலக்கிக்கொண்டு இருந்தாள். நான் ஓரமாக முன் கை நீண்டால்தான் முழங்கை நீளமுடியும் என்று நின்றேன். கணேஷும் சீக்கிரமே கணக்கை முடித்துக்கொண்டு ஒரு ஆட்டோ பார்த்து ஊருக்குள் போனோம் நானும் அவனும். போகும் வழியெல்லாம் கான்கிரீட் ரோடு போட்டு இரண்டு பக்கமும் ஒரே மாதிரி வீடுகள்.நேராக வீட்டிற்கு சென்றோம்.
வீட்டில் அம்பியின் அப்பாவும் அம்மாவும் நல்ல வரவேற்பு,என்னை அறிமுகபடுத்திக்கொள்ளலாம் என்று நினைத்தால் ஏற்கனவே அம்பி என்னைப்பற்றிய எல்லாவிவரங்களையும் சொல்லியிருந்தான்.குளித்துவிட்டு,டிபன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு கிளம்பினோம்.கல்லிடைகுரிச்சிக்கு வந்தேன் என்று சொன்னேனே ஒழிய எதற்கு என்று சொல்லவே இல்லயே. புராட்டாசி மாதம் வரும் எல்லா சனிக்கிழமைகளிலும் அங்குள்ள ஆதி வராக ஸ்வாமிக்கு கருடோத்ஸ்வம் மிக விசேஷமாக நடக்கும். நாங்கள் சென்ற அன்று திருநெல்வேலியில் உள்ள ஒரு பிரபல சிமிட் கம்பெனியின் மண்டகப்படி.
கோவிலுக்குப் போகும் வழியெல்லாம் கணேஷுக்கு ஒவ்வெரு வீட்டு வாசல் படியிலும் மண்டகப்படி.தேங்கா உடைத்து கற்பூரம் காட்டாத குறைதான்.கணேசனும் ஒவ்வொரு வீட்டு வாசல் படியுலும் பஞ்சாயித்து போர்ட் குப்பைவண்டி மாடு தானாகவே நின்னு போவது மாதிரி குசலம் விசரித்துக்கொண்டு வந்தான்,"எலே கணேஷு எப்படா வந்தே,பங்களுர்லே படிக்கிறயா?இல்லே வேலைக்கு போறயா? இப்படியெல்லாம் விசரித்தது யார் என்று நினைக்கிறீர்கள்,பத்துவயது பையன்,வயசுப்பொண்கள்,மாமக்கள்,80 வயது பாட்டிகள்,கணேசனுக்கும் பெருமை வேலைக்குச் சேர்ந்தபின் முதல்தடைவையாக ஊருக்கு வந்திருக்கிறான்.சயங்காலம் நடக்கப்போகும் கருடசேவைக்கு இது ஒரு 'கர்டன் ரெய்சர்' மாதிரி இருந்தது.
ஒரு வழியாகக் கோவிலுக்குள் சென்றோம். அங்கு நுழைந்தவுடனே ஒரு 10/15 பெருசுகள் கணேசனை கட்டி அணைத்துகொண்ட காட்சி கண்கொள்ளா காட்சி. ஸ்வாமிக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து கற்பூரம் காண்பித்தார்கள்.நல்ல தரிசனம்.வெளியே வந்து பிரசாதம் வாங்கிக்கொண்டு திரும்பிப் பார்த்தால் நம்ம ஆளை மறுபடியும் காணவில்லை. பார்த்தால் அங்கே ஒரு பெண் ஆஞ்சநேயரை சுற்றிக்கொண்டு இருந்தாள். நம்ம ஆள் அவளைச் சுற்றிக்கொண்டு இருந்தான் ."சார் என்னோட காலேஜிலே படித்தவள்" என்றான்."சரி.... சரி".... என்றேன். முன்பு சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன் "அம்பியோட தம்பியேதான் இவன் சந்தேகமே இல்லை".
திரும்பிப் போகும்போதும் கிட்டதட்டே அதே மண்டகப்படிதான் வீடு போய் சேரும்வரை. என்ன இந்தத் தடவை எல்லாம் அவன் வயசுப் பசங்கள்."எலே மாப்ளே எங்கேடா வேலை...என்னா சம்பளம் ..இத்யாதி இத்யாதி .....தொடரும்

Sunday, October 29, 2006

இங்கே... போயிருக்கிறீர்களா....

எனது அத்யந்த சிஷ்யனும், எனது அன்புக்கும் ஆசிக்கும் உரிய,பால்வடியும் முகம் கொண்ட அம்பியின் அழைப்பை ஏற்று கல்லிடகுறிச்சிக்கு விரைந்தேன் இந்த மாத தொடக்கத்தில்.மேலே படியுங்கள்........

திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷ்னலில் ஒருவர் ஸெல்போனில் பேசிக்கொண்டு இருக்கிறார்"டி.ஆர்.சி. சார் எங்கேஇருக்கீங்க? பின்னால் ஒருவர் அவர் தோளைத்தட்டி "கணேஷ் இப்படித் திரும்பி பார் இங்கேதான் இருக்கேன்" "சார் நீங்க இங்கேயா இருக்கீங்க,என் பஸ் கொஞ்சம் லேட் வாங்க போவோம் கல்லிடைகுறிச்சிக்கி"

கணேசனைப் பற்றி சில வார்த்தை. களைததும்பும் கள்ளம் கபடு இல்லாத முகம்,அபரிமிகுந்தபக்தி,அதனால் விளைந்த பணிவு,எம்பத்திஐந்து வயது பெரியவர் முதல் எட்டுமாத குழந்தை வரை எல்லோராலும் விரும்பப்படும் பெற்றோரிடத்தில் மரியதையும் அன்பும் உள்ள நல்ல பையன்.இத்தனை நல்ல குணங்கள் இருந்தாலும் குறை ஒன்றுமில்லை. அம்பியின் தம்பி மாதிரியே இல்லை
ஊருக்கு வெளியே இருந்த புதுப் பஸ்டாண்டுக்கு வந்து பாபநாசம் செல்லும் பஸ்சில் ஏறி உட்கார்ந்து கொண்டோம். வழிநெடுகிலும் பச்சைப்பசேலென்று நெல் வயல்களும்,வாழைத்தோட்டங்களும்,மலையும் மலைச்சார்ந்த இடமும் கண்ணுக்கு ரம்யமாக இருந்தது.சிமிட்டுச்சிறையில் இருந்த என்போன்றவர்களுக்கு ஏதோ பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையைப் பார்த்தால் போலிருந்தது.

"சார் ஊர் வந்தாச்சு இறங்குங்கோ" கணேசன் என்னை மீட்டுக்கொண்டு வந்தான்.கல்லிடையில் முதல் முதலாக கால் வைத்தேன்.அந்த ஊரைப்பற்றி ஒன்றுமே தெரியாது ஏதோ அப்பளாத்துக்கு பேர்போனது என்றுதான் நினைத்தேன்.நான் நினைத்தெல்லாம் தவறு என்று தெரிய ரெண்டுநாள் ஆயிற்று.மெதுவாக ஊருக்குள் செல்ல ஆரம்பித்தோம்......தொடரும்

Friday, October 27, 2006

கோபுர தரிசனம்..... கோடி புண்ணியம்...


தமிழ்த் தியாகய்யா திரு.பாபநாசம் சிவனுடைய பாடல்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.மிக எளிமையான பக்தி பாவம் ததும்பும் பாடலகளைத் தமிழ் உலகுக்கு தந்தவர் அவர்.சினிமாத்துறையிலும் கொடிகட்டிப் பறந்து "மன்மத லீலயை வென்றார் உண்டோ", "ராதே உனக்கு கோபம் ஆகாதடி",போன்ற பாடல்களைத் தந்தவர்.அவர் எழுதிய பாடல்கள் பலவற்றில் எனக்கு பிடித்தபாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று.

ராகம்= ச்ரிரஜ்ஜனி

காணவேண்டாமோ இரு கண்ணிருக்கும் போதே ஐய்யனின் விண்ணுயர் கோபுரம்......(காண)

வீணில் உலகைச் சுற்றிச் சுற்றி வந்தால் மேதினி போற்றும் சிதம்பர தேவனை.....(காண)

வைய்யத்திலே கருப்பையுள்ளே கிடந்து நைய்யப் பிறாவாமல் ஐயன் திரு நடனம்.....(காண)

ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக் கூட்டிலிருந்து உயிர் ஒட்டம் பிடிக்கும் முன்..... (காண)

இந்தப் பாடலின் ஒலி வடிவம் கேட்க கிளிக் செய்யவும் இங்கே">

Saturday, September 30, 2006

வாணி.... வாகதீஸ்வரி...வரம் அருள்வாய்...


