Monday, September 29, 2008

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் (3)

அம்பாளுக்கு ஆயிரம் நாமங்கள் மட்டும்தானா என்ன ! அவள்தானே நாமரூபா. எல்லா வார்த்தைகளும் அவளிடமிருந்துதான் உருவாகின.காளிதாசன் கூறும் போது வாகர்த்தாவி வசம் விருக்த்தவ் வாகர்த்த பிரபத்தியே, வார்த்தைகளும் அதிலிருந்து வரும் பொருளும் நீதான் என்கிறார்.இருந்தாலும் இந்த நவராத்ரி திருநாளில் எனக்குத் தெரிந்த வரை லலிதா ஸ்ஹஸ்ரநாமத்திலிருந்து சில நாமக்களை பற்றி எழுத எண்ணி அவளின் அருளோடு முயல்கிறேன் கொலுவும் உண்டு சுண்டலும் உண்டு. தினமும் வாருங்கள் வந்து அம்பிகையின் அருளுக்கு பாத்திரமாகுங்கள். முதல் நாமவாக உதயத்பானு ஸ்கஸ்ராபா என்ற நாமத்தை எடுத்துக்கொள்ளலாம்.அம்பிகையின் முகத்தைவர்ணிக்கும் எல்லோரும் இதை கையாண்டு இருக்கிறார்கள். அம்பாளுடைய முகாரவிந்தம் எப்படி இருக்கும் தெரியுமா? ஆயிரம் சூரியர்கள் விடிகாலையில் உதிக்கும் போது அதன் கிரணங்கள் எப்படி சிவப்பு வர்ணமாக இருக்குமோ அப்படி இருக்குமாம்.பின்னர், வேறு ஒரு இடத்தில் அவளது முகம் சரஸ்சந்திர நிபானனா சரத்காலத்தில் உதிக்கும் குளுமைபொருந்திய சந்திரனைப் போல் இருக்குமாம். இதென்ன எப்படி சூரியனைப் போலும் சந்திரனைப் போலும் இருக்குமா ஒருவரது முகம் முரன்பாடாக இருக்கிறதே என்கிறீர்களா? மகிஷாசுரன், மதுகைடபன், போன்ற அசுரர்களை வதைக்கும்போது உக்கிரமாக சிவந்து உத்யத்பானு ஸ்காஸ்ராபாவாக இருக்கும்.அபிராமி பட்டர்,போன்ற அடியார்களை காக்கும் போது ஸ்ரஸ்ச்ந்திர நிபானனாவாக இருக்கும்.ஒரு புலி காட்டில் தன் உணவுக்காக இரையை வேட்டையாடும்போது அதனுடைய முகத்தைப் பார்த்திருக்கிறீர்களா வெங்கண் சிவந்து வடிவால் முறுக்கி தன்கோரப்பற்களினால் கடித்து குதறி உக்கிரமாக உதயசூரியன்போல இருக்கும். அதுவே பிறந்து 2 நாட்களே ஆனா தன் குட்டிகளை காப்பதற்காக ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு தூக்கிக்கொண்டுபோகும்போது அதே பற்களைத்தான் உப்யோகித்து அதற்கு வலியில்லாமல் வாயில்கவ்விக் கொண்டு போகும். ஒரு சாதரண மிருகத்திற்கே வித்தியாசமான மறுபட்ட முகத்தோற்றம் கொண்டு வரும்போது அகிலாண்ட நாயகிக்கு இது ஒரு பெரிய விஷயமா?
இந்த உதயத்பானு ஸகஸ்ராபாவைத்தான் ஆதிசங்கரரும் மதுரை மீனாக்ஷியம்மனின் முகத்தை வர்ணிக்கும்போதும் உப்யோகப் படுத்துகிறார்.""உத்யத்பானு ஸஹ்ஸ்ர கோடி ஸதிர்ஸாம்"". மீனாக்ஷியம்மனின் முகம் எப்படி இருக்கிறதாம் ஆயிரம் உதயசூரியன் உதிக்கும் போது ஏற்படும் பிராகாசமாக இருக்குமோ அப்படி.
அபிராமபட்டரும் லேசுபாட்டவரா அம்பிகையின் மீது அந்ததாதி பாடுபோது முதல் படலிலேயே முதல் வரியே""உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகமுடையாய்"", அபிராமியின் முகத்தில் இருக்கும் திலகம் எப்படி இருக்கிறதாம் தெரியுமா? காலையில் உதிக்கின்ற கதிரவன் எப்படி சிவந்து சிவப்பாகாக இருக்குமோ அதுபோன்று அவளுடைய திலகம் ஒளிர்விடுகிறதாம் அப்படியென்றாள் அம்பாளின் முகம் எவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்று யூகித்துக்கொள்ளுங்கள்
நாளைக்குத்தான் நவராத்திரி அதலால் சுண்டல்(அம்பி)நாளைக்குத்தான்
.

