Showing posts with label சங்கீத ஜாதி முல்லை. Show all posts
Showing posts with label சங்கீத ஜாதி முல்லை. Show all posts

Monday, January 02, 2012

மார்கழி மாதக் கச்சேரி கேட்கலாமா? 2



கச்சேரியா கேண்டீனா?




யரோ சொன்னார்கள் நண்பகல்கச்சேரிக்ககெல்லாம் கூட்டம் வருவதில்லை என்று.அதெல்லாம் தப்பு சரியாக சரியான இடத்தில் பார்க்காமல் சொன்ன வார்த்தை அது.நான் நாரத கான சபா மத்யான கச்சேரிக்கு போயிருந்தேன் கூட்டம்னா அப்படி ஒரு கூட்டம் . நானும் சுத்தி சுத்திப் பார்த்தேன் ஒரு சீட் கூட கிடைக்கவில்லை உட்காருவதற்கு. ஸ்பீக்கரில்கச்சேரி பாடிக்கொண்டு இருந்தது.யாரும் சீட்டை விட்டு எழுவதாக இல்லை.ஒரு ஐடம் முடிஞ்சவுடன் அடுத்த ஐடம் ரெடியாக வந்துகொண்டிருந்தது.ரசிகர்களும் அப்படியே லயித்து அநுபவித்துக் கொண்டு இருந்தார்கள். ஆஹா பேஷ் பேஷ்ன்னு அங்கீகாரம் வேறே.


சரி இத்தனையும் எங்கே சபாஹாலுக்குள்ளேன்னு சொல்லுவேன்னு நீங்க நினச்சா அது உங்க தப்பு. இதெல்லாம் சபா ஹாலுக்கு வெளியே பின்னாடி ஞானம்பிகா கேடரிங் ஸ்டாலுக்குள்.ஹாலுக்கு உள்ளே 1000 பேர் அமரும் சபையிலொரு 20 அல்லது 25 பேர் (வித்வான்கள் கோஷ்டியும் சேர்த்து) சங்கீதத்திற்கு தங்களை அர்பணித்துக்கொண்டு இருந்தார்கள்

இனி என்னுடைய தங்கமணியின் நண்பியின் மகன் பாரத் சுந்தரின் கச்சேரியை கேக்கலாமா? இடம் நாரத கானசபா,மினி ஹால்,நேரம் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை.


பரத் சுந்தரைப் பற்றி ஒரு அறிமுகம். ஜெயா டி வி நடத்திய கர்நாடக இசைப் போட்டியில் முதல் பரிசை அள்ளிச்சென்றவர். வளர்ந்து வரும் கலைஙர்களில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.அமைதியாக ஆனால் அனவரையும் கவரும் வண்ணம் பாடும் திறமையுடையவர். சரி இனி கச்சேரியை கேட்க போகலாம்.


மினிஹால் நிரம்பி வழிந்தது.சில பேர் நின்று கொண்டு கூட கேட்பதற்கு காத்திருந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பக்க வாத்யம் திரு பரூர் அனந்த கிருஷ்னன், மிருதங்கம் திருவநந்தபுரம் பாலாஜி.



நாளை  தொடரும்

Thursday, December 29, 2011

மார்கழி மாத கச்சேரிக்கு போகலாமா 1


இன்று காலை அவசர அவசரமாக ஹைதராபத்திலிருந்து காலை பிளைட் பிடித்து வந்ததின் முக்கிய காரணமே நண்பர் சஞ்சை சுப்ரமணியத்தின் கச்சேரி கேட்கவேண்டும் என்பதற்காகத்தான்.உள்ளே நுழைந்ததுமே என் தங்கமணிஉமா இன்னிக்கி என் fரண்டுடோட பையன் பரத்சுந்தர் கச்சேரி இருக்கு நான் போகணும் என்று தீர்மானமாக சொல்லிவிட்டாள். நான் மத்திரம் என்ன லேஸ்பட்டவனா நானும் என் Fரண்டோட பொண்ணு சுஷ்மா சோமா பாடுகிறாள் அப்பறம் 4 மணிக்கு சஞ்சய் கச்சேரி அதுக்கும் போகனும்.நல்லவேளை எல்லாமே நாரதகான சபாவில்தான் அதனால் அதிசயமாக சமாதானமாக காரில் கிளம்பினோம்




முதல் கச்சேரி சுஷ்மாவினுடையது மதியம் 12.30 லிருந்து 2 .00 மணிவரை. நாங்கள் போகும்போதே கச்சேரி ஆரம்பித்து பாதி ஆகிவிட்டது.காம்போதி ராகத்தின் ஆலாபனை ஆரம்பமாகியது, சுஷ்மா சிங்கபூரில் பிறந்து வளர்ந்தாலும் ந்மது கலாசரத்தைவிடாமல் அனுசரிக்கும் சார்ட்டர்டு அக்கௌண்டன்ட் சோமசேகரனின் மகள். 1980 வருடத்திலிருந்து நான் சிங்கப்பூர் செல்லும்போதெல்லாம் தவறாமல் என்னை கவனித்துக்கொள்ளும் குடும்ப நண்பர்.


கதைக்கு வருவோம். சுஷ்மா முறையாக சங்கீத பையிலும் மாணவி இப்போது சங்கீத கற்றுக்கொள்ளுவதற்காக சென்னை வாசம்.


காம்போதி ராகத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ராக ஸ்வரூபம் கெடாமல் பாடிய ள்விதம் அபாரமாக இருந்தது. பெரிய வித்வான்கள் எடுத்து ஆளும் ராகத்தை மெருகு குலையாமல் ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்த விதம் ரம்யமாக இருந்தது. ஸ்வரபிரஸ்தாரங்களும் ரசிகர்கள்களின் ஏகோபித்த கரகோஷத்தை அள்ளிச்செண்றது. தனி ஆவர்த்தனம் வாசித்த ரிஷிகேஷ் சிறுவயதிலேயே தன் தனியை சிறப்பாக அளித்தார். சுஷ்மா பின்னர் சாருமதி ராகத்தில் ம்ன சாரமதி என்ற தஞசாவூர் சங்கர ஐய்யர் கீர்த்தனையை அளித்து தில்லானாவுடன் கச்சேரியை நிறவு செய்தார்.


அடடா சொல்ல மறந்து விட்டேனே! வயலின் வாசித்த பொடியன் ச்ரிராம் ச்ரிதர் அபார வாசிப்பு.பொடியனுக்கு 15 வயசுதானம் சுஷ்மா பாட்டுக்கு ஈடுகொடுத்து பிடிகளையும்,ஸ்வரங்களையும் அப்படியே திருப்பிக் கொடுத்த விதத்தைப் பார்த்தால் பிற்காலத்தில் வயலினில் வில்லாதி வில்லானக வர வாய்ப்புண்டு. முடிவில் அவனிடம் விசாரித்தபோது வெட்கத்துடன் சொன்னான் லால்குடி யுனிவெர்சிடியில் வயலின் பயில்கிறானாம். பின் கேப்பானேன் எப்படி இருக்கும் வாசிப்பு !கச்சேரியை கேட்டு அடுத்த கச்சேரிக்கு தயார் செய்துகொள்ளும் போது மனதில் ஒரு நிம்மதி கர்நாடக சங்கீதம் இன்றைய இளையசமுதாயத்தினரிடம்


கையில் பத்திரமாக் இருக்கிறது என்ற உணர்வுதான் அது.


நாளை அடுத்த கச்சேரி கேட்கலாமா?