வெள்ளைக் கமலத் திலே-அவள்
வீற்றிருப் பாள்,புக ழேற்றிருப் பாள்,கொள்ளைக் கனியிசை தான்-நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,கள்ளைக் கடலமு தை-நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொல வேபிள்ளைப் பருவத் திலே-எனைப்
பேணவந் தாளருள் பூணவந்தாள்.


வேதத் திருவிழி யாள்,-அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,சீதக் கதிர்மதி யே-நுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்,வாதத் தருக்க மெனுஞ்-செவி
வாய்ந்ததற் றுணிவெனுந் தோடணிந் தாள்,போதமென் நாசியி னாள்,-நலம்
பொங்கு பல்சாத்திர வாயுடை யாள்.


கற்பனைத் தேனித ழாள்-சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையி னாள்,சிற்ப முதற்கலை கள்-பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள்,சொற்படு நயமறி வார்-இசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார்விற்பனத் தமிழ்ப்புல வோர்-அந்த
மேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள்.


வாணியைச் சரண்புகுந் தேன்;-அருள்
வாக்களிப் பாளெனத் திடமிகுந் தேன்;பேணிய பெருந்தவத் தாள்;-நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்,பூணியல் மார்பகத் தாள்-ஐவர்
பூவை,திரௌபதி புகழ்க் கதையைமாணியல் தமிழ்ப்பாட்டால்-நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே!

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்; கொள்ளை யின்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்! உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்; கள்ள மற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத் துட்பொருளாவாள். (வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள், மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்; கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள், கோத கன்ற தொழிலுடைத் தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள் இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)

வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள் பாட்டைகேட்க செல்லவும் இங்கே

Thursday, September 28, 2006

சங்கீத... ஞானமும்... பக்தியும்...



சங்கீத உலகத்தில் திரு. தியாகராஜஸ்வாமிகளைத் தெரியாதவர் இருக்கமுடியாது.ராமபிரான்மீதும் சீதாதேவியின்மீதும் அளவற்றபக்திகொண்டு அதன் பயனாக எளிமையான பாடல்களை சுந்தரத்தெலுங்கில் பாடியவர்.நமக்கு அவை பாடல்களாகத் தோன்றினாலும் அவை உண்மையில் அவருக்கும் ராமருக்கும் இடையே நடந்த உரையாடல்கள்.காசியில் மரிப்பவர்களின் காதில் சிவபெருமான் ராம நாமத்தைச் சொல்லி அவர்களை சொர்கத்திற்கு அழைத்துச்செல்வதாக புராணங்கள் கூறுகின்றன.
அதேபோல், நமது தியாகராஜரும் திருவய்யாற்றில் உள்ள ஐய்யாறாப்பன் என்கிற பிரணதார்த்திஹரன்,அறம்வளர்த்த நாயகி என்கிற தர்மஸம்வர்த்தனி ஆலயத்தில் சிவன் சந்நிதியில் ஒரு கோடி ராமஜபம் செய்து சித்தி பெற்றவர்.
பல வருடங்களக சங்கீதத்தை கேட்டு அதனால் விளைந்த கேள்வி ஞானத்தினால் சில பாடல்களுக்கு விளக்கம் சொல்லாம் என்று முயற்சிக்கிறேன்.இடைஇடையே பத்திராசல ராமதாசர்,அருணாசலக்கவிராயார்,அருணகிரியார் போன்றவர்களும் ராமனை எப்படி அனுபவித்தார்கள் என்ற ஒப்பு நோக்குதலையும் அளிக்கப்படும்.
நண்பர்கள் தங்களது கருத்துக்களையும்,குறைகளையும்,கிண்டல்களையும்,ஆப்புகளையும் வழக்கம் போல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முழுமுதற்க்கடவுளாம்,விநாயகனை தொழுது, வணங்கி ஆரம்பம்.

ராகம்; சௌராஷ்டிரம் ஸ்ரி கணபதினி

ஸ்ரி கணபதினி ஸேவிம்பராரே
ச்ரித மான்வுலாரா (ஸ்ரி)

வக்கதிபதி ஸுபூஜல் ஜேகொனி
பாக நடிம்புசுகொனு வெடலின் (ஸ்ரி)

பனஸ நாரிகேளாதி ஜம்பூ
பலமுலனாரகிஞ்சி
கனதரம்புகனு மஹிபை பதமுலு
கல்லு கல்லன நுஞ்சி
அனயமு ச்ரி ஹரி சரண்யுகமுலனு
ஹிருதயாம்புஜமுன நுஞ்சி
வினயமுனனு த்யாகராஜ வினுதுடு
விவதகதுல தித்தளங்குமனி வெடலின (ஸ்ரி)

இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நல்ல மனிதர்களே வரங்களை அள்ளித்தரும்
கணபதியை வணங்கிச்செல்ல வாருங்கள்

வாக்குக்கு அதிபதியான ஸரஸ்வதியின் கணவரான பிரும்மாவினாலும் மற்ற தேவர்களாலும் மிக நேர்த்தியகச் செய்யப்பட்ட பூஜையை ஏற்றுக்கொண்டு அதனால் உண்டாகிய சந்தோஷத்தால் மனமுவந்து தானே அழகாக நடனம் ஆடிக்கொண்டுவரும் நர்தன கணபதியை வணங்குவோம் வாருங்கள்


எளியதகவும் எங்கும் சிரமமில்லாமலும் கிடைக்ககூடிய பலாக்காய், தேங்காய்,நாகப்பழம் போன்றவற்றை அமுதமான உணவாகக்கொண்டும்,இந்தப்புண்ணிய பூமியின் மீது கால்களில் உள்ள சலங்கைகள் "ஜல் ஜல்" என்று ஸ்ப்தம் செய்ய நடனமாடிக்கொண்டும் அல்லும் பகலும் அனவரதமும் சரணாகதவத்சலனான மால்மருகனான முருகனின் மாமனாகிய மஹா விஷ்ணுவின் பதாரவிந்தங்களை தன்னுடைய ஹிருதயத்தில் வைத்துக்கொண்டும்,மிக விநயமுள்ள இந்த தியாகராஜனால் வணங்கப்படிகின்றவரும்,விதவிதமான தாளகதிகளுக்கு ஏற்ப "தித்தளாங்கு" என மலர்ந்தமுகத்துடன் ஆடிக்கொண்டு வரும்
அந்த கண்பதியை ஸேவிப்போம் வாருங்கள் நல்ல மனிதர்களே.


தியாகராஜரின் அழைப்பை ஏற்று வாருங்கள்! வணங்குவோம் கணபதியை! .


பாடலைக் கேட்க இங்கே செல்லவும்

Tuesday, September 26, 2006

அவனிடம் இல்லாதது... நம்மால் அவனுக்கு தரமுடிந்தது...