Sunday, September 28, 2008

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள்(2 )

அபிராமி அவள்"" அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லியாகவும் மின்னாயிரம்
ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற தண்ணாளாகவும் "' திகழும் அபிராமியை போற்றி மாறாத பக்தியுடன் வணங்கியவர் சுப்பிரமணிய சர்மா.அவருக்கு காணும் பெண்கள் எல்லாரும் அபிராமிதான்.ஆனால் இவர்மீது பொறாமை கொண்ட சிலர் இவரைப்பற்றி அவதூறான செய்திகளை பரப்பினார்கள்.
தை அமாவாசையன்று காவிரிப்பூம்பட்டினத்தில் கடலாடி , திருக்கடவூருக்கு வருகிறார்.அப்போது தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்,அபிராமியின் சந்நிதியில் அமர்ந்து அவளது சந்திர பிம்ப வதனத்தின் ஒளித்தியானத்தில் கட்டுண்டு கிடந்த சுபிரமணிய சர்மா மன்னன் வருகையை உணரவில்லை.மாங்காய் உண்டு மலைமேல் இருப்பவர்க்கு தேங்காய் பால் ஏதுக்கடி என்ற நிலயில் இருந்தார்.மன்னனை வணங்கவும் இல்லை. இதுதான் சமயம் என காத்திருந்த இவர்பால் பொறாமை கொண்டவர்கள் மன்னனிடம்""அரசே உங்களையும் மதிக்காது அமர்ந்திருக்குமிவரது திமிரைப் பாருங்கள். இவர் நடைமுறைச் சிந்தனை கூட இல்லாதவர். இவரிடம் இன்று என்ன திதி என்று கேட்டுப்பாருங்கள் அது கூட அவருக்கு நிச்சியமாகத் தெரியாது"" என்று கூற அரசனும் அவ்வாறே சுபிரமணிய சர்மாவைக் கேட்டார். அபிராமியின் நிறைமதி முகதரிசனம் கண்டு கொண்டிருந்த சர்மாவும்""இன்று பௌர்ணமி"" என்றுகூறிவிடுகிறார்.கோபமுற்ற அரசன் அமாவசையான இன்று பௌர்ணமியை சந்திரனைக் காட்ட வேண்டும் இல்லையேல் உன் தலை தரையில் உருளும் என்றார்
தன்னிலைக்கு வந்த சர்மாவும் விபரீதத்தின் தன்மையை உணர்ந்தார் .ஆனால் பயப்படவில்லை.கேட்டவனோ மன்னன் என்னை பதில் சொல்லச் சொல்லியதோ அபிராமி..என்னைக்காப்பது அவள் கடமை என்று கூறிவிட்டு அம்மையின்மீது பக்திச் சுவையும் தமிழ்ச் சுவையும் சொட்டும் அந்தாதி 100 பாடல்களைப் பாடத்தொடங்கினார். 79 ஆவது பாடலான
"விழிக்கே அருளுண்டு, அபிராமவல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு, அவ்வழிகிடக்க,
பழிக்கே சுழன்று,வெம்பாவங்களே செய்து,பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே""
என்ற பாடலைப் பாடியதும் அந்த அதிசயவல்லி தன் தாடங்கத்தைசுழற்றி வானில் வீசினாள்.ஈஸ்வரியின் இரு காதுகளில் இருக்கும் தாடங்கள்தான் சூர்யனும் சந்திரனும் என்று ஆதிசங்கரர் அம்பாளை வர்ணித்ததுபோல அந்தத் தாடங்கம் வானவீதியில் பௌர்ணமி சந்திரனாக ஒளிவீசியது.அமவாசையன்று முழுமதியைக் கண்ட குறைமதி மன்னனும் தன் தவற்றை உணர்ந்து சர்மாவிடம் மன்னிப்பு கேட்டு அவர் பெருமையை உலக அறியச் செய்கிறன். அபிராமி அந்தாதியை பாடி முடித்த சுபிரமணிய சர்மாவும் ""அபிராமி பட்டர்""ஆனார்.

