Saturday, October 13, 2012

பக்தர்களுக்கு பற்று அற்றவர் (பரமாச்சாரியார்) பிரதேசத்திலும் துணை--- இது கதை அல்ல நிஜம்

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை . பக்தர்களுக்கு பற்று அற்றவர் (பரமாச்சாரியார்) பிரதேசத்திலும் துணை--- இது கதை அல்ல நிஜம்




அப்பா இந்தவருஷம் மேமாதம் யுரோப் போகலாம்னு இருக்கேன் நீயும் அம்மாவும் வரையா? சிங்கபூர் வாழும் மகன் கேட்டான் .எ...னக்கு மேமாதம் ஆடிட் வேலை இருக்கும் நான் வரவில்லை அம்மாவை கூட்டிக்கொண்டு போ என்றேன் . இல்லை அப்பா நீவரவில்லை என்றால் அம்மாவும் வரமாட்டேன் என்கிறாள்.எனக்கும் அப்போதுதான் உறைத்தது நமக்கு சக்தி கிடையாது அங்கெல்லாம் தங்கமணியை அழைத்துச்செல்ல. எதோ பையன் அழைத்துசெல்கிறான் நாம் எதுக்கு அதற்கு தடையாக இருக்கவேண்டும் என்று சரி என்று சொல்லிவிட்டேன்.அப்போது தெரியாது எப்பேர்ப்பட்ட ஆபத்தில் கொண்டுவிடப்போகிறது என்று.

சரின்னு சொன்னவுடனே பையன் மளமளன்னு வேலையை ஆரம்பித்துவிட்டான்.டிக்கெட் புக் பண்ணுவது சர்வீஸ் அபார்ட்மென்ட் புக் பண்ணுவது என்று வேலைகள் ஜருராக அவன் ஒருவனே தனியாக கணிப்பொறியின் மூலம் எல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டான்.ஆறுமாத குழந்தை சாரங்கும் வர...ுவதால் சமையல் வசதி உள்ள இடமாக பார்த்து பார்த்துகவனமாகசெய்து வைத்துருந்தான்.


எல்லோரும் துணிமணிகளை குறைத்துக்கொண்டு அரிசி,பருப்பு,ரவை,

கலந்த உணவுகள்,ரெடிமிஸ் உணவுகள் என்று நூற்றி இருபது கிலோ



முதலில் பையன்,மாட்டுபொண்ணு,பேரன்சாரங், எந்தங்கமணியின்

தங்கை, அவள் கணவர் , அவர்கள பையன் ஸ்ரேயாஸ்,தங்கமணி, நான் என்று எட்டு பேர் செல்வதாக திட்டம் . கடைசி நேரத்தில் தங்கமணியின் தம்பிபையன் ராகவையும் சேர்த்துக்கொள்ள மொத்தம் ஒன்பது உருப்படிகள். மேமாதம் இருபதாம் தேதிபயணம். சென்னையிலிருந்து நானும்

தங்கமணியும் ராகவும் சென்னையிலிருந்து கிளம்பி துபாய் செல்லவேண்டும் அங்கு மகன்.மருமகள், பேரன் சிங்கபூரிலிருந்து சேர்ந்து கொண்டு வியன்னா செல்லவேண்டும். மகன் ஏற்பாடெல்லாம் துல்யமானது.வியன்னாவில் மற்ற முன்று பேரும் செர்ந்துகொள்வதாக ஏற்பாடு.அதே மாதிரி நடந்தது.

பயணம் இனிதாக இருந்தது.ஒரு இடத்தில் கூட ஹோட்டலில்

சாப்பிடவில்லை எல்லாம் ரைஸ் குக்கர்தான். சரி இனி நம்ம கதைக்கு வருவோம் . எல்லாருடைய பாஸ்போர்ட், விசா,யுரோ டால்லர்,எல்லாவறையும் தலைவன் என்ற முறையில்

நான்தான் அதி புத்திசாலி என்று வாங்கி வைத்துக்கொண்டேன் . ச்விச்சர்லேன்ட் போய் இண்டர்லேகன் சேர்ந்தாகிவிட்டது.

தொடரும் .See More

.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன்...

இராஜராஜேஸ்வரி said...

துல்யமான ஏற்பாடுகளுடன் அருமையான பயணம் !