ஓர் அடியார் ஆண்டவனைப் பார்க்க வருகிறார்.பெரிய மனிதர்களை பார்க்கப் போகும்போது ஏதாவது கொடுக்க வேண்டுமே! என்ன கொடுக்கலாம் என்று யோஜனை. கோவிந்தா நீ இருப்பதோ பாற்கடல் என்னும் ரத்னாகரம் அதிலில்லாத மாணிக்கமே கிடையாது. சரி பக்கத்தில் பார்த்தால் சாட்சாத் மஹாலக்ஷிமி அமர்ந்து இருக்கிறாள் அப்படி இருக்கும் போது வேறு செல்வம் எது வேண்டுமுனக்கு. யோஜித்து கடைசியில் சொல்லுகிறார்அப்பா உன்னிடத்தில் இல்லாதது ஒன்று இருக்கிறது.என்ன தெரியுமா ? உன்னுடைய மனசு இருக்கு பாரு அது தான் உன்னிடத்தில் கிடையாது. ஏன் தெரியுமா அதைத்தான் நீ அடியார்கள் மனத்தில் வைத்துவிட்டாயே. நீயே சொல்லியிருக்கிறாய் நான் வைகுண்டத்தில் வசிப்பதில்லை. நான் வசிப்பது யோகிகளின் ஹிருதயத்தில்தான் என்று.ஆகவே அங்கே ஒரு காலி இடமும் உனக்கு தேவையும் இருக்கிறது.ஆகையால் இதோ என் ஹிருதயத்தை உனக்கு அர்பணிக்கிறேன் எடுத்துக்கொண்டு என்னை உன்னுடையவனாக்கு.இதை ஒரு நண்பரின் பதிவில் பின்னுட்டமாக இட்டிருந்தேன். பிறகு ஏன் அதையேபதிவாகப் போட்டு உங்களிடமிருந்து (புண்ணியத்தை) வாங்கிக்கட்டிக்கொண்டால் என்ன என்று தோன்றியது

Friday, September 22, 2006

உயிர்கள் இடத்தில் அன்பு வேணும் இது வாழும் முறையடி பாப்பா

தோற்றம் 10/12/1995 மறைவு16/09/2004
அன்று மாலை எங்கள் வீட்டுக்கு அவள் புதிய வரவு.சிறிய கண்ணை சிமிட்டிக்கொண்டு பயத்துடன் எங்களை பரிதாபாமாக பார்த்தது.அன்றிலிருந்து அவள் எங்கள் குடும்பத்தில் ஒருவராகி விட்டாள்.என் மூன்று குழந்தைகளுக்கும் அவளோடு விளையாடுவதும்,போஷிப்பதும்தான் முக்கிய வேலையாகி விட்டது, அதிலும் என் மூத்த மகனுக்கு அதுவேதான் உலகம் என்று ஆகிவிட்டது. அவளுக்கு டெடி என்று பெயர்வைத்தோம்.அவளும் அவர்களுக்கு சமானமாக விளையாடும்.
ஒரு வருடத்தில் நன்றாக வளர்ந்து விட்டாள்,புதிய வரவுகளுக்கு சிம்ம சொப்பனமாகிவிட்டாள்.இருந்தாலும் எங்களுக்கு, காவல் காப்பாது,பேப்பர் கொண்டு தருவது போன்ற சிறுவேலைகளை செய்துவிட்டு பிஸ்கெட்டுக்காக எங்கள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருப்பாள்.தரவில்லையென்றால் அதிகாரத்தோடு கேட்டு வங்கிக்கொள்ளுவாள். சொந்தப் பெண் போலவே அதற்கும் பிரசவம் பார்த்து அதன் 9 குட்டிகளையும் காலேஜில் முக்கிய பரிக்ஷை இருந்தாலும் மிக நேர்த்தியாகப் பார்த்துக்கொண்டான் என் மகன்.அதன் குட்டிகளை பிரிய மனமில்லாமல் நல்ல ஆளாகப் பார்த்து தானம் செய்தான்.
வாடகை வீட்டில் இருந்ததால் சில சமயம் வீட்டு உரிமையாளருக்கும் எங்களுக்கும் சிக்கல் வந்தது.நாங்களும் வீடு மாறிக்கொண்டே இருந்தோம் அவளும் எங்களுடன் வந்து கொண்டே இருந்தாள் நாங்களும் அவளுக்காக சில தியாகங்களைச்செய்ய வேண்டியதாயிற்று. குடும்பத்தில் எல்லொரும் ஒரே சமயத்தில் வேளியே போகமாட்டோம்.அப்படியே போனாலும் மாலை சீக்கிரமெ வந்துவிடுவோம். ஆனால் இதுஎல்லாம் அவள் எங்களிடம் காட்டிய அன்பிற்கும் பாசத்திற்கும் ஈடுஇணை இல்லாதது. அலுவல் காரணமாக இரவு 3 மணிக்கும் 4 மணிக்கும் வீடு திரும்பினாலும் வாசலிலேயே காத்துக்கொண்டு இருப்பாள்.விடுமுறை வந்து விட்டால் டெல்லி,மும்பையிலிருந்து அவளுடன் விளையாட குழந்தைகள் கூடிவிடுவார்கள்.
இப்படி அவள் எங்களுடன் ஒருமித்து இருந்தபோது திடீரென்று ஒரு நாள் மாலை எனக்கு வீட்டிலிருந்து போன் "அப்பா டெடிக்கு உடம்பு சரியில்லை என்னமோ பன்னறது சீக்கிரம் வா".மிகமுக்கிய மீட்டிங்கில் இருந்த நான் 8 மணிக்குதான் போக முடிந்தது அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.நீண்ட நாள்களுக்கு பிறகு நான் வாய் விட்டு ஓ என்று கதறினேன்.,என் குடும்பத்தாரும் அழுதனர்.அவளூடைய இறுதியாத்திரையை முடித்துவிட்டு கனத்த மனத்துடன் வீடு திரும்பினோம். சிங்கபூரிலிருந்த என் மகனை தேற்ற முடியவில்லை.
எனக்கு அன்பு ,பாசம்,விஸ்வாசம் இவைகள் என்னவென்று போதிப்பதாவதற்க்காவே என்னுடன் 8 வருடங்கள் இருந்து விட்டுச் சென்றதோ?இரண்டு வருடங்கள் ஆனாலும் மறக்க முடியவில்லை.டெடி ஆன்மா சாந்தி அடையட்டும்.

Saturday, September 16, 2006

மஹாகவி காளிதாசன்

விதியை.... மதியால்..வெல்லலாம்



காளிதாசனுக்கு அறிமுகம் தேவையில்லை.உபமான..உபமேயத்திற்கு அவன் தான் சக்ரவர்த்தி.உபமான--உபமேயம் என்பது தெரியாத விஷயத்தை தெரிந்த விஷயத்தின் மூலமாக தெரிந்து கொள்வது. காளிதாசன் மீதும் அவனது புலமைமீதும் எல்லா கவிகளுக்கும் பொறாமை,அவனைபழிவாங்குவதற்கு நேரம் பார்த்துக்கொண்டு இருந்தனர். மகாராஜாவிற்கு குழந்தை பிறந்.தது. எல்லோரும் குழ்ந்தயையும் ராஜனையும் பாடி பரிசுபெற்றுச் செல்வது வழக்கம். எல்லாக்கவிகளும் ஒன்றுகூடி சதி செய்து காளிதாசனை பழிவாங்க முடிவு செய்தனர்.
மன்னருடைய குழந்தை மன்னரைவிட புத்திசாலியா என்று கேட்கவேண்டும்.காளிதசன் ஆம் என்ற முறையில் உபமானம் சொன்னாலும்,இல்லை என்ற முறையில் சொன்னாலும் ராஜனையோ அல்லது ரஜகுமரனையொ பழித்துப்பேசிய ராஜ குற்றத்துக்கு ஆளாகவேண்டும்.அரசனிடமிருந்து நிச்சயம் தண்டனை கிடைக்கும்
காளிதாசன் முறை வந்தது. மஹாரஜாவும் காளிதாசனை பார்த்துக்கேட்டான் "என் இனிய நண்பரே என்குழந்தை எப்படி இருக்கிறது" என்று கூறி ஆசிவழங்கச்சொன்னான். காளிதேவியின் அருளால் சதியைஉணர்ந்த காளிதாசன் சொன்னான்.
"தீப இப ப்ரதீபாது" அரசே குழந்தை எப்படி இருக்கிறான் தெரியுமா ஒரு விளக்கிலிருந்து மற்றொரு விளக்கை ஏற்றிவைத்தால் ஒளி எப்படி ஒரே மாதிரி ப்ரகாசமாக இருக்குமோ அது போலத்தான் இருக்கிறான் என்றான். கவிங்ஞர்கள் வாயடைத்து நிற்க காளிதாசனுக்கு அரசன் நிறைய வெகுமதி அளித்தான்

கொசுறு

ஐயர்களுக்கும் நாயக்கர்களுக்கும் எப்போதும் எதாவது ஒரு கச்சேரியில் (கோர்ட்டில்)சண்டையும் வழக்கும் நடந்து கொண்டு இருக்கும் 1960 களில்.ஆனால் எனக்கு தெரிந்தவரை ஒரே ஒரு கச்சேரியில் மட்டும் இருவரும் சமாதானமாக சண்டையில்லாமல் .கணக்கு வழக்குகள் சரியாக இருந்து பரிமளிக்கச்செய்தனர். அது எந்த கச்சேரி தெரியுமா.?
இந்த சங்கீத கச்சேரிதான்.
மதுரை மணி ஐயர்---வாய்ப்பாட்டு
கோவிந்தசாமி நாயக்கர்---வயலின்

