Wednesday, August 23, 2006

சும்மா இருப்பதே சுகம்

அருணகிரியாருக்கு முருகன் உபதேசம் செய்ததுமாதிரியாக இருக்கு என்று
எண்ணவேண்டாம்.அதெல்லாம் திரு.ஜி.ராகவன்,திரு.ஸ்.கே மற்றும்திரு.ராமநாதன் பார்த்துக்கொள்வார்கள்.கீதா மேடம் சொன்ன மாதிரி நம்மாலே சாதாரண பதிவே போடமுடியாது. அண்மையில் மறைந்த ஷெனாய் மாமேதை தன்னுடைய தொன்னுறாவது வயதில் மிகச்சிறந்த கச்சேரியை நமது பாரளுமன்றத்தில் நிகழ்தினார்.ஆனால் இதெல்லாம் சின்ன பொண்ணுக்கு தெரிய வாய்ப்பில்லை.
மாலை நேரம் யாரோ கொடுத்த கோகுலாஷ்டமி சீடை,முருக்கு,தட்டை ஆகியவற்றை நொருக்கு தீனியாக தின்று கொண்டிருந்தேன். (விஜிக்கு படிக்கவே கஷ்டமாக இருக்கும்) ஏதோ சண்டை போடுகிறமாதிரி கேட்டது.சரி நானும் இது ஏதோ அம்பி கீதா சண்டை என நினைத்தேன்.ஆனால் இது வேறு சண்டை. பேச்சு சத்தம் கேட்டது. மிக கவனமாக உற்றுக்கேட்டேன்.சத்தம் என் வாயிலிருந்துதான் கேட்டது.என் கவனம் அதில் ஈடுபட்டது
என் நாக்கிற்க்கும் பல்லுக்கும்தான் ஏதோ வாக்குவாதம். நாக்கிற்கு எப்பொழுதுமே கொஞ்சம் கர்வம் ஜாஸ்தி.32 பல்லும் அதற்கு வேலைக்காரன் என்ற நினைப்பு.சாப்பிடும் வகைகளை நன்றாக அரைத்துக் கொடுக்க வேண்டியது மட்டும்தான் அதன் வேலை, ஆனால் ருசி மாட்டும்தனக்குதான் சொந்தம் என்ற கர்வம்.இனி சண்டையை கேட்போமா.
நாக்கு:- பற்களே உங்களுக்கு மிக்க நன்றி.இந்த சீடை முருக்கு இவைகளை நன்றாக அரைத்து கொடுத்தீர்களே. அதனால்தான் ருசி மிகவும் அதிகமாக இருக்கிறது.ஆனால் அது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.அந்த பாக்கியம்தான் உங்களுக்கு கிடையாதே. கடவுள் கொடுக்கவில்லையே.
பல்:நன்றியேல்லாம் வேண்டாம் நாங்கள் எங்கள் வேலையைத்தானே செய்கிறொம்.
நாக்கு:- அப்படியெல்லாம் சொல்லக்கூடாது நான் ஏதாவது உபகாரம் செய்யவேண்டும் உங்களுக்கு.
பல்- நீ ஒன்றும் பெரிய உபகாரம் செய்யவேண்டாம்.சும்மா இருந்தலே போதும் அதுவே நீ செய்யும் பெரிய உபகாரம் என்றன.
நாக்கு- என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள்
பல்- ஆமாம் நீ பாட்டுக்கு எல்லாரிடமும் துடுக்குத்தனமாகவும்,அதிகபிரசங்கித்தனமாகவும் பேசிவிடுகிறாய். அவர்கள் உன்னை ஓன்றும் சொல்வதில்லை. பல்லு 32 யையும் உடைத்துவிடுவேன்என்று எங்களைத்திட்டுகிறார்கள் அது வேண்டுமா எங்களுக்கு அதனால்தான் சொன்னேன் சும்மா இரு என்று.
.நாக்கு அவமனத்தால் தலை குனிந்து சும்மா இருக்க முயற்ச்சி செய்தது.

