Tuesday, July 08, 2008

விளையும் பயிர் முளையிலே

கிட்ட தட்ட 48 வருடங்களாக கர்நாடக சங்கீதம் கேட்டு வந்தாலும் எனக்கு சில சமயங்களில் ராகம் என்ன வென்று தெரியாமல் அல்லது மாற்றிச் சொல்லும் நிலை வந்து விடுகிறது.ஆனால் இந்தக் குழந்தை ச்ரீ நிதியைப் பாருங்கள். வயது இதனைக்கும் நான்குதான் ஆகிறது. அடேயப்பா என்ன ஒரு சங்கீத ஞானம். எல்லா ராகத்தையும் கோடி காட்டியவுடனே சொல்லிவிடுகிறது.அதுவும் கேள்வி கேட்பது சங்கீத உலகின் முதன்மை பாடகி திருமதி. மும்பை. ஜெயச்ரீ அவர்கள் அதுமட்டுமா பாடிய ஸ்வரத்தையும் கூட பட்டென்று கூறுகிறது.அதுவும் எந்த சிரமும் இல்லாமல்.

அம்மா போட்ட இரண்டு செயின்களையும் மாற்றி மாற்றி விளையாடிக்கொண்டே சரியாகச் சொல்லுகிறது. வயலின் வித்துவான் ஒரு ராகத்தின் ஒரு ஸ்வரத்தை ஆரம்பிக்கும் முன்னமேயே "" அடாணா"" என்று தெறிக்கிறது வார்த்தை. இன்னும் மழலைகூட மாறவில்லை.வாழையடி வாழையென வளரும் சங்கீதம் என்பது இதுதானோ. குழந்தைக்கு ஆசிகள் வளமான சங்கீத எதிர்காலத்திற்கும் தீர்காய்சுக்கும். நீங்களும் கேட்டுத்தான் பாருங்களேன்

அது சரி, அம்பிக்கு ஒரு போட்டி. முதல் வீடியோவில் பார்வையாளர்கள் கூட்டத்தில் முதல் வரிசையில் ஒரு பெண்மணி கைதட்டுகிறாரே அது யாரென்று கண்டுபிடித்தால் உனக்கு தங்கமணி கையால் பரிசு கொடுக்கப்படும்.





-