Saturday, September 02, 2006

சங்கீத.... ஜாதி....முல்லை(3)

விடிய..... விடிய.....இராமாயணம் ....
இந்த வருஷம் ராமநவமிக்கு அந்த பெரிய வித்வானின் கதாகாலட்சேஷபம் என்று சங்கீத சபை முடிவெடுத்தது.அந்த ஊர் பெரிய மனிதரும் செல்வந்தருமான சபைத்தலைவர் தாமாகவே முன்வந்து முழுச்செலவையும் ஏற்றுக்கொண்டார்.மொத்தம் ஒன்பது நாள் இராமாயணம் விரிவாக சொல்ல ஒத்துக்கொண்டார்.
நாளும் வந்தது. பாகவதரும் வந்து சேர்ந்தார்.அவருக்கு எல்லாரையும் அறிமுகம் செய்து முக்கியமாக சபைத்தலைவரையும் அவரது பெரிய மனதையும், தாராளகுணத்தையும்பற்றி எடுத்துச் சொன்னார்கள். பாகவதரும் தலைவரை மெச்சி அவர் ஒன்பது நாளும் வரவேண்டும் என்று விண்ணப்பித்தார்.தலைவரும் தானும் தன் மனைவியும் 9 நாளும் வருவதாகச் சொன்னார்.
முதல்நாள் மாலை நல்ல கூட்டம். தலைவரும் மனைவி சகிதம் 6.30 வந்து முதல் வரிசையில் நடுவில் அமர்ந்து கொண்டார்.பாகவதர் இராமாயண்த்தை ஆரம்பித்து விமரிசையாக பிரசங்கம் செய்தார். கூட்டமும் அவ்வப்போது கரகோஷத்தையும் அளித்தது. தலைவரும் ஒரு வினாடிகூட விரயம் செய்யாமல் முழுவதும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு கதையை கேட்டுக்கொண்டு வந்தார்.இப்படியே எட்டு நாட்கள் கதை விமரிசையாக சென்றது.தலைவரும் தம்பதி சமேதராய் தினமும் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை உன்னிப்பாக கேட்டுவந்தார்.
ஒன்பதாம் நாள் வந்தது. அன்றுதான் கடைசிதினம்.பாகவதரும் பட்டாபிஷேகத்தோடு கதையை முடித்தார்.எல்லோரும் பாகவதரை புகழ்ந்து பேசினார்கள். பாகவதரும் தன் பங்குக்கு இந்த 9 நாட்கள் சொன்ன கதையில் யாருக்கவது ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என்று சொன்னார்.
நமது தலைவர் உடனே மெதுவாக எழுந்து பவ்யமாக "அய்யா நான் ஒரு சிறு சந்தேகம் கேட்கலாமா" என்றார்.பாகவதரும் மிகவும் சந்தோஷமடைந்து சொன்னார்"யார் கேட்டாலும் சொல்லுவேன் அதுவும் நீங்கள் தினமும் ஆரம்பமுதல் கடைசிவரை 9 நாளும் வந்திருந்து ரொம்ப சிரத்தையோடு கேட்டு இருக்கீங்க உங்களுக்கு தெளியவைப்பதை விட வேறு நல்ல காரியம் உண்டா" அப்படின்னார்.தலைவர் கேட்டார் "இத்தனை நாளா கேட்ட ராமாயணத்திலே ஒரே ஒரு சந்தேகம்தான். இதிலே ராமன் ராட்சஷனா?இல்லை ராவணன் ராட்சஷனா? அது ஒன்னுதான் புரியலை." பாகவதர் இதைக் கேட்டவுடன் மயக்கம் போட்டு விழாத குறைதான், இருந்தாலும் சாமாளித்துக்கொண்டு கூறினார் "ராமாயணத்திலே ராமரும் ராட்சஷன் இல்லை,ராவணனும் ராட்சஷன் இல்லை. இத்தனை நாளும் உங்களுக்கு ராமாயணம் சொன்னேன் பாருங்கோ நான் தான் ராட்சஷன்"

கொசுறு
அரசியல்வாதிக்கு என்ன ராகம் பிடிக்கும்.இந்த இரண்டு ராகமும் சேர்ந்தது .
நாட்டை, சுருட்டி

Wednesday, August 23, 2006

சும்மா இருப்பதே சுகம்

அருணகிரியாருக்கு முருகன் உபதேசம் செய்ததுமாதிரியாக இருக்கு என்று
எண்ணவேண்டாம்.அதெல்லாம் திரு.ஜி.ராகவன்,திரு.ஸ்.கே மற்றும்திரு.ராமநாதன் பார்த்துக்கொள்வார்கள்.கீதா மேடம் சொன்ன மாதிரி நம்மாலே சாதாரண பதிவே போடமுடியாது. அண்மையில் மறைந்த ஷெனாய் மாமேதை தன்னுடைய தொன்னுறாவது வயதில் மிகச்சிறந்த கச்சேரியை நமது பாரளுமன்றத்தில் நிகழ்தினார்.ஆனால் இதெல்லாம் சின்ன பொண்ணுக்கு தெரிய வாய்ப்பில்லை.
மாலை நேரம் யாரோ கொடுத்த கோகுலாஷ்டமி சீடை,முருக்கு,தட்டை ஆகியவற்றை நொருக்கு தீனியாக தின்று கொண்டிருந்தேன். (விஜிக்கு படிக்கவே கஷ்டமாக இருக்கும்) ஏதோ சண்டை போடுகிறமாதிரி கேட்டது.சரி நானும் இது ஏதோ அம்பி கீதா சண்டை என நினைத்தேன்.ஆனால் இது வேறு சண்டை. பேச்சு சத்தம் கேட்டது. மிக கவனமாக உற்றுக்கேட்டேன்.சத்தம் என் வாயிலிருந்துதான் கேட்டது.என் கவனம் அதில் ஈடுபட்டது
என் நாக்கிற்க்கும் பல்லுக்கும்தான் ஏதோ வாக்குவாதம். நாக்கிற்கு எப்பொழுதுமே கொஞ்சம் கர்வம் ஜாஸ்தி.32 பல்லும் அதற்கு வேலைக்காரன் என்ற நினைப்பு.சாப்பிடும் வகைகளை நன்றாக அரைத்துக் கொடுக்க வேண்டியது மட்டும்தான் அதன் வேலை, ஆனால் ருசி மாட்டும்தனக்குதான் சொந்தம் என்ற கர்வம்.இனி சண்டையை கேட்போமா.
நாக்கு:- பற்களே உங்களுக்கு மிக்க நன்றி.இந்த சீடை முருக்கு இவைகளை நன்றாக அரைத்து கொடுத்தீர்களே. அதனால்தான் ருசி மிகவும் அதிகமாக இருக்கிறது.ஆனால் அது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.அந்த பாக்கியம்தான் உங்களுக்கு கிடையாதே. கடவுள் கொடுக்கவில்லையே.
பல்:நன்றியேல்லாம் வேண்டாம் நாங்கள் எங்கள் வேலையைத்தானே செய்கிறொம்.
நாக்கு:- அப்படியெல்லாம் சொல்லக்கூடாது நான் ஏதாவது உபகாரம் செய்யவேண்டும் உங்களுக்கு.
பல்- நீ ஒன்றும் பெரிய உபகாரம் செய்யவேண்டாம்.சும்மா இருந்தலே போதும் அதுவே நீ செய்யும் பெரிய உபகாரம் என்றன.
நாக்கு- என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள்
பல்- ஆமாம் நீ பாட்டுக்கு எல்லாரிடமும் துடுக்குத்தனமாகவும்,அதிகபிரசங்கித்தனமாகவும் பேசிவிடுகிறாய். அவர்கள் உன்னை ஓன்றும் சொல்வதில்லை. பல்லு 32 யையும் உடைத்துவிடுவேன்என்று எங்களைத்திட்டுகிறார்கள் அது வேண்டுமா எங்களுக்கு அதனால்தான் சொன்னேன் சும்மா இரு என்று.
.நாக்கு அவமனத்தால் தலை குனிந்து சும்மா இருக்க முயற்ச்சி செய்தது.