Wednesday, August 16, 2006

மால் மருகா ஷண்முகா வினை தீர்க்க வா வா

மாலோன் மருகன் மன்றாடி மைந்தன் என்றபடி மாமனுக்கும் மருகனுக்கும் உகந்த நாள் இது.மாலுக்கு சிறப்பான கோகுலாஷ்டமியும்,மருகனுக்கு உகந்த கிருத்திகையும் சேர்ந்த நாள் இது.அருணகிரிநாதர்முதல் தொடங்கி தமிழ்த்தியாகய்யா பாபனசம் சிவன் வரை இருவரையும் சேர்த்து பாடாதவரே கிடையது.மாலும் மருகனும் ஒருவர்தான் என்று நமக்கு உணர்த்துவது இந்த நாள்தான்.பாரதியார் கண்ணோட்டத்தில் குழந்தைக்கண்ணன்.
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. ... (தீராத)
1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். ... (தீராத)
2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்; மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்; ... (தீராத)
3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், ''கண்ணை மூடிக்கொள்; குழலிலே சூட்டுவேன்'' - என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். ... (தீராத)
4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்; வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். ... (தீராத)
5, புல்லாங் குழல்கொண்டு வருவான்; - அமுது
பொங்கித் ததும்புநற் பீதம் படிப்பான்; கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். ... (தீராத)
6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்; எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? ... (தீராத)
7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்; இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். ... (தீராத)
8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே, எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். ... (தீராத)
9. கோளுக்கு மிகவும் சமர்த்தன்; - பொய்ம்மை
குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்; ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். ... (தீராத

இனி பாபனசம் சிவன் எளிய தமிழில் எப்படி முருகனை அனுபவித்து அழைக்கிறார் என்று பார்க்கலாம்:-

தணிகை வளர் சரவணபவா நின் தாள் சரணம்தருணமிது கருணை புரிவாய் தண் சோலை....(தணிகை)
அணியும் நவமணி அணிகள் தகதெகஎன நிறைமதி நேர்அறுமுகமும் இளநகை வெண்ணிலவுமிழ உலகு புகழ்...(தணிகை)
துள்ளி விளையாடிவரும் தோகை மயில் மேலே
வள்ளியுடன் பெய்வானை தெய்வயாணை இருபாலே
அள்ளீயிருகண் பருகும் அன்பர் புகழ்வேளே
வெள்ளிமலை நாதன் தருவேல்கொள் பெருமாளே.....(தணிகை)

.பாரதியார் கண்ணோட்டத்தில் குழந்தைக்கண்ணன்.
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. ... (தீராத)
1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். ... (தீராத)
2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்; மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்; ... (தீராத)
3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், ''கண்ணை மூடிக்கொள்; குழலிலே சூட்டுவேன்'' - என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். ... (தீராத)
4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்; வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். ... (தீராத)
5, புல்லாங் குழல்கொண்டு வருவான்; - அமுது
பொங்கித் ததும்புநற் பீதம் படிப்பான்; கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். ... (தீராத)
6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்; எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? ... (தீராத)
7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்; இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். ... (தீராத)
8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே, எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். ... (தீராத)
9. கோளுக்கு மிகவும் சமர்த்தன்; - பொய்ம்மை
குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்; ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். ... (தீராத

இனி பாபனசம் சிவன் எளிய தமிழில் எப்படி முருகனை அனுபவித்து அழைக்கிறார் என்று பார்க்கலாம்:-

தணிகை வளர் சரவணபவா நின் தாள் சரணம்தருணமிது கருணை புரிவாய் தண் சோலை....(தணிகை)
அணியும் நவமணி அணிகள் தகதெகஎன நிறைமதி நேர்அறுமுகமும் இளநகை வெண்ணிலவுமிழ உலகு புகழ்...(தணிகை)
துள்ளி விளையாடிவரும் தோகை மயில் மேலே
வள்ளியுடன் பெய்வானை தெய்வயாணை இருபாலே
அள்ளீயிருகண் பருகும் அன்பர் புகழ்வேளே
வெள்ளிமலை நாதன் தருவேல்கொள் பெருமாளே.....(தணிகை)

இந்த இரு பாடல்களும் இனிய எளிய தமிழில் இருப்பதால் விளக்கத்தைத் தவிர்கிறேன் கண்ணன் தாள் சரணம்.வழித்துணை வரும் திருத்தணி முருகன் தாள் சரணம்