
ராகம்:-சங்கராபரணம் தாளம்:- மிஸ்ர சாபு
பல்லவி
மஹாலக்ஷ்மி ஜகன்மாதா
மனமிரங்கி வரமருள்...............(மஹாலக்ஷ்மி)
அனுபல்லவி
மஹாவிஷ்ணுவின் மார்பெனும்
மணிபீடமதனில் அமர்ந்திடும்
மன்மதனை ஈன்றருளும் தாயே
தயாநிதியே மஹா மாயே........(மஹாலக்ஷ்மி)
சரணம்
பாற்கடல் தரும் கிருபாகரி
பரிந்துவந்தென்னை ஆதரி
பங்கஜ மலர் வளர் அன்னையே-- கடைக்கண்
பார் ராமதாஸன் பணியும்......(மஹாலக்ஷ்மி)
இந்தப் பாடலை மிக இளம் வயிதேலேயே இசை உலகை தன் குரலினால் கவர்ந்த அதே மாதிரி இளம் வயதிலேயே மறைந்த திருமதி.வஸந்தகோகிலத்தின் குரலில் <"இங்கே கேட்கவும்">">
சங்கராபரணம் ராகம் சிங்கார வேலன் படத்தில் "புதுச்சேரி கச்சேரி உன்னு பிடிச்சேன்" பாட்டில் வெளுத்துக்கட்டியிருக்கிறார் திரு.SPB
சரி நாங்கள் மஹாலக்ஷ்மியின் நாலுபதிவுக்கும் வந்து கண்டும் ,கேட்டும் படித்தும் போனோமே எங்களுக்கு என்ன கிடைக்கும் அப்படின்னு அம்பி கேட்பான் இதோ கீழே பாருங்கள் உங்களுக்காக மஹால்க்ஷ்மி தன் இருகைகளாலும் தங்கக் காசுகளை தாரளமாக அள்ளித்தருகிறாள் அள்ளிக்கொண்டுபோங்கள்.
