Friday, August 24, 2007

வந்தாள் வரலக்ஷ்மி நம் இல்லத்திற்கு

இன்று வரலக்ஷ்மி பூஜை. ஸகல ஸம்பத்துகளையும் அளிக்கும் அன்னை அவள்.ஒரு ஏழை அளித்த நெல்லிக்கனிக்காக ஆதிசங்கரர் கனகமழை பொழியவைத்தார்.அந்த கனதாதராஸ்தவத்தில் இப்படி ஆரம்பிக்கிறார்







அங்கம் ஹரே:புனகபூஷன மாச்ரயந்தீ

ப்ருங்காங்கனேவ முகலாபரணம் தமாலம்


அங்கீக்ரு தாகில விபூதி ரபாங்கலீலா


மாங்கல்ய தாஸ்து மம மங்கல தேவதாயா

மலர்களாலாலும் மலர்மொட்டுக்களாலும் அலங்கரிகப்பட்ட மரத்தை எப்படி வண்டுகள் சுற்றிக் கொண்டு மொய்த்துக்கொண்டு இருக்குமோ அதுபோல மஹாவிஷ்ணுவின் மார்பெனும் மணிப்பீடமதில் அமர்ந்துகொண்டு அவரையே எப்பொழுதும் அகண்ட கண்களால் பருகிக்கொண்டு இருக்கும் மஹாலக்ஷ்மிதாயே, நீ முழுக்கண்ணாலும் பார்க்கவேண்டாம்,கொஞ்சம் கடைக்கண்ணால் ஏழை மக்களையும் பார்த்து எல்லா செல்வங்களையும் வழங்குவாய் அம்மா என்று சொல்கிறவர் யார் தெரியுமா முற்றும் துறந்த மஹான் ஆதி சங்கரர். தன் பக்தர்களுக்காக லக்ஷ்மியிடம் கையேந்தி நிற்கிறார்.







சங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரும் சிறந்த ஸ்ரீவித்யா உபசகருமான திரு. முத்துஸ்வாமி தீக்ஷ்தரும் லக்ஷ்மியின் மீது லலிதா ராகத்தில் "ஹிரண்மயிம்" என்ற கீர்த்தனத்தை இயற்றியுள்ளார்.லலிதா ராகமும் வசந்தா ராகமும் இரட்டைபிறவி சகோதரிகள் ஒரே ஒரு ஸ்வரம்தான் ப என்கிற பஞ்சமம்தான் கிடையாது லலிதாவில். அதைப்பற்றி பின்னால் விரிவாகப் பார்க்கலாம். ஒருசமயம் தீக்ஷ்தரை அவ்ர் மனைவி தனக்கு செல்வம் வேண்டும் என்பதாற்காக தஞ்சை மன்னரைப் புகழ்ந்து அவர் மீது கீர்த்தனை இயற்றிப் பாடி செல்வத்தைக் கேளுங்கள் என்று கேட்டாளாம். அதற்கு அவர்
மறுத்து மனிதரைப் பாடமாட்டேன் என்று கூறி லக்ஷ்மியின் மீது இந்தக் கீர்த்தனையை பாடினார்



ராகம்: லலிதா தாளம்: ரூபகம்


பல்லவி


ஹிரண்மயிம் லக்ஷ்மீம் சதா பஜாமி


ஹீன மானவ ஆஸ்ரியம் த்வஜாமி-----(ஹிரண்மயீம்)


அனுபல்லவி


கிரதர சம்பிரதாயம் க்ஷிராம்புதி தனயாம்



ஹரிவத்ஸ்தலாலயாம் ஹரிணீம் கரனகிஸலயாம்


கரகமலத்ருத குவலயாம் மரகத மணிமய நிலயாம்------(ஹிரண்மயீம்)


சரணம்

ஸ்வேத தீபவாஸிணீம் ஸ்ரீகமலாம்பிகாம் பராம்

பூதபவ்ய விலாசணீம் பூசுர பூஜிதாம் வராம்

மாதராம் அப்ஜமாலினீம்

மாணிக்ய ஆபரணாதராம்

சங்கீத வாத்ய விநோதினீம்

கிரிஜாம் தாம் இந்திராம்

சீதகிரண நிபவதனாம்

ஸ்ருதசிந்தாமணி சதனாம் பீடவஸனாம்

குருகுஹ மாதுலகாந்தாம் லலிதாம்---- (ஹிரண்மயீம்)



ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் என்று தொடங்கும் ஸ்ரீசூக்தத்திலிருந்து முதல் அடியை எடுத்து தொடங்குகிறார்.

