சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே!
Saturday, September 22, 2007
கந்தசாமி (1)
எனது அடுத்த வீட்டுக்காரரும் அருமை நண்பருமான திரு. சுசி. கணேசன் அவர்கள் தனது நான்காவது படத்தை டைரெக்ட் செய்து "கந்தசாமி" என்ற பெயரில் வெளியிடுகிறார்.இதுவரை மூன்று வெற்றிப்படங்களை "விரும்புகிறேன், 5 ஸ்டார் மற்றும் திருட்டு பயலே" எடுத்தவர். இந்த மூன்று படங்களுமே தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருது பெற்றவை.ஒவ்வொரு படத்திலும் ஒரு கருத்தை மையப்படுத்தி அதை சொல்லும் விஷயத்தில் புதுமையைப் புகுத்தி மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டவர்.
புதுமைகள் செய்வதில் வல்லவர். இந்த முறை பட வெளியீட்டு விழாவின் வரவேற்பு மடலில் புதிய உத்தியைக் கையாண்டுள்ளார். மடலையே இ மடலாக ஒரு சிறிய கணிப்பொறி மடலாக தன்னுடைய மெட்ராஸ் இன்ஸ்டியுட் ஆF டெக்னாலஜியின் படிப்பை நிலைநிறுத்தும் வண்ணம் படைத்தது இவருடைய இளமை இனிமை புதுமை முயற்சியை காட்டுகிறது.ஒரு மடலின் விலையே பதினெட்டாயிரம் ரூபாய்களாம்.எனக்கு அந்த வரவேற்பு மடலை அனுப்பி விழாவிற்கு வருமாறு அழைத்திருக்கிறார்.நல்ல வேளை பரிசு வரியை எடுத்துவிட்டார்கள் இல்லை என்றால் மடல் அனுப்பியவர்களுக்கு எல்லாம் வருமானவரித்துறையினர் மடல் அனுப்பியிருப்பார்கள் தங்கள் அலுவலகத்திற்கும் வந்து போகும்படி.
விக்ரம் அவர்களை புதியகோண்த்திலும் அவருடைய விஸ்வரூபத்தையும் காட்டப்போகும் படமாக இருக்கும். மேலே உள்ள "கந்தசாமி" படத்தின் "டிரைலர்" அறிமுகபடத்தைப் பார்த்துக்கொண்டு இருங்கள் அதற்குள் நான் நாளை விழாவிற்கு சென்று படத்தைப் பற்றி மற்ற செய்திளை அடுத்த பதிவில் அளிக்கிறேன்
Sunday, September 16, 2007
வராதுவந்த நண்பன்
தோற்றம் 12/12/1995 மறைவு16/09/2004அன்று மாலை எங்கள் வீட்டுக்கு அவள் புதிய வரவு.சிறிய கண்ணை சிமிட்டிக்கொண்டு பயத்துடன் எங்களை பரிதாபாமாக பார்த்தது.அன்றிலிருந்து அவள் எங்கள் குடும்பத்தில் ஒருவராகி விட்டாள்.என் மூன்று குழந்தைகளுக்கும் அவளோடு விளையாடுவதும்,போஷிப்பதும்தான் முக்கிய வேலையாகி விட்டது, அதிலும் என் மூத்த மகனுக்கு அதுவேதான் உலகம் என்று ஆகிவிட்டது. அவளுக்கு டெடி என்று பெயர்வைத்தோம்.அவளும் அவர்களுக்கு சமானமாக விளையாடும்.ஒரு வருடத்தில் நன்றாக வளர்ந்து விட்டாள்,புதிய வரவுகளுக்கு சிம்ம சொப்பனமாகிவிட்டாள்.இருந்தாலும் எங்களுக்கு, காவல் காப்பாது,பேப்பர் கொண்டு தருவது போன்ற சிறுவேலைகளை செய்துவிட்டு பிஸ்கெட்டுக்காக எங்கள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருப்பாள்.தரவில்லையென்றால் அதிகாரத்தோடு கேட்டு வங்கிக்கொள்ளுவாள். சொந்தப் பெண் போலவே அதற்கும் பிரசவம் பார்த்து அதன் 9 குட்டிகளையும் காலேஜில் முக்கிய பரிக்ஷை இருந்தாலும் மிக நேர்த்தியாகப் பார்த்துக்கொண்டான் என் மகன்.அதன் குட்டிகளை பிரிய மனமில்லாமல் நல்ல ஆளாகப் பார்த்து தானம் செய்தான்.