Showing posts with label சங்கீதம். Show all posts
Showing posts with label சங்கீதம். Show all posts

Saturday, March 28, 2009

பாட்டம்மாள்

காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் ஒரு சிறு கிராமம். தாமல் என்று பெயர். அழகான சிவன் கோவில் டிரங் சாலையிலிருந்து பார்த்தாலே தெரியும்.இந்த ஊரில்தான் 28-03 1919ல் திருமதி D. K பட்டம்மாள் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார்.பெண்கள் வெளியே சென்று வாரத அந்தக் காலத்திலேயே 5 வயது தம்பி D K ஜெயராமன் துணையோடு காஞ்சிபுரம் சென்று சங்கீதம் கற்று வந்தார்.பின்னர் காஞ்சிக்கே குடிபெயர்ந்து பிரபல வித்வான் காஞ்சிபுரம் நைனா பிள்ளையிடம் சங்கீதம் கற்றுக் கொண்டு பிரபலமானார். சங்கீத உலகத்தின் முடிசூடா விதுஷிகள் எம் எஸ் சுப்பலக்ஷ்மி, எம் எல் வஸந்தகுமாரி,டி.கே பட்டம்மாள் என்று பெயர் பெற்றார்.


பாரதியின் பாட்டுக்களை பாடுவதற்கு பயந்த அந்த பிரிட்டிஷ் காலத்திலேயே துணிந்து பாரதியாரின் பாடல்களை மேடைதோறும் பாடி பிரபலப் படுத்தினார். நல்ல கணீரென்ற குரல், அக்ஷர சுத்தம், சிதைவு படாத கீர்த்தனைகள் ராகபாவம் இதெல்லாம்தான் இவருக்கு சொத்து.அதுவும் தீக்ஷதர்கீர்த்தனைகளை அவரை மாதிரி பாட மற்றுமொருவர் பிறக்கத்தான்வேண்டும். அதே மாதிரி பெண்களூக்கு மிருதங்கம் வாசிப்பதில்லை என்ற வைராக்கியத்தை விட்டு விட்டு பாலக்காடு மணி ஐய்யர் இவருக்கு வாசித்த பெருமையினாலேயே இவரது சங்கீதம் எப்படிப் பட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.

அதனால்தான் இவரை பட்டம்மாள் என்று சொல்லுவதைவிட பாட்டம்மாள் என்று சொல்லுவதே சாலப் பொருத்தம். பட்டங்களுக்குத்தான் பட்டம்மாளால் பெருமை.

இன்று அவருக்கு வயது 90. அவருக்கும் அவரது கணவர் திரு. ஈஸ்வர்னுக்கும் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அருளுமாறு கஞ்சி காமாக்ஷி சமேத ஏகாம்பிரேஸ்வரரை வேண்டிக்கொள்ளும் என்னுடன் நீங்களும் சேருவீர்கள் என்று நம்புகிறேன்.


அவரைப் பற்றிய குறும் படம் . அதற்கு பின்னால் அவருடைய பேத்தி திருமதி. நித்ய ஸ்ரீ அவரை நேர்க்காணல் கண்டு அதில் அவரைப் பற்றிய அரிய செய்திகளையும் பொதிகை டி வி நிகழ்ச்சியின் படத்தையும் பார்க்கலாம்.




-





-




திரு. பாபநாசம் சிவனின் முத்தான ஒரு பாடல்.வசந்தா ராகத்தில் அமைந்தது . வசந்தாவின் ஜீவா-ஸ்வரமான மா தா என்ற ஸ்வரங்களை வைத்து விளையாடி இருக்கிறார் . இதற்குத்தான் ஸ்வராக்ஷரம் என்று பெயர். -ஸ்வரங்களே வார்த்தைகளாக வரும்.