Wednesday, August 16, 2006

மால் மருகா ஷண்முகா வினை தீர்க்க வா வா

மாலோன் மருகன் மன்றாடி மைந்தன் என்றபடி மாமனுக்கும் மருகனுக்கும் உகந்த நாள் இது.மாலுக்கு சிறப்பான கோகுலாஷ்டமியும்,மருகனுக்கு உகந்த கிருத்திகையும் சேர்ந்த நாள் இது.அருணகிரிநாதர்முதல் தொடங்கி தமிழ்த்தியாகய்யா பாபனசம் சிவன் வரை இருவரையும் சேர்த்து பாடாதவரே கிடையது.மாலும் மருகனும் ஒருவர்தான் என்று நமக்கு உணர்த்துவது இந்த நாள்தான்.பாரதியார் கண்ணோட்டத்தில் குழந்தைக்கண்ணன்.
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. ... (தீராத)
1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். ... (தீராத)
2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்; மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்; ... (தீராத)
3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், ''கண்ணை மூடிக்கொள்; குழலிலே சூட்டுவேன்'' - என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். ... (தீராத)
4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்; வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். ... (தீராத)
5, புல்லாங் குழல்கொண்டு வருவான்; - அமுது
பொங்கித் ததும்புநற் பீதம் படிப்பான்; கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். ... (தீராத)
6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்; எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? ... (தீராத)
7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்; இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். ... (தீராத)
8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே, எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். ... (தீராத)
9. கோளுக்கு மிகவும் சமர்த்தன்; - பொய்ம்மை
குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்; ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். ... (தீராத

இனி பாபனசம் சிவன் எளிய தமிழில் எப்படி முருகனை அனுபவித்து அழைக்கிறார் என்று பார்க்கலாம்:-

தணிகை வளர் சரவணபவா நின் தாள் சரணம்தருணமிது கருணை புரிவாய் தண் சோலை....(தணிகை)
அணியும் நவமணி அணிகள் தகதெகஎன நிறைமதி நேர்அறுமுகமும் இளநகை வெண்ணிலவுமிழ உலகு புகழ்...(தணிகை)
துள்ளி விளையாடிவரும் தோகை மயில் மேலே
வள்ளியுடன் பெய்வானை தெய்வயாணை இருபாலே
அள்ளீயிருகண் பருகும் அன்பர் புகழ்வேளே
வெள்ளிமலை நாதன் தருவேல்கொள் பெருமாளே.....(தணிகை)

.பாரதியார் கண்ணோட்டத்தில் குழந்தைக்கண்ணன்.
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. ... (தீராத)
1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். ... (தீராத)
2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்; மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்; ... (தீராத)
3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், ''கண்ணை மூடிக்கொள்; குழலிலே சூட்டுவேன்'' - என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். ... (தீராத)
4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்; வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். ... (தீராத)
5, புல்லாங் குழல்கொண்டு வருவான்; - அமுது
பொங்கித் ததும்புநற் பீதம் படிப்பான்; கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். ... (தீராத)
6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்; எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? ... (தீராத)
7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்; இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். ... (தீராத)
8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே, எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். ... (தீராத)
9. கோளுக்கு மிகவும் சமர்த்தன்; - பொய்ம்மை
குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்; ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். ... (தீராத

இனி பாபனசம் சிவன் எளிய தமிழில் எப்படி முருகனை அனுபவித்து அழைக்கிறார் என்று பார்க்கலாம்:-

தணிகை வளர் சரவணபவா நின் தாள் சரணம்தருணமிது கருணை புரிவாய் தண் சோலை....(தணிகை)
அணியும் நவமணி அணிகள் தகதெகஎன நிறைமதி நேர்அறுமுகமும் இளநகை வெண்ணிலவுமிழ உலகு புகழ்...(தணிகை)
துள்ளி விளையாடிவரும் தோகை மயில் மேலே
வள்ளியுடன் பெய்வானை தெய்வயாணை இருபாலே
அள்ளீயிருகண் பருகும் அன்பர் புகழ்வேளே
வெள்ளிமலை நாதன் தருவேல்கொள் பெருமாளே.....(தணிகை)

இந்த இரு பாடல்களும் இனிய எளிய தமிழில் இருப்பதால் விளக்கத்தைத் தவிர்கிறேன் கண்ணன் தாள் சரணம்.வழித்துணை வரும் திருத்தணி முருகன் தாள் சரணம்

Wednesday, July 26, 2006

நினைத்ததெல்லாம்..... நடந்துவிட்டால் (4)

அன்று மலேஷியாவில் இருக்கும் தெரிந்தவர் அம்மாவைப் பார்க்க வந்திருந்தார்.அவர் சென்றபின் அம்மா கேட்டார் "நீயும் காலேஜ் படித்து அயல்நாடு செல்வாயா?"என்றார்.அதற்கு என் அத்தை சொன்னார்."கவலைப்படாதே நிச்சயம் நடக்கும், உன்னையும் கூட்டிச் செல்வான்". அதற்கு அம்மா சொன்னாள் "இந்த உடம்புடன் போக முடியுமா/'. மறுமொழியாக அத்தை சொன்னார் "முடியவிட்டால் உன்னை கட்டியாவது தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள் பயப்படதே" என்றார் அது வேறு விதமாக காலையில் பலிக்கும் என்று தெரியாமல்.
இரவு மணி 11.00 இருக்கும். அம்மா அவனை எழுப்பி பாத்ரூமுக்கு போகவேண்டும் என்றார்.சரி என்று அவன் பிடித்துக்கொள்வதற்குள் கட்டிலில் இருந்து இறங்கி நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். பிடித்து தூக்கினால் தொடை கால் எல்லாம் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. கான்சரால் முழுவதும் பழுதடைந்த ரத்தகுழாய் உடைந்துவிட்டது.அம்மா அந்த நிலையிலும் தெளிவாக சொன்னார் "டேய்,என்னை உன் மடியில் வைத்துக்கொண்டு, அந்த கங்கைச் சொம்பை உடைத்து ஜலத்தை என் வாயில் விட்டுக்கொண்டே என் காதில் நாராயணா என்று சொல்".என்றார்.சொன்னதைச் செய்து பாதி ஜலம் உள்ளே போய்க்கொண்டிருக்குக்போதே க்ள்க்... க்ள்க்.. ஜலம் வெளியே வந்து தலை தொங்கி விட்டது.கதை முடிந்தது.அத்தை சொன்னது மாதிரியே மறுநாள் அவளை கட்டித் தூக்கிக்கொண்டு சென்றார்கள்.
அந்த மரணம் அவன் மனத்தில் ஒரு மாறாத ரணம்தான்.இந்தக்கதை முடிந்து விட்டது ஆனால் இன்று ஒரு புதுக்கதை ஆரம்பித்து விட்டதே.இதைத்தான் இப்படிச் சொன்னார்களோ
The beginning is the end, the end is the beginning,you are in the middle

Tuesday, July 25, 2006

மரணங்கள்... முடிவதில்லை

நண்பர்களே சிங்கை பயணத்தை சுருக்கமாக முடித்துக்கொண்டு தாயகம் திரும்பவேண்டிய சூழ்நிலை.என் சகோதரனின் மனைவி திடீரென்று இதயக்கோளாறினால் இன்று இறந்துவிட்டதாகத் தகவல் வந்துள்ளது. என்னுடைய இன்றைய நிலைக்கு பெரிதும் காரணமானவன் என் அண்ணன்.அவனுடைய துக்கத்தில் நான் பங்கு கொண்டு ஆறுதலாக இருக்கவேண்டும்

Monday, July 24, 2006

நினைத்ததெல்லாம்..... நடந்துவிட்டால் (3)

அம்மா இருந்தது மகளிர் பகுதி அங்கு ஆண்கள் அனுமதி கிடையாது.மேலும் அங்கே நோயாளிகளுக்கு குறிப்பிட்ட உடைதான் அணியவேண்டும் அந்த அம்மாபுடவை மட்டும்தான் கட்டி பழக்கம்.ஆனால் அங்கே சுடிதார் போன்ற உடைதான் அணியவேண்டும். அந்த உடையுடன் மகனைப்பார்பதற்கு வெட்கப்பட்டுத்தான் பார்க்க மாட்டேன் என்றாள்.நர்ஸுடன் அனுமதி பெற்று உள்ளே சென்று அம்மாவைப் பார்த்தான்.என்னடா இது இந்த கண்றாவி ட்ரஸ்ஸேல்லாம் போடச்சொல்லறா... "அதெல்லாம் ஒண்ணுமில்லை டீர்ட்மெண்ட்டுக்கு செளவுகரியமாக இருக்கும்" என்று சமாதானம் சொன்னான்


ஒரு வாரம் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைந்தாயிற்று.கடைசியில் பெரிய டாக்டர் சொன்னார். "உங்க அம்மாவுக்கு கர்பப்பையில் புற்று நோய் அதுவும் முற்றிய நிலையில் உள்ளது.அறுவை சிகித்சை நிலையையும் தாண்டி விட்டது.வீட்டுக்கு கூட்டிச் செல்லுங்கள். மருந்து மாத்திரை தருகிறோம்.ஆனால் இன்னும் மிக அதிகமாக ஆறு மாதம் தான் உயிருடன் இருப்பார்கள்"ஆனல் இதை அம்மாவிடம் சொல்லக்கூடாது என்றார்கள்.நெருப்பபை வாரி கொட்டியது போல இருந்தது.