வாடகை வீட்டில் இருந்ததால் சில சமயம் வீட்டு உரிமையாளருக்கும் எங்களுக்கும் சிக்கல் வந்தது.நாங்களும் வீடு மாறிக்கொண்டே இருந்தோம் அவளும் எங்களுடன் வந்து கொண்டே இருந்தாள் நாங்களும் அவளுக்காக சில தியாகங்களைச்செய்ய வேண்டியதாயிற்று. குடும்பத்தில் எல்லொரும் ஒரே சமயத்தில் வேளியே போகமாட்டோம்.அப்படியே போனாலும் மாலை சீக்கிரமெ வந்துவிடுவோம். ஆனால் இதுஎல்லாம் அவள் எங்களிடம் காட்டிய அன்பிற்கும் பாசத்திற்கும் ஈடுஇணை இல்லாதது. அலுவல் காரணமாக இரவு 3 மணிக்கும் 4 மணிக்கும் வீடு திரும்பினாலும் வாசலிலேயே காத்துக்கொண்டு இருப்பாள்.விடுமுறை வந்து விட்டால் டெல்லி,மும்பையிலிருந்து அவளுடன் விளையாட குழந்தைகள் கூடிவிடுவார்கள்.இப்படி அவள் எங்களுடன் ஒருமித்து இருந்தபோது திடீரென்று ஒரு நாள் மாலை எனக்கு வீட்டிலிருந்து போன் "அப்பா டெடிக்கு உடம்பு சரியில்லை என்னமோ பன்னறது சீக்கிரம் வா".மிகமுக்கிய மீட்டிங்கில் இருந்த நான் 8 மணிக்குதான் போக முடிந்தது அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.நீண்ட நாள்களுக்கு பிறகு நான் வாய் விட்டு ஓ என்று கதறினேன்.,என் குடும்பத்தாரும் அழுதனர்.அவளூடைய இறுதியாத்திரையை முடித்துவிட்டு கனத்த மனத்துடன் வீடு திரும்பினோம். சிங்கபூரிலிருந்த என் மகனை தேற்ற முடியவில்லை.எனக்கு அன்பு ,பாசம்,விஸ்வாசம் இவைகள் என்னவென்று போதிப்பதாவதற்க்காவே என்னுடன் 8 வருடங்கள் இருந்து விட்டுச் சென்றதோ?இரண்டு வருடங்கள் ஆனாலும் மறக்க முடியவில்லை.டெடி ஆன்மா சாந்தி அடையட்டும்.
இது ஒரு மறு ஓளிபரப்பு இன்று டெடி மறைந்த தினம். மூன்று வருடங்கள் ஓடி விட்டன. ஆனாலும் டெடி மனத்தை விட்டு ஓடவில்லை
Friday, September 14, 2007
வராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன்

கணேஷ பஞ்ச ரத்னம்
முதா கராத்த மோகம் ஸதா விமுக்தி சாதகம்
(சந்தோஷத்துடன் கையினில் மோதகத்தை வைத்திருப்பவரும் தன்னை அண்டியவருக்கு எப்பொழுதும் மோக்ஷத்தை கொடுப்பவரும்)
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
( பாலசந்திரனை விரும்பி அணிந்துகொண்டவரும்,அன்புள்ளம் கொண்டோரை காத்து ரக்ஷிப்பவரும்)
அநாய்கைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
(ஆதரவுஅற்றவர்களுக்கு நாயகனாய் இருப்பவரும் அடியவர்களின் குறைகளைத் தீர்ப்பவரும்)
நதாஸுபா பாசுரம் நாமாமிதம் விநாயகம்
(கஜமுகாஸுரனை கொன்றவருமான விநாயகனை நான் வணங்குகிறேன்)
நதேத்ராதி பீகரம் நவோதி துர்க்க பாஸ்வரம்
(வணங்காதவருக்கு பீதியைக் கொடுப்பவரும்,உதய சூரியனுக்கு ஒப்பானவரும்)
நம்த் ஸுராரி நிர்ஜ்ஜரம் நதாதிகாப துத்தரம்
(தேவர்களால் வணங்கப்படுபவரும், வணங்கியவர்களின் துக்கத்தைப்போக்குபவரும்)
ஸுரேஸ்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம்
(தேவர்களுக்கு தலைவரும்,அஷ்டநிதிகளை தருபவரும்,கஜமுகாசுரனுக்கும் தேவகணங்களுக்கும் தலைவராகவும்))
மஹேஸ்வரம் ஸ்மாஸ்ரயே பராத்பரம் நிரந்தரம்
