Friday, May 24, 2013

பக்தர்களுக்கு பற்று அற்றவர் (பரமாச்சாரியார்) பிரதேசத்திலும் துணை--- இது கதை அல்ல நிஜம் 5






இவர்களுக்கு பயம் எனக்கு இந்த மாதிரி சமயங்களிலில் ரத்தம் திக்காகி உறைந்து மயக்கம் வந்துவிடும். வர ஆரம்பித்தது. மகனோ சரி வரும் வண்டியை பிடித்து இண்டர்லேகன் போய் புகார் கொடுக்கலாம் என்றான். வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலை.

எனது மனம் கவலை எனும் இருள் சூழ்ந்தால் எவரிடம் எப்போதும் இப்போதும் முறையிடுவேன் அவர்தான் பரமாச்சாரியார் .

வாய் என்னை அறியாமல்" ஸ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்.ஜகதாம் குருவர்யஞ்சகாமகோடிதிவம் சிவம் ஸ்ரீ சந்தரசேகரம் குரும் ஸ்மராமி."

என்ற ஸ்லோகத்தை ஜபம் செய்ய ஆரம்பித்தது

சற்று நேரத்தில் நாங்கள் செல்ல வேண்டிய ரயிலும் வந்தது. ஒரு நிமிஷம்தான் நிற்கும்.எல்லார் முகத்திலும் ஒருவித நெருக்கம், பயம்.விசா பாஸ்போர்ட் பணம் இல்லாமல் எப்படி பயணத்தை தொடருவது என்று .எனக்கும் என்மேலேயே நம்பிக்கை குறைத்து.எனது கர்வம் மறையத்துவங்கியது . ஸ்விஸ்ர்லேண்டில் பரமாச்சார்யார் நம்மை காப்பாத்துவாரா. எப்படி முடியம் இத்யாதி யோசனைகள்.மனதில் ஓடியது .அப்போது அந்த அதிசயம் நடந்தது..

அந்த ரயிலின் கார்ட் எங்களை நோக்கி வண்டியை விட்டு இறங்கி வந்து . நிங்கள் இந்தியர்கள்தானே என்றார். . ஆமாம் என்றோம் . நிங்கள் எதையாவது தொலைத்து விட்டீர்களா என்றார். ஆமாம் என்றோம். அவர் உடனே சீக்கிரம் ஏறிக்கொள்ளுங்கள் வண்டி கிளம்பிவிடும் என்று அவசரப்படுத்தினார்..நாங்கள் அனைவரும் வண்டியில் ஏறிக்கொண்டோம் . எங்களது சீட்டில் அமர்ந்த பிறகு அந்த கார்ட் எங்களிடம் வந்தார். வந்தவுடன் .நீங்கள் தொலைத்தா பொருள் என்னது என்று கே ட்டார். நான் சொன்னேன் கைப்பை என்று. அடயாளம் சொல்ல முடியுமா என்றவுடன் நான் கருப்பு நிற ஹான்ட் பேக் இண்டியன் பேங்க் .என்று போட்டு இருக்கும் என்றும் சொன்னேன்.அவர் உடனே எங்களிடம் என்னுடைய கைப்பையை காண்பித்து இது உங்களுடையதா பாருங்கள் என்றார்.அவர் காட்டியது பை மட்டும் அல்ல என்னுடைய உயிரையே காண்பித்தது போல இருந்தது .பையை என்னிடம் கொடுத்துவிட்டு எல்லா சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்.. பார்த்ததில் எல்லாம் சரியாக இருந்தது வேறு எப்படி இருக்கும் . எனக்கு ஒன்றுமே புரியவில்லை.மயக்க நிலையில் இருந்தேன்.என் கண்களுக்கு அவர் GUARD ஆக தெரியவில்லை நான் வணங்கும் GOD பரமசார்யார் ஆகத்தான் தெரிந்தார்.மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை.

மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை.

அன்று என்னைக் காத்ததோடு இல்லாமல் எனக்குள் இருந்த என் மமதையும் கர்வத்தையும் அடக்கினார்

மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை.மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை.

 


மீதி அடுத்த பகுதியில்

பக்தர்களுக்கு பற்று அற்றவர் (பரமாச்சாரியார்) பிரதேசத்திலும் துணை--- இது கதை அல்ல நிஜம் 4

Hergiswil வந்து இறங்கினோம் அங்கே இருந்து வேறு ரயில் பிடித்து இண்டெர்லேகன் போக வேண்டும். ஸ்டேஷனில் எல்லோரும் இறங்கினால் ஜேஜே என்று கூட்டம் அலை மோதியாதா அதான் இல்லை நாங்க 9 பேர்தான் கூட்டமே .எங்களை இறக்கி விட்ட ரயில் கிளம்பி சென்று விட்டது'. குளிரான குளிர் எனவே அங்கே இருந்த கண்ணாடி அறைக்குள் சென்று அடுத்த ரயிலுக்காக காத்திருந்தோம்.எங்களைத்தவிர ஒரு ஈ காக்கா கிடையாது .அத்வானம்தான். உட்காந்து சிரமபரிகாரம் பண்ணாலாம் என்று உட்காரும்போதுதான் எதோ ஒன்று குறைவது போல் ஒரு உணர்வு. அப்போதுதான் தெரிந்தது என் கையில் வைத்திருந்த என்னுடைய கைப்பையைக்காணவில்லை என்று . அதை எங்களை இறக்கி விட்ட ரயிலிலேயே விட்டுவிட்டேன்.அதில் ஒன்றும் அப்படி முக்கியமான பொருள்கள் இல்லை எல்லாருடைய பாஸ்போர்டுகள், யுரோபியன் விசா ,25000யுரோ டாலர்கள் 15,55 000 ரூபாய்கள்) மட்டும்தான் இருந்தது. அருணிடம் சொன்னேன். எனக்கு கண்கள் இருட்டிக்கொண்டு தலை சுற்ற ஆரம்பித்தது .எல்லாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஸ்டேஷன் மாஸ்டரிடம் சொல்லலாம் என்று பார்த்தால் அங்கு யாருமே கிடையாது. இனி நாளை தொடரும்

