Sunday, October 14, 2012

பக்தர்களுக்கு பற்று அற்றவர் (பரமாச்சாரியார்) பிரதேசத்திலும் துணை--- இது கதை அல்ல நிஜம்--2

ஒருவழியாக சுவிஸ் இன்டர்லேகேன்வந்து சேர்ந்தாகிவிட்டது .


அங்கிருந்து டிட்லிஸ் எனப்படும் பனி மலைக்கு ரயிலில்

செல்வதாக ஏற்பாடு,டிட்லிஸ் போக முதலில் இண்டர்லேகனிலிருந்து HERGISWIL போக வேண்டும் அங்கே வேறு ரயில் மாறி ENGELBERG போய்

அங்கிருந்து வின்ச மூலமாக் பனிமலை போகவேண்டும்

ஒன்பது பேரும் ரயிலில் ஏறிக்கொண்டோம் ரயில்ன்ன சாதாரண ரயிலா அது. கீழே உள்ள படத்தில் உள்ளது.




மொத்த ரயிலில் எங்கள் ஒன்பது போரையும் சேர்த்து பதினைந்து பேர்கள்தான்.நான் நினைத்துக்கொண்டேன் நாங்கள் ஒன்பது பேர் தான்
என்று ஆனால் பாத்தாவதாக ஒரு ஆள் என்னிடம் இரண்டரை வருடமாக இருந்து படுத்திக்கொண்டு இருப்பவரும் சேர்ந்துகொண்டார்.

ரயில் கிளம்பிவிட்டது ரம்யமான பயணம்.கம்பார்ட்மெண்டில் ஒரு அதிசயம் கண்டேன் .

பயணிகளுக்கு உண்டான விளக்கப்பலகையில் பன்னாட்டு மொழிகளில் இருந்தன.

அதிசயம் என்னவென்றால் அதில் நம் தமிழ் மொழி இருந்ததுதான்
.நம்ப ஊரிலேயே TAMIL VAZHKA என்று எழுதி வைக்கும் போது தூய தமிழில் பார்த்த போது பரவசம்.கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.




 அடுத்த   ஜன்மம் என்று ஒன்று இருந்தால் ஸ்விசர்லாந்தில் பிறக்கவேண்டும்.

என்ன பிரமாதமான இயற்கை காட்சிகள்.ரயிலும் வயல்வெளி, கிராமங்கள், மலைகள் ,அருவிகள்

என்று அதன் ஊடே புகுந்து புகுந்து செல்லும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .

இரயிலில் இருந்து காமிராவில் என்மகன் அருமையாக மலைமுகட்டில் மேகம் தழுவிஅணைத்தது சென்ற காட்சியை படம் பிடித்தான். மிக அருமையான அந்த காட்சியை கீழேபாருங்கள்.

ஒருவழியாக HERGISWIL ஸ்டேஷனை அடைந்தோம். அது ஒரு ஜங்க்ஷன் அங்கெ இறங்கி

அடுத்த ரயிலை பிடித்து ENGELBERG போகவேண்டும்.

தொடரும்



             

4 comments:

சந்திர வம்சம் said...

அருமை.

இராஜராஜேஸ்வரி said...

என்ன பிரமாதமான இயற்கை காட்சிகள்.ரயிலும் வயல்வெளி, கிராமங்கள், மலைகள் ,அருவிகள் ?

அருமையான படங்களுக்கும் , பகிர்வுகளுக்கும் பாராட்டுக்கள் ஐயா..

சந்திர வம்சம் said...

சங்கீத ஜாதி முல்லை.........
இன்றுதான் பார்த்தேன்;கேட்டேன்,
சௌம்யா பாட்டு அருமை.

RAMA RAVI (RAMVI) said...

//அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருந்தால் ஸ்விசர்லாந்தில் பிறக்கவேண்டும்.// உண்மைதான் சார். அழகிய படங்களுடன் அருமையான பதிவு.