Showing posts with label வெள்ளித்திரையில் புதுமை. Show all posts
Showing posts with label வெள்ளித்திரையில் புதுமை. Show all posts

Saturday, September 22, 2007

கந்தசாமி (1)






எனது அடுத்த வீட்டுக்காரரும் அருமை நண்பருமான திரு. சுசி. கணேசன் அவர்கள் தனது நான்காவது படத்தை டைரெக்ட் செய்து "கந்தசாமி" என்ற பெயரில் வெளியிடுகிறார்.இதுவரை மூன்று வெற்றிப்படங்களை "விரும்புகிறேன், 5 ஸ்டார் மற்றும் திருட்டு பயலே" எடுத்தவர். இந்த மூன்று படங்களுமே தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருது பெற்றவை.ஒவ்வொரு படத்திலும் ஒரு கருத்தை மையப்படுத்தி அதை சொல்லும் விஷயத்தில் புதுமையைப் புகுத்தி மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டவர்.
புதுமைகள் செய்வதில் வல்லவர். இந்த முறை பட வெளியீட்டு விழாவின் வரவேற்பு மடலில் புதிய உத்தியைக் கையாண்டுள்ளார். மடலையே இ மடலாக ஒரு சிறிய கணிப்பொறி மடலாக தன்னுடைய மெட்ராஸ் இன்ஸ்டியுட் ஆF டெக்னாலஜியின் படிப்பை நிலைநிறுத்தும் வண்ணம் படைத்தது இவருடைய இளமை இனிமை புதுமை முயற்சியை காட்டுகிறது.ஒரு மடலின் விலையே பதினெட்டாயிரம் ரூபாய்களாம்.எனக்கு அந்த வரவேற்பு மடலை அனுப்பி விழாவிற்கு வருமாறு அழைத்திருக்கிறார்.நல்ல வேளை பரிசு வரியை எடுத்துவிட்டார்கள் இல்லை என்றால் மடல் அனுப்பியவர்களுக்கு எல்லாம் வருமானவரித்துறையினர் மடல் அனுப்பியிருப்பார்கள் தங்கள் அலுவலகத்திற்கும் வந்து போகும்படி.

விக்ரம் அவர்களை புதியகோண்த்திலும் அவருடைய விஸ்வரூபத்தையும் காட்டப்போகும் படமாக இருக்கும். மேலே உள்ள "கந்தசாமி" படத்தின் "டிரைலர்" அறிமுகபடத்தைப் பார்த்துக்கொண்டு இருங்கள் அதற்குள் நான் நாளை விழாவிற்கு சென்று படத்தைப் பற்றி மற்ற செய்திளை அடுத்த பதிவில் அளிக்கிறேன்