(பரம்பொருளுக்கு நிகரானவரும், சாஸ்வதமாக வீடுபேறு அளிக்கவல்லவருமான விநாயகரை வணங்குகிறேன்)
ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்சரம்(கஜமுகாஸுரனை அழித்து உலகுக்கு நன்மை செய்தவரும்)
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம்
(அழகிய யானை முகமும் பெருத்ததொந்தியும் உடையவரும்)
கிருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஷ்கரம்
(கருணை நிறைந்தவரும், குற்றங்களை மன்னிப்பவராகவும், மகிழ்ச்சியையும் புகழையும் அளிப்பவராகவும்)
மனஸ்கரம் நமஸ்கிருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்
(தன்னை மனதால் வணங்குபவர்க்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவரை வணங்குகிறேன்)
அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
(வறியவர்களின் துன்பத்தை களைபவரும்,உபநிஷதங்களில் உயர்வாகச்சொல்லப்பட்டவரும்)
புராரி பூர்வபுரா நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்(சிவனின் தலைமகனாய் அஸுரர்களின் கர்வத்தை அடக்கியவரும்)
ப்ரஞ்சநாச பீஷணம் தன்ஞ்ஜயாதி பூஷணம்
(உலகத்தைக் காப்பவரும் நன்கு அலங்கரிக்கப்பட்டவரும்)நிதந்த காந்த தந்த காந்தி மந்தகாந்த காத்மஜம்
(முகத்திலிருக்கும் தந்தத்தின் ஒளியினால் முகமெல்லாம் பிரகாசிப்பவரும்)
அசிந்த்ய ரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்
(எண்ணத்தில் பதிக்கவொண்ணா உருவம் கொண்டவரும் யமனை அடக்கிய சிவனின் புதல்வரும்)
ஹிருதந்த்ரே நிரந்தரம் வஸந்தமேவ யோகினாம்
(முனிவர்களின் மனதை ஆனந்தநிலயமாக கொண்டவரும்)
தமேக தந்த மேவதம் விசிந்தாயாமி ஸ்ந்ததம்
(ஒற்றைக் கொம்பனான கணபதியை எப்பொழுதும் மனதில் தியானிக்கிறேன்)
மஹா கணேச பஞ்ச ரத்ன மாதரேயோன் வஹம்
(இப்படிப்பட்ட மஹா கணேச ஐந்து ரதனங்கள் போன்ற ஸோஸ்த்திரத்தை)
(எவனொருவன் பக்தியுடன் காலைவேளையில் கணபதியை நினைத்து
ஸ்மாஹிதாயுரஷ்ஸ்ட பூதி மப்யுபைதி ஸோசிராத்
இப்போது வீடியோவில் எம் ஸ் அம்மாவின் குரலில் காண்டும் கேட்டும் ரஸியுங்கள். பாட்டைக் கேட்டுக்கொண்டே படங்களையும் ரஸியுங்கள்.
கொசுறு: இதே ராகத்தில் ஒரு சினிமா பாட்டு உண்டு. எஸ்.பி.பாலு பாடியது. சொல்லுங்கள் பார்க்கலாம்
செகண்டுக்குள் ஷட்சமத்தை நோக்கி விர்ர்ர்ர் என்று இறங்கும் வண்ணத்தைக் காணலாம்.ஹார்மோனியத்தில் கைவண்ணம் பார்க்கவேண்டுமே விரல்களில் அனல் பறக்கும் போட்டி போட்டு குரலும் கையும் நம்மை அப்படியே தூக்கிச்செல்லும்.இதோ அவருடைய கணேசே கானங்களை கேட்டுவிட்டு சொல்லுங்கள். சொல்ல மறந்து விட்டேனே இவ்வளவு இருந்தும் பழகுவதற்கு மிகவும் எளிமையான மனிதர்.கூடப் பாடுபவர்களும் மிகப் பெரிய பதவிகளில் இருப்பவர்கள்.
கணபதி பூஜை என்றால் மஹாரஷ்ட்ராதான் நினைவுக்கு வரும். அதுவும் மும்பை சித்தி விநாயக் மந்திர் அழகே அழகு.வாருங்கள் பிரபாதேவிக்கு போய் மந்திரில் இருக்கும் விநாயகரை தரிசனம் செய்து கொண்டே
பாடல்களை பார்த்து கேட்டு அனுபவியுங்கள்.

