Showing posts with label நவராத்திரி 3. Show all posts
Showing posts with label நவராத்திரி 3. Show all posts

Sunday, October 14, 2007

கொலுவுக்கு வாருங்கள்(3)

இன்று மூன்றாவது நாள்.ஸ்ரீராஜராஜேஸ்வரிக்கு உரிய நாள்

திருமஹாவைத்யநாதசிவனின் அருமையான பாடல் அன்னையின் பேரில்
ராகம்:- ஜனரஞ்ஜனி தாளம்:- ஆதி

பல்லவி
பாஹிமாம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கிருபாகரி சங்கரி
பாஹிமாம்
அனுபல்லவி
ஏஹி சுகம் தேஹி சிம்ஹவாகினி தயாபிராவாகினி மோஹினி
சரணம்
பண்ட சண்ட முண்ட கண்டனி மஹிஷ பஞ்ஜனி ரஞ்ஜனி நிரஞ்ஜனி
பண்டித ஸ்ரீகுஹதாஸ போஷிணி சுபாஷிணி ரிபு பீஷணி வர பூஷணி
பாட்டும் பரதமுமாக கீழே பாருங்கள்



ஸ்ரீசக்ராதிபதியாகவும் இருப்பவளுமவளே.


எல்லோருக்கும் தெரிந்த பிடித்த அகத்திய கீதமான "ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாஸனேஸ்வரி" பாடல் இதே

ராகம்: செஞ்சுருட்டி தாளம்:- ஆதி

ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகேபுவனேஸ்வரி
அனுபல்லவி:
ஆகம வேத கலாமய ரூபிணி அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோஹரிஞான வித்யேஸ்வரி ராஜ ராஜேஸ்வரிஸ்ரீ….)
சரணம்:1 ராகம்: புன்னாகவராளி
பலவிதமாய் உன்னை ஆடவும் பாடவும் பாடிக் கொண்டாடும் அன்பர் பத மலர் சூடவும்
உலக முழுதும் உன்னை அகமுரக் காணவும் ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி (ஸ்ரீ….)
2. ராகம்: நாதநாமக்க்ரியா
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் உயரிய பெரியோர்கள் ஒன்றிடக் கூட்டிவைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன் ஊழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய் நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி (ஸ்ரீ….)
3. ராகம்: சிந்து பைரவி
துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய் தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய் அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி (ஸ்ரீ…)
இன்று பிரசாதம் மின்னலுக்காக அவல் புட்டு.நவராத்திரியில் ஒரு நாள் புட்டு படைப்பது என்பது சம்பிரதாயம். அதை எனக்கு நினைவூட்டிய மின்னலுக்கு நன்றி.அம்பி வருவதற்குள் வந்து விடு.அப்பறம் நான் கிராண்டி கிடையாது.