Saturday, June 09, 2012

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்


ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்று கண்னதாசன் சொன்னது நினவுக்கு வருகிறது. அப்படி என்ன இன்று கேட்கிறீர்களா. வேறு ஒன்றுமில்லை இன்றோடு என் வாழ்க்கையில் 66 ஆண்டுகள் பூர்த்தியாகி 67 ஆம் ஆண்டு பிறக்கிறது.வயது என்ற எண்ணிக்கை ஒரு கணக்குதானே ஒழிய அதுவே நம்மைப் பற்றிச் சொல்லும் நிர்ணயம் ஆகிவிடாது.அது சரி இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்தோமே எதாவது நல்லது செய்து இருக்கோமா என்ற  ஆராய்ச்சியில் இறங்கப்போவதில்லை. ஏனென்றால் ஒன்றுமில்லை என்ற உண்மை கொஞ்சம் சுடும். சரி இந்த மாதிரி பிறந்த நாட்களில் எதாவது நல்ல விஷயங்கள் நடந்து இருக்கிறதா என்று பார்த்தால் ஒரு விஷய்ம் நினைவுக்கு வருகிறது.அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.ஆனால் உன்று மட்டும் நிச்சியம் எந்த நல்ல விஷயமாக இருந்தாலும் என்னைப் பொருத்த வரையில் அது பரமாசாரியார் சம்பந்தபட்ட விஷ்யமாகத்தான் இருக்கும்
 ஒருமுறை திருப்பதி சென்று பாலஜியின்  அபிஷேக தரிசனம்  தரிசனம் செய்து  விட்டு நானும் என் ஆடிட்டர் நண்பரும் வரும் வழியில் காஞ்சி சென்று ஸ்வாமிகளை தரிசனம் செய்யும் எண்ணத்துடன்  காலை 11 மணிக்கு காஞ்சிமடத்துக்கு சென்றோம்.  அன்று வெள்ளிக்கிழமை பக்தர் கூட்டம் அவ்வளவாக இல்லை. மஹாபெரியாவாள்,  கார்யம் பாலு, மற்றும் இரண்டு பேர்கள் மட்டும் இருந்தார்கள்.பெரியாவளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு தோடாகாஷ்டகம் சொல்லி வணங்கிணேன்.(எனக்கு பெரியவா இட்ட கட்டளை எப்பொதும் இதை சொல்லித்தான் வணங்க வேண்டும் என்பது.சிறுவயதில் இதைச் சொல்லி அவர்களிடம் பரிசு வாங்கிய நாள் முதல் இந்த ஏற்பாடு) இனி அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடலை அப்படியே கேட்கலாம்.
   இவா எங்கே இருந்து வரா ? திருப்பதிலே பாலாஜி அபிஷேகம் பாத்துட்டு பெரியவாளையும் தரிசனம் பண்ணிட்டு போலாம்னு வந்தோம். ஓ அபிஷேகமா இன்னிக்கி. சரி நல்லா பாத்தியா. ஆமாம்  நல்லா பாத்தேன் என்று தலயாட்டினேன். என்ன எல்லாம் பண்ணா சொல்லு. ஸ்வமிக்கு சாதரணமா எப்பவும் போட்டு ஸ்வாமியையே  முழுக்க மறைத்திருக்கும் நகைகள், வஸ்த்ரம்,பூ மாலைகள் எல்லவற்றையும் எடுத்து கலைத்துவிட்டு வெறும் சிலா ரூபமாக அபிஷேகம் செய்தார்கள். மறுபடியும் எல்லாத்தையும் எடுத்துட்டாளா நல்லா பாத்தேங்கிறயே சரியாச் சொல்லு. அப்போதே  மனம் சொல்லியது பெரியவாஇன்னிக்கி நமக்கு அனுகிரஹம் பண்ணப்போறான்னு.
பெருமாளோட மார்புலே தாயார் மஹலக்ஷ்மி மட்டும் இருந்தா. அவ்வளவுதானா அப்போ நீ சரியா பாக்கலை. கைகள் இரண்டிலும் மேலே சங்கு சக்ரம் இருக்குமே அது தெறிஞ்சுதா. பெரியாவா ஞானக்கண் கொடுத்த அப்பறம்தான் ஞயாபகத்து வந்தது இரண்டு கைகளில் சங்கு சக்கிரம் இருக்கும் இடத்திலும் பித்தளை கேடயம் போட்டு மூடி இருந்தது.(அது ஏன் மூடி இருக்கும் என்பதை பெரியாவாளே அப்பறம் கடைசியில் சொல்லுவார்.)

அது சரி ஏன் திருப்பதிக்கு மட்டும் கோடானுகோடி ஜனங்கள் அடிக்கடி வந்து தரிசனம் பண்ணீட்டு போறா தெரியுமா உனக்கு?.
தெரியாது
ஆதி சங்கரர் பல கோயிலுக்குப் போய் சக்ர பிரதிஷ்டை பண்ணியிருக்கார். அவர் திருமலை வந்த போது ஸ்வாமிக்கு ஆகர்ஷண யந்திரம் பிரதிஷ்டை செஞ்சு இருக்கார் அதான் கோடானு கோடி ஜனங்களை ஆகர்ஷணம் பண்ணி இழுக்கிறது. திருப்பதிக்கு வந்து ஸ்வாமியைப் பாத்தூட்டு பாத்தது போறும்னு திருப்தி பட்டு போகவே முடியாது. அவா ஜருகண்டி ஜருகண்டின்னு தள்ளினாலும் விடாம இருந்து பாக்கனும்கிற மனோபாவம் இருக்கிறதுக்கு காரணமே ஆசார்யளோட அந்த ஆகர்ஷ்ண யந்திரம்தான்.இன்னும் ஒரு காரணமும் இருக்கு அது தெரியுமா?
இன்று பரமாச்சாரியார் எனக்கு அனுக்கிரஹம் செய்யப் போறார்ன்னு மனம் சொல்லித்து எனவேதெரியாது பெரியவா சொன்னா கேட்டுக்கிறேன்.
வெங்கடாசலபதி கிட்டே ஐந்து அம்சங்கள் நிறைந்து இருக்கு அதுவும் ஒரு காரணம்.

அது என்னான்னா மஹா விஷ்ணு, மஹாலக்ஷ்மி தாயர், மஹாதேவனான பரமசிவன், ஈஸ்வரியான பார்வதி தேவி,தேவசேனாபதியான சுப்ரமண்யர்.இத்தனைபேரோட அமசம் இருக்கிறதாலேதான் கூட்டம் குவியறது.

சரி நான் சொன்னா ஒத்துகிறயா

பெரியவா சொன்னா அப்படியே ஒத்துகிறேன்

நீதான் ஆடிட்டர் ஆச்சே எல்லாத்துக்கும் அத்தாச்சி, தடயம் கேட்டுதானே நிர்ணயம் பண்ணனும். யார் சொன்னாலும் கேட்டுக்கலாமா.

பெரியாவாளே சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தேன்

முதல்லே மஹாவிஷ்ணு அதுக்கு எந்த தடயமும் தேவை இல்லை அதான் சசங்க சக்ரம் சபீரிடித குண்டலம் சஹார வத்ச்சலஸ்தலோபி கௌஸ்த்துபம்ன்னு சேவை சாதிக்கிறாறே அதுபோதும்


நாளை தொடரும்.......


  

2 comments:

Geetha Sambasivam said...

Happy Birthday and Namaskarangal.

இராஜராஜேஸ்வரி said...

மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..

நமஸ்காரங்கள் !