விநாயாகர் பதிவுபோட்டவுடன் ஒரு அற்புதம்நிகழ்ந்தது..பக்கத்துவீட்டில் இருக்கும் ஆன்டி கொழுக்க்கட்டை கொண்டுவந்து கொடுத்தார்கள்.இதில் என்ன அற்புதம் என்கிறீர்களா! ஆமாம் அவ்ர்கள் மதத்தால் ஏசுவை வணங்குபவர்கள் ஆனால் மனத்தால் மனிதர்களை நேசிக்கும் பண்புடையவர்கள்.இன்று எனக்கு கொழுக்கட்டை இல்லைஎன்று நினைத்தேன்உண்டு என்றுஆக்கிவிட்டா விநாயகர்
Wednesday, September 12, 2007
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே
திருச்சூர் வந்த அலுவலக வேலைமுடிய இரவு மணி 11 ஆகிவிட்டது.சரி என்ன பண்ணலாம்என்றுயோஜித்தபோதுகுருவாயூருக்குப்போகப்போகிறீர்களா என்று வல்லியம்மா கேட்டது ஞாபகம் வந்தது. உடனே என்நண்பரான ஆடிட்டர் நாராயணனைக்கேட்டேன் அவரும் சரி என்று சொன்னார். சரி காலை 1.45 க்கு கிளம்பளாமா என்று கேட்டேன். அவர் என் குடும்ப நண்பர் என்றதால் என் உடல்நிலை பற்றித் தெரியும் ஆதலால் காலை 7 மணிக்கு போகலாமேஎன்றார். நான் சொன்னேன்இந்த மாதிரி சமயம் வருவது கஷ்டம் இன்னும் ரொம்ப நாளைக்கு கிடைக்காது இது எனக்கு என்று தெரியும் ஆதலால் 3.00 மணி நிர்மால்ய தரிசனமும் தைல வாகைசார்த்தும் பார்க்கவேண்டும் என்றேன்.காலை 1 15 க்கு எழுந்து குளித்துவிட்டு வேஷ்டி மேல்வஸ்திரத்துடன் காரில் கிளம்பி நண்பரின் வீட்டிக்குச்சென்று அவரையும் அழைத்துக்கொண்டு குருவாயூரை 2.30 க்கு அடைந்தேன். அப்பொழுதே அங்கு நல்ல கூட்டம் நல்ல வேளை கல்யாண நாள்இல்லை. வரிசையில் நின்று கொண்டோம். சரியாக
3.00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கூட்டம் முண்டி அடித்துக் கொண்டு ஓடியது.
முதல் நாள் செய்த அலங்காரங்களையும் மல்ர்மாலைகளியும் 15 நிமிடம்தான் வைத்து இருப்பார்கள். இரவில் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் வந்து அப்பனுக்கு பூஜை செய்துவிட்டு போவதாக ஐதீகம். அதனால்தான் ஒட்டம் அதைப் பார்பதற்கு.கிட்ட தட்ட திருப்பதிமாதிரிதான் கூட்டம்.நான் போகும் போது சந்தனத்தை கலைத்துகொண்டு இருந்தார்கள். நிர்மால்ய தரிசனம் முடிந்து தைல அபிஷேகம். குழந்தை கிருஷ்ணனுக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டுவார்கள் அதையும் கண்குளிர தரிசனம் செய்தேன்.மறுபடியும் குட்டி கண்ணனுக்கு கையில் ஒரு வழைப்பழத்தைக் கொடுத்து (எண்ணை தேய்க்கும்போது குழந்தை அழுமே அதை சமாதானப்ப்டுத்த வேண்டுமே அதான் வழைப்பழம்) வெறும் சிலா ரூபமாக ஒரு சிகப்பு கௌபீனத்தைமட்டும் கட்டி
இளமுறுவலுடன் தரிசனம். பார்க்கும் போது மனதில் ஓடிய வரிகள்"கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே கண்ணிமைத்து காண்பார்தம் கண் என்ன கண்ணே. " இளங்கோவடிகள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.
