Tuesday, February 07, 2012

தைப்பூசச் சிறப்பு

இன்று(07/02/12) தைபூசம். தைப்பூசம் பல சிறப்புக்களைக் கொண்டது. இந்தியா மட்டுமில்லாமல் தமிழர்கள் வாழும் இடங்களான இலங்கை, சிஙகப்பூர். மலேசியா, பர்மா, தாய்லாந்து போன்றநாடுகளிலும் சிறப்பபாக கொண்டாடப்படுகிறது.


இராமனுக்கு தம்பியாகப் பிறந்து அவன் பொருட்டு தனக்கு கிடைத்த அரசுப் பதிவியையும் துச்சமாக மதித்து துறந்த,அப்பேற்பட்ட பரதன் பிறந்த நட்சத்திரம் "பூசம்". பூசத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சகோதர/சகோதரி பாசம் மிக்கவர்களாக இருப்பார்கள்.
தை மாசத்தில் பௌர்ணமியன்று பூசம் நட்சத்திரம் வரும் நாள்தான் தைப்பூசம்.சரி தைப்பூசத்தின் சிறப்பைப் பார்க்கலாம்.


தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் வள்ளியை திருத்தணியில் மணம் புரிந்து திருக்காட்சி தந்த நாள் இந்த தைப்பூசத்தில்தான்

அகத்தியர் சொல்படி இடும்பன் இருமலைகளையும் காவடி போல் தூக்கி வந்து பழனி முருகன் அமர்வதற்கு வசதியாக திருஆவினன்குடியில் வைத்த நன்நாள் "தைப்பூசம்"
சிவனின் நெற்றிகண்ணில் தோன்றி சரவணப்பொய்கையில் உதித்து சூரபத்மனை சம்ஹாரம் செய்ய முருகனுக்கு ஆதிபராசக்தி தன் ஆற்றல் முழுவதையும் திரட்டி "வேல்" தந்த நன்நாள் "தைப்பூசம்"


வண்டுகள்  மெய்க்காத மலர்களால் நடராஜனுக்கு பூசை செய்யவேண்டும் என்பதற்காகவே ஆதிசேஷன் புலிபாத முனிவராகப் 
 அவதாரம் செய்து  அம்பலத்தானின்  நடனத்தை தேவர்கள் சூழ காணவேண்டும் ஆசையை நடராஜப்பெருமான் பூர்த்தி செய்தநாள்"தைப்பூச நன்நாள்.



தன்னை மணக்க விரும்பி அது நடக்கமுடியாமல் போய் பூநாகம் தீண்டி மரித்த பூம்பாவையின் அஸ்திகலசத்திலிருந்து திருஞானசம்பந்தர் எழுப்பிய நன்நாள்'தைபூசம்"


சிவனிடமிருந்து மந்திர உபதேசம் பெரும்போது பார்வதிதேவி அதில் நாட்டம் கொள்ளாமல் அருகே இருந்த மயில்மீது ஆசைகொண்டு அதில் லயிக்க, அதனால் சிவன் பார்வதியை "நீ மயிலாய் பூவுலகத்தில் பிறந்து என்னை அடைவாயாக"என்று சாபாபமிட அதன்படி மயிலையில் மயிலாகப்  பிறந்து தவம் செய்து கற்பகம்பாள் என உருமாறி காபாலீஸ்வரனை அடைந்த நன்நாள்"தைபூசம்"
அருட் பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை என்று அழைத்த சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த திரு வள்ள்லார் ராமலிங்கஸ்வாமிகள் சித்திவளாகம் என்ற இடத்தில் அன்னதானப் பணியை துவங்கிய நன்நாள்" தைப்பூசம்". மேலும் அவர் வடலூரில் ஜோதியில் இறைவனுடன் தன்னை ஐக்கியப்படுத்திகொண்ட நன்நாளும்"தைப்பூசம்"தான்



திரு அரங்கத்தில் இருக்கும் அரங்கநாதப்பெருமான் தன் அன்புச் சகோதரியான சமயபுரம் மாரியம்மனை சீர்வரிசையுடன் காவேரிக்கரையில் வந்து அருட்காட்சி செய்த நன்நாள் 'தைப்பூசம்"


மத்யார்சுணம் என்று அழைக்கப்படும் திருவிடைமருதூர் மஹாலிங்கேஸ்வரருக்கு பத்துநாள் திருவிழாமுடிவில் பக்கதர்களுக்கு தரிசனம் அளிக்கும் நன்நாள் "தைப்பூசம்"