வீட்டிற்கு அழைத்து வந்தாகி விட்டது.உறவினர்களும், நண்பர்களும் வந்து பார்த்து போய்க்கோண்டு இருந்தார்கள். சிலர் டாக்டர் கொடுத்த ஆறு மாதத்தையும் குறைத்துச்சொன்னார்கள். நாளுக்கு நாள் வியாதியின் உக்ரம் அதிகமாயிற்று.மிகவும் கஷ்டப்பட்டாள்.ஆனால் நடுவே கேட்டுக்கொண்டே இருந்தாள். என்னை ஏன் டக்டர் ஒரு மாதம் கழித்து டெஸ்ட்டுக்கு வரச்சொல்லவேயில்லை என்று.

டிஸம்பர் மாதமும் ஓடிவிட்டது ஆனால் இந்த ஐந்து மாதத்தில் அவள் செய்த நல்ல காரியம் தினமும் அவனை சமைக்கச் சொன்னது.சாதம் வடிக்க,சாம்பர்,ரசம்,கறி,கூட்டு ஏன் ஊறுகாய் போடக்கூட கற்றுக்கொடுத்துவிட்டாள். அவன் மாமிகூட கேட்டாள் " ஏன் அக்கா காலேஜ் போகும் ஆம்பிள்ளை பையனை இப்படி கஷ்ட்டப்படுத்திரே" அதற்கு அம்மா கூறிய பதிலை சில நட்களுக்கு பிறகுதான் மாமி இவனிடம் கூறினாள். "இவாள்ளம் ஏன் நீ கூட எனக்கு தெரியாதென்று நினைத்துக்கொண்டு இருக்கெ நான் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள்தான் உயிரோடு இருப்பேன் என்று.ஆஸ்பத்திரியில் கூட இருந்தவர்கள் சொல்லிவிட்டார்கள். மாதாந்திர டெஸ்ட்டுக்கு கூப்பிடவில்லையென்றல் அவ்வளவுதான் என்று. இவ்வளவுநாள் அவனைகஷ்டப்படுத்தியது ஏன் தெரியுமா நான் போனதற்குப்பிறகு அவன் சாப்பாட்டுக்கு கஷ்டப்படகூடாது.இப்போது பார் அவன் நன்றாக சமைக்கிறான் இனி பயமில்லை " ஆம் அவள் சொன்னது சரிதான் இன்றும் அவன் சமையலில் ஒரு எக்ஸ்பர்ட்.அன்று ஜனவரி நான்காம் தேதி இரவு மணி பத்து இருக்கும். வீட்டில் அவனும் அவ்ன் அத்தையும்,அண்ணியும் மட்டுமே இருந்தர்கள் அண்ணன்கள் இருவரும் நைட்ஷிப்ட் சென்றுவிட்டார்கள். நாளை பார்ப்போமா......

Thursday, July 20, 2006

நினைத்ததெல்லாம்..... நடந்துவிட்டால் (2)....... நண்டுப்பிடியில்

காலை சீக்கிரமே விடிந்து விட்டது. "நீ காலேஜ்க்கு லீவ் போடாதே நான் டாக்டரிடம் போயிக்கிறேன்" இது அன்னையின் ஆணை.சரி என்று சொல்லிவிட்டு காலேஜ் போய்விட்டான் அந்தப் பையன்.கல்லூரி முடிந்ததும் உடனே வீடு திரும்பி விட்டான். வீடு பூட்டியிருந்தது.பக்கத்து வீட்டில் சாவி வாங்கி வீட்டிற்குள் போனால் சாப்பிடகூடப் பிடிக்கவில்லை.

இரவு எட்டு மணிக்கு எல்லோரும் திரும்பி வந்தார்கள் ஆனால் அம்மா வரவில்லை. மாமி அவனைத் தனியாக அழைத்துச் சென்று சொன்னார். "அம்மாவுக்கு கேன்சராம் அதற்க்காக அடயார் கேன்சர் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம்" என்றார். அவனுக்கு பக் என்றது. நண்டுப்பிடியில் அகபட்டுவிட்டதை உணர்ந்தான்.பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு மறைந்த தந்தையின் ஞாபகம் லேசாய் வந்தது.அண்ணன்கள் இருவரும் மற்றும் எல்லாரும்சொன்னர்கள்" கவலைப்படாதே ஒரு வாரத்தில் அம்மா வந்து விடுவாள் நீ நாளைக்கு போய்ப் பார்த்து விட்டு சாப்பாடு கொடுத்துவிட்டு வா" என்றார்கள் அந்த இரவும் சிவராத்திரிதான் அவனுக்கு.

காலையில் எழுந்து சரியாக ஒன்பது மணிக்கு சாப்பாட்டை எடுத்துக்கொண்டு கொண்டு சைக்களில் நேராக கேன்சர் ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.சைக்கள் கூட அவ்வளவு விரைவாக போகும் என்று அன்று தான் அவன் தெரிந்து கொண்டான். அங்கு விசாரித்ததில் அவன் அம்மா பொதுப்பிரிவில் இருப்பதாகத் தகவல் சொன்னார்கள். பொதுவார்டில் அவனுக்காக மாமி காத்துக்கொண்டு இருந்தர்கள்.சாப்பாட்டை வாங்கிக்கொண்டு" கொஞ்சம் இரு அம்மாவிடம் சொல்லிவிட்டு உன்னை கூட்டிக்கொண்டு போகிறேன்" என்றார்கள்.
சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்து "அம்மா உன்னை இப்போ பார்க்க விரும்பவில்லை உன்னை வீட்டுக்குப்போகச் சொன்னார் "என்றார்.தலைமேல் இடி வீழ்ந்தாற்போலிருந்தது அவனுக்கு. காரணம் தெரியவில்லை.ஆனால் காரணத்தை அவன் தெரிந்து கொண்டபோது மனம் இன்னும் சங்கடப்பட்டது. என்ன காரணம்..... நாளை பார்ப்போமா

நினைத்ததெல்லாம்..... நடந்துவிட்டால்.....