கண்ணிமைக்கும் நேரம் கூட பார்ப்பதை குறைத்துக்கொள்ளக் கூடாத அழகு அவ்னுடைய தரிசனம். எனக்கு பிரசாதமாக கிருஷ்ணனுக்கு சாத்திய சந்தணம், அன்று சாத்திய சிகப்பு கௌபீனம் நிர்மால்ய மலர்கள் ஆகியவைகளை என் நண்பர் கஷ்டப்பட்டு வாங்கிக்கொடுத்தார். பிரிய மனமில்லாமல் திருச்சூருக்குக் கிளம்பினோம். வரும் வழியில் கோயிலுக்கு வெளியில் ஒரு ஆலமரம், அதற்கு மல்ர்கள் சாத்தி பூஜை செய்து இருந்தார்கள். அது என்ன என்று என் நண்பரைக் கேட்டேன் அவ்ர் சொன்னது அடுத்த பதிவில்
அதற்கு முன் அம்புஜம் கிருஷ்ணா அவ்ர்களால் குருவாயூரப்பன்மேல் பாடிப்பெற்ற பாடலை மும்பை ஜெயஸ்ரீ அவர்கள் குரலில்/<"இங்கே கேட்கவும்".
இதே பாடலை திருமதி. சௌமியாவின் குரலில்<"இங்கே கேட்கலாம்'>
குருவாயூர் சென்று வந்தால் என்ன வரும் என்று அம்பி கேட்கலாம் இந்தப்பாடலையும் கேட்டுப்பாருங்கள் /<"இங்கே">
Tuesday, September 11, 2007
நெஞ்சு பொறுக்குதிலையே............

Saturday, September 08, 2007
லக்ஷ்மி வாந்தாள் நம் இல்லத்துக்கு(4)

ராகம்:-சங்கராபரணம் தாளம்:- மிஸ்ர சாபு
பல்லவி
மஹாலக்ஷ்மி ஜகன்மாதா
மனமிரங்கி வரமருள்...............(மஹாலக்ஷ்மி)
அனுபல்லவி
மஹாவிஷ்ணுவின் மார்பெனும்
மணிபீடமதனில் அமர்ந்திடும்
மன்மதனை ஈன்றருளும் தாயே
தயாநிதியே மஹா மாயே........(மஹாலக்ஷ்மி)
சரணம்
பாற்கடல் தரும் கிருபாகரி
பரிந்துவந்தென்னை ஆதரி
பங்கஜ மலர் வளர் அன்னையே-- கடைக்கண்
பார் ராமதாஸன் பணியும்......(மஹாலக்ஷ்மி)
இந்தப் பாடலை மிக இளம் வயிதேலேயே இசை உலகை தன் குரலினால் கவர்ந்த அதே மாதிரி இளம் வயதிலேயே மறைந்த திருமதி.வஸந்தகோகிலத்தின் குரலில் <"இங்கே கேட்கவும்">">
சங்கராபரணம் ராகம் சிங்கார வேலன் படத்தில் "புதுச்சேரி கச்சேரி உன்னு பிடிச்சேன்" பாட்டில் வெளுத்துக்கட்டியிருக்கிறார் திரு.SPB
சரி நாங்கள் மஹாலக்ஷ்மியின் நாலுபதிவுக்கும் வந்து கண்டும் ,கேட்டும் படித்தும் போனோமே எங்களுக்கு என்ன கிடைக்கும் அப்படின்னு அம்பி கேட்பான் இதோ கீழே பாருங்கள் உங்களுக்காக மஹால்க்ஷ்மி தன் இருகைகளாலும் தங்கக் காசுகளை தாரளமாக அள்ளித்தருகிறாள் அள்ளிக்கொண்டுபோங்கள்.

Tuesday, August 28, 2007
லக்ஷ்மி வந்தாள் நம் இல்லத்துக்கு(3)

மும்பை நகரின் செல்வச் செழிப்புக்கு காரணம் மேலே இருக்கும் மஹாலக்ஷ்மிதான் என்று கூறுவார்கள். ஆனால் மஹாலக்ஷ்மி அவதரித்த இடங்களோ தமிழ்நாடுதான்.வில்லிப்புத்தூரில் ஆண்டாளாகவும்,நச்சியார் கோவிலில் ஸ்ரீதேவியாகவும், ஒப்பு இல்லா அப்பன்(உப்பிலியப்பன்) கோவிலில் பூதேவியாகவும் திருப்பதியில் திருச்சானூரில் பத்மாவதியாகவும் அவதாரம் எடுத்தாள். அதுபோல பசுமாட்டின் பின்புறத்தில் லக்ஷ்மி வாசம் செய்கிறாளம் என்று புராணம் கூறுகிறது

திரு. பாபநாசம் சிவன் அவர்கள் அன்னை மஹாலக்ஷ்மியின் மீது இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். இரண்டுமே மிகவும் பிரசித்தி பெற்றது.