இப்படி இந்த தைப்பூசம் சைவம், வைணவம், கௌமாரம், சாக்தம்,ஆகிய எல்லா தெய்வங்களுக்கும் உகந்த நாள்



இந்நாளில் அனைத்து தெய்வங்களையும்வணங்கிஆசியைப்பெறுவோம்
 







Thursday, February 02, 2012

ஜகத்குரு

 உங்களை ஜகத்குரு என்கிறார்களே நீங்கள் என்ன அகில ஜகத்துக்கும் குருவா என்றூ காசியில் பண்டிட்கள் பரமாச்சாரியார் காசிக்கு விஜயம் செய்தபோது கெள்விகணை விடுத்தார்கள்.அவர்களுக்கு பணிவாக பதில் சொன்னார் ஜகத்குரு" உலகில் உள்ள எல்லாரையும் எல்லாப்பொருளையும் குருவாக கருதுகிறேன் அவ்வளவுதான்". அந்த நிதர்ஸனம் நமக்கு புரிவதற்கு பல ஆண்டுகள் ஆகியது.மேற்கொண்டு படியுங்கள் நீங்களும் உடன்படுவீர்கள் அவர் மட்டும்தான் ஜகத்குரு என்று.
காஞ்சி மகா பெரியவா ஓரிடத்தில் தங்கியிருந்தார்.அன்று 'ஏகாதசி'.தண்ணீர் கூட சாப்பிடமாட்டார்.அங்கே ஒருவர் மின்சாரம் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.மணி ஆகிக் கொண்டே இருந்தது. அதைப் பார்த்த பெரியவா,"இந்த ஆள் சாப்பிடவே போகாமல் வெலை செய்துகொண்டிருக்கிறார்! சாப்பிட்டு விட்டு வரச்சொல்லுங்கள்."என்கிறார். அதைக் கேட்டுவிட்டு அவர் ", இன்று ஏகாதசி, நான் சாப்பிட மாட்டேன்." என்றார். அவர் மராட்டிக்காரர்.மராட்டியர் ஏகாதசி உபவாசங்களில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள்.ஆச்சர்யப்பட்ட பெரியவா, "சரி,சாப்பிட வேண்டாம்.டீ யாவது குடித்துவிட்டு வரச்சொல்லுங்கள்." என்றார். அவரோ, "நான் தண்ணி கூடக் குடிக்க மாட்டேன்.நீங்ககவலைப்பட வேண்டாம்."என்றார். அதைக் கேட்டதும் அன்று முதல் ஏகாதசியில் குடித்த வந்த பாலையும் பெரியவா விட்டுவிட்டார்.அந்த பழுது பார்க்க வந்தவரிடமிருந்து ஓர் உபதேசம் பெற்றதாக நினைத்தாரோ இந்த ஜகத்குரு!


இப்படி ஏகாதசி தண்ணீர்கூட இல்லாமல் கழிந்தது. மறுநாள் 'துவாதசி'. ஏகாதசியில் பட்டினி கிடக்காவிட்டால்கூட நாமெல்லாம் துவாதசியில், 'பாரணை' என்று சொல்லிக்கொண்டு சீக்கிரமாகச் சாப்பிட உட்கார்ந்துவிடுவோம். சாஸ்திரப்படி, துவாதசி ஸ்ரவண நட்சத்திரத்தில் வந்துவிட்டால் ஏகாதசிக்கு பட்டினி கிடக்காவிட்டாலும் துவாதசியில் தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது என்பர். அப்படிப்பட்ட துவாதசியாக அமைந்துவிட்டதால் பெரியவாளுக்கு அன்றும் உபவாசம். அடுத்த நாள் 'பிரதோஷம்'. அதில் பகலெல்லாம் விரதமிருந்து இரவு 'சிவபூஜை' பண்ணி, சிவ தரிசனமான பின்தான் உண்பது வழக்கம். அதிலும் ஞாயிற்றுக்கிழமையில் பிரதோஷம் வந்துவிட்டால் சூரியாஸ்தமனம் ஆன பிறகு சாப்பிடக் கூடாது. நாலாம் நாள் 'மகாசிவராத்திரி'.அன்றும் உபவாசம். தீர்த்தமாட

மட்டும்தான் சுவாமிகள் தண்ணீரைப் பார்த்தார்.அவ்வளவு கடுமையாக உபவாசங்களைத் தொடர்ந்து அனுஷ்டித்தவர் அவர்.'அப்படிப்பட்டவர் தான் வேளாவேளைக்குப் பசியெடுக்காத நிலை.' எனக்கு இன்னும் வரவில்லை என்கிறார்.