Friday, January 11, 2013

ஸ்ரீ ஹனுமனை துதி மனமே தினமே



ஸ்ரீ ராம ஜெயம்

இன்று ஹனுமத் ஜயந்தி

மாதவம் செய்த மாதவள் அஞ்சனை மடிதனில் மலர்ந்தவனாம்
மாதவன் ராமன் தூதுவன் என்றே மாகடல் கடந்தவனாம் ---(மாதவம்)

ராமனைப் போற்றிப் பாடிடும் நேரம் ரகசியமாய் வருவான்
கைத் தாளங்கள் போட்டு ஆனந்தமாக மனங்குளிர்ந்தே மகிழ்வான்
கண் மடல் மூடிமெய் மலர் சூடி செவி மடல் திறந்திடுவான்
நாதனின் காதை யாவும் கேட்டு விழி மழை சொரிந்திடுவான் ---(மாதவம்)


ராமனை நெஞ்சில் மாமலை கையில் சுமந்திடும் ஜெய ஹனுமான்
பீமனை அள்ளி மார்புடன் சேர்த்து அணைத்திடும் ஜெய ஹனுமான்
சந்தன வாசம் வீசிட எங்கும் வலம் வருவான் ஹனுமான்
நித்திலம் தன்னில் நித்தியம் வாழ்ந்து ஜெயம் தரும் ஜெய ஹனுமான்.. மாதவம்)


கோமகனாக வாழ்ந்திடும் சீலன் கோயில் நாம் அடைவோம்
கோசலை ராமன் நாமத்தைப்பாடி அவனருள் வேண்டிடுவோம்
வீழ்ச்சியை மாற்றி மீட்சிகள் சேர்க்கும் பாடிடு அவன் மகிமை
வான் மழை போல பூமழை வார்க்கும் மாருதி அவன் கருணை ---(மாதவம்)


வீர பராக்கிரமம் இருப்பினும் அரசகுலத்து அந்தஸ்துகள் இருப்பினும், புத்தி விசாலம் இருப்பினும் ,ஒருபடையை நிகர்த்த பலமுள்ள உடன் பிறப்பு கூடவெ இருப்பினும்,விதியின் வலியால் மனைவியை ஸ்ரீ ராமன் பிரிய நேரிட்டது.

மாதர்களை மனதளவிலும் தீண்டாத பிரும்மச்சாரி, கடும் ஒழுக்க சிந்தனை உடையவரும், புலன்களை அடக்கி ஆண்டு அதன் மீது ஆட்சி செலுத்த வல்லவரும்,இணயில்லாத பலம் மிக்கவரும்,அதே நேரம் பணிவும், பக்தியும் மிகுந்தவரும், இனிமையாகபேசுபவரும்,பேச்சில் வல்லமை உடையவரும்,சோர்வே இல்லாதவரும், தர்மத்தின் பக்கம் நிற்பவருமான ஸ்ரீஆஞ்சநேயரின் துணை தேவைப் பட்டது.ஒழுக்கமும், தர்மமும்தான் பொய்மையை வெல்ல மிக உதவி செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.வெறும் புஜ வலிமை போதாது.

மனித மனம் ஒரு வானரம். அதை அடக்கி ஆண்டு ஆட்சி செய்கிற விஷயம் ஹனுமான்.அப்படி அடக்கி ஆண்டதை அலட்டாது மிக வினயமாக எங்கு பார்த்தாலும் கைகூப்பி அமைதியாக புன்சிரிப்போடு ஹனுமான். தன்னை பாராட்டிக் கொள்ளாமல் தன் பலம் எத்தகையது என்றுதானே ஆராய்ச்சி செய்யாமல் பலம் இருக்கிறதா, இருந்து விட்டு போகட்டுமே என்று மிக மிக வினயமாக நின்ற நிறைகுடம் ஸ்ரீஹனுமான். அலட்டலும், அஹம்பாவமும் வாழ்க்கையாகப்போன இந்தக் காலத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் பராக்கிரமத்தை படிக்கிறபொழுது நாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் மிகுந்து வருகிறது. சுந்தர காண்டம் ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட துக்கத்தை மட்டும் சொல்லித்தரவில்லை. அதற்கு ஏற்பட்ட விடிவு நேரத்தையும் விவரிக்கிறது. மிகப் பெரிய நம்பிக்கையை ஊட்டுகிறது. நீங்கள் வெற்றி பெற்றாலும் புன்சிரிப்போடு நன்றி என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்க உங்களுக்கு உதவும்.
ஜய ஜய ஹனுமான் கோஸாயி
கிருபா கரஹூ குருதேவெ கீ நாயீ