முதல் பாடல்
சிவன் அவ்ர்கள் இந்த அடாணா ராகத்தை கையாண்டவிதமே அலாதி.அடாணா ராகம் மிகவும் கம்பீரமான ராகம். அதிகாரம் த்வனிக்கும் பாடல்களுக்கு ஏற்ற ராகம். கோபலகிருஷ்ண பாரதியார் மிகவும் அதிகாரமாக" கனக சபாபதிக்கு நமஸ்காரம் பண்ணடி பெண்ணே"என்று ஆர்டரே போடுவார்(சீர்காழி.சிதம்பரம் அருமையாகப் பாடி இருக்கிறார்). இது ஒரு ராஜ ராகம்.ஆனால் சிவன் அவர்கள் தெலுங்கு தியாகைய்யாவை பின் பற்றி இந்த ராகத்தில் தயாரசத்தையும் காருண்ய ரசத்தையும் கொண்டு வருகிறார். தியகராஜஸ்வாமிகள் தனக்கு ராமரின் தரிசனம் கிடைத்தபின் மறுபடியும் அதேபோல் கிடைக்க வேண்டும் என்று மிகவும் கெஞ்சலுடன் படுகிறார்"ஏலா நீ தயராது பரா குசேலா......' அண்ணல் ராமச்சந்திர மூர்த்தியே என்னிடம் ஏன் தயை காட்ட மாட்டேன் என்கிறாய் நான் ஏழை என்பதாலா.... என்று அதனுடையதாக்கத்தாலோ என்னவோ நம்தமிழ்தியாகைய்யாவானசிவனும் அதே அடாணாவில்"நீ இரங்காயெனில் புகலேது" என்கிறார். அடாணாவின் ஜீவஸ்வரமான 'நீ"யை உயர்த்தி வைத்து அரோஹணமாக மேல்ஸ்தாயியில் ஆரம்பித்து மஹாலக்ஷ்மியை மற்ற தெய்வங்களுக்கும் மேலாக உயர்த்திவிடுகிறார். நீயே இரங்கவிட்டால் வேறு யார் இரங்குவார்கள்?அவள்எங்குஇருக்கிறாள்என்று சந்தேகமறமேல் உலகத்திற்கும்
பூலோகத்திற்கும் நாயகனானதிருமாலினின் மார்பில் சதா வசம் செய்பவள் என்று "ஹரிவத்ஸசலஸ்திதாம்" என்று முன்பு லலிதா ராகப் பாடலில் தீக்ஷ்தர் சொன்னாரே அதே மதிரி சொல்கிறார்சரி இரக்கம் யாரிடம் அதிகம் இருக்கும். சந்தேகமே இல்லாமல் தாயிடம்தான்.அம்மாதான் தன் குழந்தைகளிடம் அதிக இரக்கம் காட்டுவாள். அதனால்தானே சொன்னார் "தடித்த ஒர் மகனைத் தந்தை ஈண்டு அடித்தால் தாய் அணைப்பாள்'என்று.
அதனால்தானோ என்னவோ தாயிரங்காவிடில் குழந்தை உயிர் வாழமுடியுமா என்ற கேள்வியும் கேட்டுவிட்டு சகல உயிர்களுக்கும் நீ தான் தாய் என்று ஐஸும் வைத்துவிடுகிறார். பாற்கடலில் இருந்து பிறந்த தாயே என்னை உன் முழுக்கண்ணாலும் கூட பார்க்கவேண்டாம், கடைக்கண் வைத்தென்னை ஆதரி என்று ஆதி சங்கரர் கனகதாரஸ்தவ்த்தில் சொன்னாரே அதுபோல் இறைஞ்சுகிறார்.சரஸ்வதி காடக்ஷ்த்தால் நான்குவிதமான கவிகளைமழைபோல வர்ஷிக்ககூடிய வல்லமைபடைத்தபுலவர்களுக்கும். ஸ்ரீவித்யாவான பராசக்தியை உபாசனை செய்யும் மெய் ஞானியர்களான முனிவர்களுக்கும்,எல்லா சக்திகளையும் பெற்ற வானவர்களுக்கு கூட அம்மா லக்ஷ்மிதேவியான நீ இரங்கா விட்டால் வேறு புகலிடம் கிடையாது என்று கூறுவது போல் இருக்கிறது இந்தப் பாடல்
சரி இனி பாடலை கேட்கலாமா. யார் பாடியிருக்கிறார்கள். வேறு யார் இந்த பட்டுக்கு உயிர் கொடுத்து சிவனை பட்டி தொட்டிகளில் எல்லாம் புகழ் பெறச்செய்த எம் ஸ் அம்மாவின் குரலில் இங்கேகேட்கவும்
திரு. மஹாராஜபுரம் சந்தானத்தின் குரலில்<"இங்கே கேட்கவும்"> ">
Saturday, August 25, 2007
