Thursday, October 18, 2012

பக்தர்களுக்கு பற்று அற்றவர் (பரமாச்சாரியார்) பிரதேசத்திலும் துணை--- இது கதை அல்ல நிஜம்--3

அடுத்த ரயிலை பிடித்து Engelberg போய் சேர்ந்தாகிவிட்டது.


ஒன்பது பேரும் விஞ்சை பிடித்து டிட்லிஸ் என அழைக்கப்படும் ...

பனிமலைக்கு போய் சேர்ந்தோம். மைனஸ் நான்கு டிகிரி. குளிரான குளிர். நாங்கள் கூட பரவில்லைஆறுமாத குழந்தை எந்த விதமான தொல்லையும் தராமல் ஜாலியாக இருந்தான்.எங்களுக்கு
குளிருக்காக பிரத்யேக உடை, பூட்ஸ் எல்லாம் அளித்தார்கள். கூடவே ஒரு கண்ணாடியும் கொடுத்தார்கள்.
அதன் உபயோகம் என்னவென்று அப்போது தெரியவில்லை.பாதுகாகப்பட்ட ஏரியாவிலிருந்துகதவுகளைத் திறந்து பனிக்கட்டி ஏரியாவில் நுழைந்தோம் . அம்மாடி குளிர்காற்று அப்படி அடித்தது.
முகம் விரைத்துவிட்டது .சென்னை வெய்யிலில் வதங்கிப்போன எங்களுக்கு புதிய அனுபவம்.

பக்கத்தில் நின்ற தங்கமணி,பையன்,யாரையும் காணவில்லை.
சந்திரமுகி வடிவேலு மாதிரி ஆப்பு வெச்சுட்டானேன்னு கத்தலாமான்னு பார்த்தேன்.அப்போ அசீரிரியாக மருமகள் குரல் கேட்டது .
அப்பா அவா கொடுத்த கண்ணாடியைப் போடுங்கோன்னு. என்னோட கண்ணாடியை கழட்டிவிட்டு ஸ்பெஷல் கண்ணாடியைப் போட்டபின்தான் எல்லோரும் என் பக்கத்திலேயே இருப்பது தெளிவாக தெரிந்தது.

சூரியனின் ஒளி பனியின் மீது பட்டு நாலாபக்கமும் ஒளிக்கதிர்கள் வீசியதால் கண்கள் பார்க்கும்சக்தியை

இழந்துவிட்டது.ஆனால் பனியின் மீது சறுக்கி ,பனி பந்துகளை ஒருவர் மீது ஒருவர் ஏறிந்தும் விளையாட்டுதான்.


அங்கு இருந்து வரவே மனம் இல்லை.
ஒருவாழியாக முடித்துக்கொண்டு Engelbergலிருந்து ரயிலை பிடித்து Hergiswil
வருவதற்கு பயணத்தைத் தொடங்கினோம்.

எல்லோரும் சந்தோஷமாக பேசிக்கொண்டும் ரயில் பயணத்தை அனுபவித்துக்கொண்டு இருந்தோம்

நானும் தங்கமணியும் பேரன் சாரங்குடன் தனியாக விளையாடிக் கொண்டு இருந்தோம் .

கையில் என் பைபத்திரமாக இருந்து . மனதுக்குள் எனக்கு பெருமை பிடிபடவில்லை எப்படி எல்லோருடைய முக்கிய உடைமைகளை

என்னுடைய பொருப்பினாலும் புத்திசாலிதனத்தாலும்தானே காப்பாற்றிக்கொண்டு வருகிறோம் மண்டையில் கணம் வந்தது.

என்ன பயணக் கட்டுரைதானே இதுலே பரமாச்சாரியார் எங்கே வரவில்லையே என்று கேட்கப் போகிறவர்கள் நாளை வரை காத்திருங்கள்

.

4 comments:

Vidhya Arune said...

Hi Uncle, I am Ishu's friend. I have not met you yet, but have been reading your blog though. Romba nanna irukku. we heard about this Europe trip also with Saarang.

Hope to meet you, when you are in Singapore.

Regards
Vidhya

தி. ரா. ச.(T.R.C.) said...

thank you Vidhya for u r comments. Sure we will meet when i come to Singapore. u can also visit us when yoiu are in chennai.How is Arun Ganesh

இராஜராஜேஸ்வரி said...

என்னோட கண்ணாடியை கழட்டிவிட்டு ஸ்பெஷல் கண்ணாடியைப் போட்டபின்தான் எல்லோரும் என் பக்கத்திலேயே இருப்பது தெளிவாக தெரிந்தது.

ஜிலுஜிலு பயணப்பதிவுக்குப் பாராட்டுக்கள்..

Geetha Sambasivam said...

அப்பா அவா கொடுத்த கண்ணாடியைப் போடுங்கோன்னு. என்னோட கண்ணாடியை கழட்டிவிட்டு ஸ்பெஷல் கண்ணாடியைப் போட்டபின்தான் எல்லோரும் என் பக்கத்திலேயே இருப்பது தெளிவாக தெரிந்தது. //

ஹிஹிஹி, அடுத்த பதிவைத் தேடினால் காணோமே! இதுவும் பனி செய்த மாயமா? :P :P:P:P