இது நடந்தது 1963_64.அவனுக்கு வயது 15 இருக்கலாம்.ஸ் ஸ் ல் சி பாஸ் செய்து அன்றுதான் கல்லூரி சேர்ந்திருந்தான்.அந்தக் குடும்பத்தில் அவன் கடைசிப்பையன்.மிகவும் நடுத்தரகுடும்பம்.செற்ப வருமானத்தில் ஐந்து பேர் வாழ்க்கை நடத்தவேண்டும்.அந்த குடும்பத்திலேயே அவன் தான் முதல் முதலில் கல்லுரியை எட்டிப்பார்க்கிறான். அவனைவிட அவன் அம்மாவுக்கு.மிகவும் பெருமை.பையனும் மிகவும் சந்தோஷத்துடன் கல்லூரிக்குச்செல்கிறான். மாலை தனது முதல் நாள் அனுபவத்தை தாயுடன் பகிர்ந்துகொள்ள ஆசையோடு ஓடி வருகிறான். வீட்டில் நுழைந்தவுடனே அவனுக்கு அதிர்ச்சி.அவன் தாய் தரையில் படுத்துக்கொண்டு இருக்கிறாள் சுற்றி அவன் அண்ணி,மாமி, எல்லோரும் ஏதோ சிந்தனையில் இருந்தார்கள்.இவன் பதற்றத்துடன் என்னவென்றூ கேட்டான். அம்மாவுக்கு திடீரென்று உடம்பு சரியில்லை உதிரப்போக்கு எற்பட்டு இருக்கிறது என்ற தகவல் தான் அவனுக்குகிடைக்கிறது.உடனே தாயாருடன் அரசாங்க இலவச மருத்துவ மனைக்கு செல்கிறார்கள்.
அங்கே மருத்துவர்களின் பரிசோதனைக்குப்பிறகு மறுநாள் வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்யவேண்டும் என்று உறுதியாக கூறி விட்டார்கள்.அந்தப்பையன் மிகுந்த குழப்பத்துடன் வீட்டிற்கு சென்றான். இரவில் அவன் சகோதரனும்,அண்ணியும்,மாமியும் ஏதோ ரகசியமாகப் பேசிக்கொண்டுடிருந்தார்கள்.அதில் எதுவும் இவனுக்கு கேட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் குறியாக இருந்ததால் எதுவுமே கேட்கவில்லை. நாளையப்பொழுது நல்லபடியாக புலரவேண்டுமென்று வேண்டிக்கொண்டு படுத்தான். தூக்கம் வரவில்லை.நாளையப்பொழுது எப்படி விடிந்தது,நினைத்தது நடந்ததா? யார்நினைத்தது? நாளை பார்ப்போம்.......

Monday, July 17, 2006

சங்கீத.... ஜாதி....முல்லை(2)

தனிவழி
மஹாவித்துவான்...... கச்சேரி.அன்று. நிர்பந்தத்தின் காரணமாக புதுப்பையனை ம்ருதங்க வாசிக்க ஏற்பாடு. பாகவதருக்கு ஒன்றும் சொல்லமுடியவில்லை. கச்சேரி ஆரம்பித்ததலிருந்து மிருதங்கம் தகறார்தான்.எப்படியோ ராகம் தானம் பல்லவி வரை வந்துவிட்டார். பல்லவி ஸ்வரம் பாடி முடித்தவுடன் பையன் கேட்டான்"அண்ணா நான் தனி வாசிக்கட்டுமா' என்று. எரிச்சலுடன் இருந்த பாகவதர் சொன்னார்"நீ இதுவரைக்கும் என்ன சேர்ந்தா வாசிச்சே, தனியா தானே வாசிச்சுண்டு இருந்தே. நீ என்பாட்டுக்கு எங்கே வாசிச்சே ஏதோ நீ உம்பாட்டுக்கு வாசிச்சே அப்படியே வாசி"என்றாரே பார்க்கலாம்.
சண்டையும்.... சமாதானமும்.
பாகவதர் நன்றாகப்பாடிக்கொண்டிருந்தார்.ஆனால் பக்க வாத்யம் பக்கா வாத்தியமாக இல்லை.மிருதங்கம் தகராறு.மிருதங்கத்தில் தோலை இழுத்து பிடித்து (வார் பிடித்தல்) சரி செய்தால்தான் சுருதி சரியாக இருக்கும் செய்யாமல் விட்டுவிட்டு கச்சேரியின் போது நடுவில் அவ்வப்போது செய்துகொண்டு இருந்தார்.பாகவதர் பொறுமை இழந்து இரண்டாவது முறை சரி செய்யும்போது சொன்னார்"என்ன அண்ணா போன வார்லே வார் பிடிச்சதா அடுத்த வார் வந்தா தான் சமாதானம் ஆகும்' என்றவுடன் அரங்கமே அதிர்ந்தது.
வேஸ்டாதானே....போரது...
50 வருடங்களுக்கு முன்பு மாஹாவித்துவான் தலைநகர் டெல்லிக்கு கச்சேரிக்கு சென்றிருந்தார். நன்றாக 41/2 மனி நேரம் பாடினார்.கச்சேரி முடிந்ததும் அவருடன் வந்திருந்த பிரபல சங்கீத விமர்சகரைக் கூப்பிட்டார் "அம்பி இங்கே தடுக்கு (மறைவிடம்) எவ்விடே"என்றாரெ 'எதுக்கு மாமா' 'நீர் பிரியனும்" 'மாமா இது கோவில் வீட்டுக்கு போயிடலாம் "இல்லைடா அம்பி இதோ இப்படி தெருஓராமா இருந்தேருன்." மாமா அந்தமாதிரி பண்ணா இந்த ஊர்லே போலீஸ்காரன் பிடிச்சுண்டு போயிடுவான்" போட்டாமேடா வேஸ்டாதனே போறது .பிடிச்சுண்டு போகட்டுமே"கேட்டவுடன் நம்ப ஆள் ஆடிப்போய்விட்டார்.

Friday, July 07, 2006

சங்கீத...ஜாதி...முல்லை

சங்கீதம்--இங்கீதம் ..... ஒரு மிகப்பெரிய மஹா...... சங்கீத வித்வானிடம் தன் பையனை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளச்செய்ய ஒரு தந்தை தன் பையனுடன் சென்றிருந்தார். வித்வான் அப்போது பூஜையிலிருந்தார். வந்தவர்கள் இருவரும் ஹாலில் சோபாவில் உட்கார்ந்து இருந்தார்கள்.பையன் சோபவில் கால்மேல்கால் போட்டுக்கொண்டு ஸ்டைலாக உட்கார்ந்து இருந்தான். பூஜையைமுடித்துக்கொண்டு பாகவதர் வெளியேவந்தார். அப்பா மரியாதையுடன் எழுந்து நின்று வணக்கம் சொல்லி தான் வந்த விஷயத்தைச் சொன்னார். பையன் அப்படியே உட்கார்ந்து இருந்தவாறே வணக்கம் மாமா என்றான். பாகவதர் தந்தையிடம் சொன்னார் "நான் உங்க பையனுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறேன் அதற்கு முன்னால் நீங்கள் அவனுக்கு கொஞ்சம் இங்கீதம் கற்றுக்கொடுங்கள்" என்றாரே பார்க்கலாம்
சங்கீத ஞானமு...
வருடாவருடம் அந்த மஹா... வித்வான் அந்த ஊருக்கு ராமநவமியன்று அந்த ஊர் பெரியமனிதரின் அழைப்பை ஏற்று கச்சேரி செய்துவந்தார்.அந்த வருடமும் அந்த ஊருக்குவந்து கச்சேரி செய்தார். பெரியமனிதரும் முதல் வரிசையில் உட்கார்ந்து ரசித்துக்கொண்டு இருந்தார். இரண்டு கீர்த்தனை முடிந்து கொஞ்சம் இடைவெளியில் பெரியமனிதர் போனவருடம் வித்வான் மிகவும் நன்றாகப் பாடிய தோடி ராகத்தை இந்த தடவையும் மறுபடிப் பாடச்சொன்னார்.வித்துவானும் தோடி ராகத்தை விஸ்தாரமாகப் பாடினார்.பாடி முடிந்ததும் பெரிய மனிதர் வித்துவானிடம் சொன்னார்"இந்த தடவை தோடி ராகத்தை மிகமிக ந்ன்றாக பாடினீர்கள்"என்றார்.வித்துவான் சிரித்துக்கொண்டே சொன்னார்"நான் வருடாமும் அப்படியேத்தான் பாடிக்கொண்டு இருக்கிறேன் அவ்விடதிலேதான் ஞானம் கொஞ்சம் இந்தவருடம் ஜாஸ்தியா வளர்ந்திருக்கிறது" என்றாரே பார்க்கலாம். தொடரும் ஆதரவு இருந்தால்

Tuesday, July 04, 2006

விட்டு விடுதலையாகி நிற்பாய்

ஓய்வுபெற்று இரண்டு நாட்களாகிவிட்டது,என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்.காலை மணி 10 இருக்கும். டக்,டக் என்று ஜன்னலில் யாரோ தட்டும் சத்தம் கேட்டது. நிமிர்ந்து கண்ணாடி வழியாகப் பார்த்தேன்.இரண்டு புதிய நண்பர்கள்.ஆனால் அவர்களோ என்னைப்புதியவன் போல் பார்த்தார்கள்.அந்த சமயத்துக்கு நான் வங்கியில்தான் இருப்பேன் பதவியில் இருந்தபோது.இந்த வீட்டிலேயே நான்கு வருடங்களாக இருந்தபோதிலும் பார்க்காத புதிய முகங்கள்.இருவரும் ஒரேமாதிரியாக தலையைச் சாய்த்து என்னை நீ யார் என்பதுபோல் பார்த்தார்கள். இரண்டுமே அழகான மைனாக் குருவிகள்.அதில் ஒன்று ஆண் மற்றது அதன் பேடை.இரண்டும் என்னைப் பார்த்து கண்களில் நட்புடன் நாம் நண்பர்கள் ஆகலாமா என்பது போல் பார்த்தது. நானும் சரி என்பதுபோல் உள்ளேசென்று சிறிது அரிசிமணிகளைஎடுத்து வந்து ஜன்னலின் வழியாக கை விட்டு அவைகளுக்கு உணவாக வைத்தேன். அதைத்தொடாமல் இரண்டும் ஒருமுறை என்னை ஏற இறங்கப்பார்த்துவிட்டு எங்கோ பறந்து சென்று விட்டன.என் கண்களில் ஏமாற்றம் வருத்தம்.