வரலக்ஷ்மி வந்தாள் நம் இல்லத்துக்கு(2)

வரலக்ஷ்மி நோன்பு அன்று எல்லார் வீட்டிலேயும் பாடும் ஒரு பாட்டு" பாக்யாத லக்ஷ்மி பாரம்மா'" என்ற புரந்தர தாசரின் கன்னட மொழியில் வரும் பாட்டு. என் அம்மாவும் இந்த பாட்டைப் பாடுவார்கள் இதை தமிழில் போட வேண்டும் என்று நினத்து தேடிப் பார்த்தேன் கிடைக்க வில்லை. பிறகு பாட்டைகேட்டுஎனக்குத்தெரிந்தவரை பாட்டையும் விளக்கத்தையும் எழுதுகிறேன் விவரம் தெரிந்தவர்கள் தவ்றுகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ள முடியும்
ராகம்:- மத்யமாவதி(ஸ்ரீ) தாளம்;-ஆதி
பல்லவி
பாக்யாத லக்ஷ்மி பாரம்மா
நம்மம்மா நீ சௌபாக்யாத லக்ஷ்மி பாரம்மா
சரணம்
ஹெஜ்ஜேமேலே ஹெஜ்ஜேயனிகுட
கெஜ்ஜகாலனி த்வனியன டோருட
சஜ்ஸன சாது பூஜய வேளகே
மஜ்ஜிக வொளகின பெண்ணையன்டே.................(பாக்யாத)
கனகவிருஷ்டியா கரயுதபாரே
மனகே மானவ சித்திய டோரே
தினகர கோடி தேஜடி ஹெளயுவா
ஜனகராயன குமாரி வேத...............................................(பாக்யாத)
அட்டிதகலத பக்தர மனயளி
நித்ய மஹோத்ஸ்வ சுமங்கல
சத்யவடோருவ சாது சஜ்ஜன
சிட்டடி ஹோளுவ புட்டலி மொம்பே.....................(பாக்யாத)
சங்கே இல்லத பாக்யவ கொட்டு
கங்கண கைய திருவுடபாரே
குங்குமாங்கித பங்கஜ லோசன
வெங்கட ரமணன பெங்கட ராணீ ..................................(பாக்யாத)
சக்ரே துப்பர காலுவே ஹரிசுத
சுக்ரவாரதா பூஜய் வேளகே
அக்கரயுள்ள அளகிரி ரங்கன
சொக்க புரந்தர விட்டலன ராணீ.................................(பாக்யாத)
பாக்கியங்களைத் தரும் லக்ஷ்மியே வருவாய்,எங்களுடைய தாயே நீ சகல சௌபாக்கியங்களை அள்ளித்தர வருவாய் அம்மா.
இரண்டுகால்களிலும் சலங்கையும் கொலுசுவும் கலீர் கலீர் என்று ஒலிக்கும் சப்தத்துடன் நல்ல சாது ஜனங்கள் பூஜை செய்யும் வேளையில் தயிர் கடையும்போது வரும் வெண்ணயைப்போல் வருவாய் அம்மா
உன் கைகளில் தங்கமழை பொழிந்து எங்களின் விருப்பத்தைத் தீர்ப்பாய்
கோடி கோடி சூர்யனுக்கு ஒப்பான காந்தியுடன் கூடிய ஜனகமஹாராஜனின் மகளாக மண்ணில் அவதரித்த லக்ஷ்மிதாயே வாருவாய் அம்மா. எங்கள் வீட்டுக்கு வந்த நீ வேறு எங்கும்போகமல் இங்கேயே இருந்து தினசரி நடக்கும் மகோன்னத பூஜையில்கலந்து சாது ஜனங்ளை காத்தருள்வாய் அம்மா.கைகளில் தங்க கங்கணங்களை அணிந்து சப்தத்துடன் குங்குமத்தினால் சிவந்த முகத்தில் சிவந்த தாமரை புஷ்பங்கள் பூத்திருப்பதுபோல் அழகிய கண்களுடனுடைய அந்த திருப்பதி மலை மேல் இருக்கும்வெங்கட்ரமணனுடைய ராணீயாகிய எங்கள் அம்மாவே வருவாய்.வெள்ளிக்கிழமையன்று உனக்கு சக்கரையுடன் பாலும் அரிசியும் கலந்து சக்ரபொங்கல் செய்து உனக்கு படைத்து பூஜைகள் செய்யும் வேளயில் இந்த புரந்தர தாசனால் பாடப்படும் அளகிரி மலை மேல் இருக்கும் ரங்கன்னனின் மனதிற்குகந்த ராணீயே வருவாய் எங்கள் வீட்டிற்கு.