ராகம்;- வஸந்தா தாளம்:- ஆதி 2 களை

பல்லவி

மாதயயை நிதி எனும் நீ தயையை புரிந்தருள் மாதவன் மருகனேமுருகனே குகனே மலைமகள் மகனே........(மாதயயை நிதியெனும்)

அனுபல்லவி

போதயன் பணிமலர்ப்பாதனே மறைமுகன் புகலரும் ப்ரணவ மகிமை மெய்ப்பொருளை புகழ் தாதை காதில் ஓதும் குருநாத...(மாதயயை நிதியெனும்)

சரணம்

கந்தனே கலியுகந்தனில் இருகண்கண்ட

தெய்வமென எண்டிசை புகழும்செந்திலாதிப

சிறந்த வேலணியும்சேவலா

அமரர் காவலா ஷண்முகா...(மாதயை நிதியெனும்

எனக்கு மிகவும் பிடித்த இந்த பாபநாசம் சிவனின் வஸந்தா ராகத்தில் அமைந்த மாதயயை நிதி எனும் நீ தயயை புரிந்தருள் என்னும் முருகன் மீது அமைந்த மிக அற்புதமான பாட்டை அவர் குரலில் இங்கே கேளுங்கள்">

Sunday, February 10, 2008

கவலையை போக்க மருந்து


சமீபத்தில் மதுரையம்பதி தன்பதிவில் மனக்கவலையைப் பற்றி எழுதியிருந்தார். இந்த மாதிரி சமயங்களில் என்ன செய்து மனதை பழைய நிலைக்குக் கொண்டு வரலாம் என்றுயோஜித்ததில் திரு. பாபநாசம் சிவனின் இந்தப் பாடல் ஞாபகத்திற்கு வந்தது.
சிவன் அவர்கள் தனக்கே இந்த மாதிரி ஒரு நிலை வந்ததாக நினத்து
அருமையான பாடல் மூலமாக வெளிக் கொணர்கிறார்.கவலைக்கு மருந்தும் சொல்லுகிறார்

அம்மா கற்பாகாம்பிகையே என் மனம் சஞ்சலப்பட்டால் நான் போய் எவரிடம் போய் சொல்லுவேன் நான் என்ன பண்ணுவேன். உலகத்தையே படைத்து காத்து ரட்சிக்கும் அன்னையே என் மீது மட்டும் ஏன் கருணை வைக்கமாட்டேன் என்கிறாய், ஒருவேளை இதுவும் கலியின் விளையாட்டோ,அல்லது உன்னை கருணாநிதி என்று அழைப்பதுகூட தவறோஎன்று நிந்தாஸ்துதியே செய்கிறார்.

ஆனால் கடைசியில் மனம் தெளிந்து சொல்லுகிறர். அம்மா என்ன நடந்தாலும் நான் உன்னுடைய பாதத்தில்தான் விழுவேன்,உன்னை மட்டுமே தொழுவேன் அம்மா அம்மா என்று அழுது உன்னிடத்தில்தான் புலம்புவேன்.நீ என்னை கைவிடமாட்டய். என்ன ஒரு அசையாத சஞ்சலமில்லாத பக்தி. அதைத்தான் நாமும் செய்ய வேண்டும்
சரி இனி பாட்டைப் படியுங்கள்

ராகம் ஹரிகாம்போஜி தாளம் ஆதி

பல்லவி
எனது மனம் கவலை எனுமிருள் சூழ்ந்தால்

எவரிடம் முறையிடுவேன் என் செய்வேன் ........(எனது)

அனுபல்லவி

உனது மலரடியில் விழுவேன் தொழுவேன்

உருகி அம்மா என்றழுவேன் அன்றி.................... (எனது)

சரணம்

உலகுயிரெலாம் ஈன்ற ஜகன் மாதா

உன் உள்ளம் எனக்கு மட்டு மிரந்காதா

கலியின் கொடுமை கண்டுன் கருணை அஞ்சினதோ

கருணாநிதி யென்றுனைப் புகழ்வதும் பழுதோ.....(எனது)

திருமதி. காயித்ரியின் குரலில் <" இங்கே கேட்கவும்">