சிலநொடிக்குபின். இரண்டும் வேகமாக திரும்பிவந்தன. இந்த தடவை வரும்போது ஒரு விருந்தாளியையும் கூட்டிக்கொண்டு வந்தன.அதனுடைய குஞ்சு பறவைப்போலிருந்தது.சிறியாதாக இருந்தாலும் மிக அழகாய் இருந்தது கண்ணைச்சிமிட்டி என்னைப்பார்த்து எனக்கும் உண்டா என்பதைப்போல் பார்த்தது. கொஞ்சும் அழகு கொள்ளை அழகு.அந்தபெண்மைனா கிழே சிதறி இருந்த அரிசி மணிகளைத் தன் வாயால் கொத்தி தன் குஞ்சுக்கு வாயில் கொடுத்து பசியாறாச்செய்தது அது பசியாறியதும் இரண்டு மைனாக்களும் மீதி இருந்த அரிசியை கொத்தித் தின்றன.எனக்கு என் தாயின் முகம் நினைவில் வந்தது.இப்படித்தானே அவளும் தனக்கு வைத்துகொள்ளாமல் எனக்களித்துவிட்டு மீதமுள்ள சொல்ப உணவை அருந்திவிட்டோ அல்லது பட்டினியுடனோ படுத்துகொள்வாள்.தாய்ப்பாசம் என்பது ஆண்டவன் ராஜ்ஜியத்தில் ஒரே அளவுகோல்தான்.

சாப்பிட்டுமுடிந்தவுடன் என்னைபார்த்து கவலைப்படாதே நீயும் எங்களைப்போல் இனிமேலாவது சம்சாரபந்தத்திலிருந்து "விட்டு விடுதலையாகி" சுதந்திரமாக இருஎன்று சொல்லாமல் சொல்வது போல் இருந்தது.உடனே மூன்றும் பறந்து செல்லத் தயாராகி உனக்குதான் வேலை இல்லை எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது நாங்கள் போகிறோம் என்று சொல்லிப்போவதுபோல் பறந்துச் சென்றது. அவைகள் போனபின்பு மனமும் இடமும் வெற்றிடமாயிற்று. ஆனால் மனம் மட்டும் இந்தப் பாரதியாரின் பாடலை அசைபோட்டது.
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே
சரணங்கள்
1. எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)
2. பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு)
3. முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)

Sunday, July 02, 2006

அழைத்ததால் வந்த ஆறுதல் தந்த ஆறு விளையாட்டு

ஆறு விளையாட்டுக்கு இரண்டு பேர்கள் அழைத்திருக்கிறார்கள். இனிமேல் போடாமல் இருந்தால் மரியாதை இல்லை. வலைவுக்கு புதியவன். நெளிவு, சுளிவு,தொழில் நுட்பம் தெரியாதவன்.முயற்சியில் ஜெயித்தால் "கெரிடிட்"எனக்கு இல்லையென்றால் "ட்பிட்" ஆறு விளையாட்டுக்கு அழைத்த திருமதி.கீதா மற்றும் நாச்சியார் அவர்களுக்கு. வங்கியிலிருந்து ஓய்வு பெற்று ஒரு நாள்தானே ஆயிற்று டெபிட்,கெரிட் மறக்கமுடியவில்லை.

1) பிடித்த ஆறு
அ)ஆறுமுகன் (குலதெய்வம்)
ஆ)ஆறுதல்(எப்பவும் கசேஇல்லமேகொடுக்கலாம்)
இ)மூனாறு(சமீபத்தில் போய்வந்த இடம் மற்றபடி கொலையெல்லாம் எனக்கு பண்ணத்தெரியாது)
ஈ)பாலாறு( மணலாறுதான் எப்பவும் இருந்தலும் சொந்த ஊர் ஆறு அல்லவா)
உ)அடையாறு(50 வருடமாக அதன் அருகிலேயேதானே வாழ்கிறேன்)
ஊ)கூவம் ஆறு( சீக்கிரம் மணக்கப்போகிறது)

2)பிடித்த ஆறு படங்கள்
அ)தில்லானா மோகனாம்பாள்
ஆ)காசேதான் கடவுளடா
இ)திருவிளையாடல்
ஈ)சிந்துபைரவி
உ)காதலிக்க நேரமில்லை(கலேஜ்க்கு கட் அடித்து அண்ணனிடம் அடி வாங்கி பார்த்தது)
ஊ)திருட்டு பயலே(நண்பர் திரு.சுசி கணேசன் எடுத்தது)

3)பிடித்த ஆறு புத்தகங்கள்
அ)தியகபூமி(கல்கி)
ஆ)துப்பறியும் சாம்பு(தேவன்)
இ)அம்மா வந்தாள் (தி.ஜா.ரா /தி ரா ச இல்லை)
ஈ) அர்த்தமுள்ள இந்துமதம் (கண்ண தாசன்)
உ)அக்னிப்பரிக்ஷை) ஜெயகாந்தன்)
ஊ)சுந்தர காண்டம்(பால குமரன்)

4) பிடித்த ஆறு பாடகர்கள்
அ)திரு. ம்.டி. ராமனாதன்(நன்றி ஹரி)
ஆ)திருமதி.அருணா சாய்ராம்
இ)திரு. டி.கே. ஜெயராமன்
ஈ)திரு. விஜய் சிவா
உ)திரு.டி.ம்.கிருஷ்ணா
ஊ)திரு.ஜேசுதாஸ்

5) பிடித்த ஆறு ஹோட்டல்கள்
அ)வெங்கட்டா லாட்ஜ்(கும்பகோணம்0
ஆ)காளியாகுடி ஹோட்டல் (மாயவரம்)
இ)ராயர் கேப்(மைலப்பூர்)
ஈ)கணேஷ் மெஸ்(மதுரை)
உ)கோமள விலாஸ் (கொல்கத்தா)
ஊ)ம்.டி.ர்.(பெங்களூர்)

6)மிகவும் பிடித்த வலைப்பதிவாளர்கள்
அ)திரு.குமரன்(என்னை வலைக்குள் இழுத்தவர்)
ஆ)திரு.ஜி. ராகவன் (முருகனுடன் பேச்சு விளையாட்டு நமக்கெல்லாம் வார்த்தை விளையாட்டு)
இ)திரு.ஸ்.கே.(கவிதைக்கு கவிதையால் அழகு செய்பவர்)
ஈ) திரு.அம்மஞ்சி(சிரிக்கவைப்பதையே தொழிலாகக்கொண்டவர் எப்பொழுதும் அஸின்னுடன் கனவில் இருப்பவர்
உ)திருமதி.கீதா சாம்பசிவம்(மார்கண்டேயனி என்றும் பதினாறு)
ஊ)திருமதி.நாச்சியார்(சும்மாஇருந்த சங்கை ஊதிக்கெடுத்தவர்)

ஆறு விளையாடு விளையாடிச்சு.பூங்கொத்தோ கல்லோ எதுவாக இருந்தாலும் எனக்கில்லை.போற்றுவார் போற்றலும் தூற்றூவார் தூற்றலும் போகட்டும் திருமதி நாச்சியாருக்கே
அன்பன். தி ரா ச

Sunday, March 19, 2006

Appoinment of auditors in public banks in india

A decision has been taken in India to leave the freedom of appoinment of auditors to the discretion of Boards of banks
Views of members are requested