-
அபிராமி அந்தாதியின் முதல் பாடல்
உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம்
என்ற அம்பாளின் நாமத்தை எப்படி பட்டரும்,சங்கரரும் லலிதா ஸகஸ்ரநாமத்திலும் அனுபவித்தார்கள் என்று நாளை பார்க்கலாமா

Saturday, September 27, 2008

அம்பிகையின் ஆயிரம் நாமங்கள்

இது நூறாவது பதிவு கௌசிகத்தில்

திருகடவூரில் காலசம்ஹாரமூர்த்தியின் சக்தியாகத் திகழ்பவள்பாலம்பிகை. அமுதகடேஸ்வரரின் ஷக்தியாக்த் திகழ்பவள் அபிராமி.திருக்கடவூர் என்பதுஅஷ்ட விரட்டத் தலங்களுள் ஒன்று. சிவன் வீரச்செயல் புரிந்த இடங்கள் எட்டு. அவற்றுள் காலனை காலால் உதைத்து அவனுடைய மமதையை ஸ்ம்ஹரித்துக் காலஸம்ஹார மூர்த்தியாக வடிவெடுத்த தலம் திருக்கடவூர். பாற்கடலைக் கடைந்து எடுத்து அமிர்தத்தைப் பகிர்ந்துகொள்வதற்காகத் தேவர்களும் அசுரர்களும் மாஹேஸ்வரனிடம் விண்ணப்பிக்க மஹாதேவனும் அமிர்தகடத்தை மானும் புலியும் பகையின்றி நட்புறவோடு நீர் உண்ணும் நிலையில் வைத்துப் பின்ண்ணக் கட்டளையிட , அவர்களும் அவ்வாறே பிஞ்சிசிலவனம் எனும் தலத்தில் அதனை வைத்துவிட்டு அனுஷ்டானத்திற்காகச் சென்றனர். திரும்ப வந்து பார்த்தபோது அமிர்தகடமானது சிவலிங்கமாக உருவெடுத்துப் பிஞ்சில வனத்திலேயே அமிர்தகடசே மூர்த்தியாகப் பிரதிஷ்டையானது
அமுதம் தேவர்களும் அசுரர்களுக்கும் மட்டுமின்றி பக்தியுடன்வந்து தொழும் அடியவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதே அவன்நோக்கம்.பிஞ்சிலம் என்றால் ஜாதிப் பூ என்று பொருள். இதுவே அமிர்தகடம் ஸ்தாபனம் ஆனதால் திருகடவூர் என்று ஆனது.
மிருகண்டு முனிவருக்கு பல காலம் மகப்பேறு இல்லாமல் இருக்க அவர் சிவனிடம் வேண்டியபோது 16 ஆண்டுகளே வாழக்கூடிய மார்க்கண்டேயரைப் மகனாகப் பெற்றார். அமுதகடேஸ்வரரிடம் அகலாத பக்திகொண்ட மார்கண்டேயரைப் பதினாறு வயதான பின்பு இழுத்துச்செல்ல காலதேவன் வந்தபோது மார்கண்டேயர் அமிர்தகடேஸ்வரரை கட்டிக்கொண்டார்.பாலகன் மீது காலன் பாசக்கயிற்றை வீச அது அமிர்தகடேஸ்வரரையிம் சேர்த்து பிணத்தது.அதனால் வெகுண்டெழுந்த சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் தமது இடது காலால் காலனை உதைத்து ஸ்ம்ஹாரம் புரிந்து மார்க்கண்டேயரைக் காத்தார். மார்க்கண்டேயருக்கு "என்றும் பதினாறு" என்ற சிரஞ்சீவி வரன் அளித்த தலம் திருக்கடவூராகும்.
காலன் தனக்கிட்ட கட்டளையைத்தான் செய்தான் பின்பு அவனுக்கேன் இந்த முடிவு.அவன்செய்த தவறு பாசக்கயிற்றை மார்கண்டேயன் மட்டுமல்லாது சிவனின் மீதும் பினைத்ததால் வந்த துன்பம் அது.அதிகார துஷ்பிரயோகத்தால் வந்த வினை.சுப்ரமணிய சர்மாவின் கதையை அடுத்த பதிவில் பார்ப்போம்.