இப்பொழுதுஇந்தப்பாடலைமூன்றுபேர்களுடைய குரலில் கேட்க்கலாம்.
முதலில் திரு. பீம்சிங்ஜோஷி அவர்கள் தன்னிடைய கம்பீரமான குரலில் ஹிந்துஸ்தானி இசையையும் கர்னாடக சங்கீத்த்தையும் கலந்து கலக்கியிருப்பதை இங்கே கேட்கவும்
http://www.kannadaaudio.com/Songs/Devotional/BhimsenJoshi/Bhagyada.ram
இதேபாட்டை எம். எல். வசந்தகுமரியின் குரலில் கேட்க இங்கே கிளிக் செய்யவும் http://www.kannadaaudio.com/Songs/Classical/MLV/BhagyadaLakshmi.ram
ஆயிரம் பாடினாலும் நம்முடைய எம் ஸ் அம்மா பாடிய மாதிரி வருமா. அவரின் குரலில் இந்தப்பாட்டை<"இங்கே கேட்டுப் பாருங்களேன்
இவ்வளவு பேர் லக்ஷ்மியை அழைத்த பிறகு நம் தமிழ்த்தியாகைய்யா
பாபநாசம் சும்மா இருப்பாரா. அவர் எப்படி லக்ஷ்மியை அழைக்கிறார் என்று ம்று பதிவில் நாளை பார்க்கலாம்
Friday, August 24, 2007
வந்தாள் வரலக்ஷ்மி நம் இல்லத்திற்கு

இன்று வரலக்ஷ்மி பூஜை. ஸகல ஸம்பத்துகளையும் அளிக்கும் அன்னை அவள்.ஒரு ஏழை அளித்த நெல்லிக்கனிக்காக ஆதிசங்கரர் கனகமழை பொழியவைத்தார்.அந்த கனதாதராஸ்தவத்தில் இப்படி ஆரம்பிக்கிறார்
ராகம்: லலிதா தாளம்: ரூபகம்
கொசுறு
Tuesday, August 14, 2007
பாரத நாடு பழம்பெரும்நாடு நீர் அதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்
தாயின் மணிக்கொடி பாரீர்
(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்)
பல்லவி
தாயின் மணிக்கொடி பாரீர்! -
அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
சரணங்கள்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம்
என்றே பாங்கின் எழுதித் திகழும் - செய்ய பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)
பட்டுத் துகிலென லாமோ? - அதில் பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்)
இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன் மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும் காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம் நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்)
அணியணி யாயவர் நிற்கும் - இந்த ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ? பணிகள் பொருந்திய மார்பும் - விறல் பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)
செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந் தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர் சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின் சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)
கன்னடர் ஓட்டிய ரோடு - போரில் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர், பொனகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும் பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் (தாயின்)
பூதலம் முற்றிடும் வரையும் - அறப் போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும் மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில் மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)
பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப் பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார், துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத் தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)
சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க! தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத் தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்) ---
அன்றைய தலைமுறை திருமதி டி.கே பட்டம்மாள் 60 ஆண்டுகளுக்கு முன் பாடிய இந்தப்பாடலை கேட்கஇங்கேசொடுக்கிக்கேட்கவும்
ஜய வந்தே மாதரம்
ராகம் - ஹிந்துஸ்தானி பியாக் தாளம் - ஆதி
பல்லவி
வந்தே மாதரம் - ஜய வந்தே மாதரம்.
சரணங்கள்
ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே)
ஆரிய பூமியில் நாரிய ரும் நர
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே)
நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நந்தே சத்தர்உ வந்தே சொல்வது (வந்தே)
ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
சென்றா யினும்வலி குன்றா தோதுவம். (வந்தே) ------
இன்றைய தலைமுறையில் திருமதி பாம்பே ஜெயஸ்ரீ பாடிய இந்தப்பாட்டைக் கேட்க இங்கேசொடுக்கிக்கேட்கவும்