பல்லவி


தங்கமயமான வண்ணத்துடன் ஜொலிக்கும் லக்ஷ்மியைத்தான் நான் பாடுவேன் மற்றபடி ஒருபொழுதும் நான் மனிதர்களை பாடமாட்டேன்


அனுபல்லவி


அழிவில்லாத செல்வத்தைத் தருபவளும்

பாற்கடல் பெற்று எடுத்தவளும்

மஹாவிஷ்ணுவின் மார்பில் எப்பொழுதும்

கோவில் கொண்டு இருப்பவளும்

இளம் தளிரைப் போன்ற தனது செம்பஞ்சு சரணங்களை உடையவளும்

தனது கையினில் எப்பொழுதும் இருக்கும் தாமரையினால் அந்த பூவுக்கு அழகு சேர்ப்பவளும் இடுப்பில் மரகத மணி பச்சை ஒட்யாணத்தால் அலங்கரித்துக்கொண்டுஇருப்பவளுமானலக்ஷ்மியை மட்டும் தான்

நான் எப்பொழுதும் பாடுவேன்


சரணம்


வெண்மை ஓளிவிடும் தீபத்தில் வசிப்பவளும்

பூலோகத்தில் ஸ்ரீகமலாம்பிகையாக உருவெடுத்தவளும்

சகலபூதங்களும் அமைதியாக அவளிடத்தில் உறைபவளாகவும்

தேவர்களாலும் மனிதர்களாலும் பூஜிக்கப் பெற்று வரம் தருபவளாகவும்

உலகுக்கே தாயாக விளங்குபவளாகவும் தாமரைப் பூவில் அமர்ந்தவளும்

மாணிக்கம்,வைரம், முதலான நவரத்தினங்களால் அலங்கரித்துக் கொண்டு இருப்பவளும்

சங்கீதத்தையும் வேறு வேறு வத்யங்களயும் கேட்டு சந்தோஷிப்பவளாகவும்

சந்திரனனின் குளிர்ந்த கிரணங்களைப் போன்ற முகமுடையவளும்

அழகிய சிந்தாமணி மண்டபத்தில் இருக்கும் ரத்னபீடத்தில் அமர்ந்திருப்பவளும்

குருகுஹனான முருகனுக்கு மாமனான மஹாவிஷ்ணுவின் அன்பிற்கு உரியவளும் லலிதாதேவியுமான மஹாலக்ஷ்மியைத்தவிர வேறு யாரையும் பாடமாட்டேன்


என்ன ஒரு வார்த்தை ஜாலம். இதை எனக்கு தெரிந்தவரை மொழிபெயர்த்துள்ளேன். ஆஹா எப்படிப்பட்ட வர்ணனை. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது ஓம் என்ற பிரணவகார மந்திரத்திலிருந்து "ம்" (சங்கீதத்தில் முக்கியமான) மத்யம ஸ்வரமான (ம) என்ற அம்பாளுக்கு உகந்த பீஜாக்ஷ்ர மந்திரத்தை " ஹிரண்மயீம், ஹரிணீம்,தீபவாஸிணீம்,என்று எல்லாவார்த்தைகளும் "ம்" என்று முடிவு பெறும் வண்ணம் அமைத்துள்ளது மிக விசேஷமாகும்.ஸ்ரீ சூக்தத்திலும் இதே மாதிரி "ம்" என்ற ஸ்வரம் எல்லா இடத்திலும் வரும்
லலிதா ராகத்திற்கே உரிய சுத்த தைவதத்தை முக்கியமாக வைத்து விளையாடி இருக்கிறார்.பாட்டைக்கேட்டாலே லலிதா சஹஸ்ரநாமம் கேட்டால் போல் இருக்கும்

முருகனின்பக்தரான தீக்ஷதர் இதில்முருகனின் மாமனான விஷ்ணு என்று முத்திரை வைத்துள்ளார். மற்றும் கீர்த்தனையின் ராகமான லலிதாவையும் கடைசியில் கொண்டுவ்ந்து வைத்து முத்தாய்ப்பு வைத்துள்ளார்


இனி பாடலை திருமதிகள் ராதா ஜெயலெட்சுமி அவர்களின் குரலின் மூலமாகக் <" இங்கே கேட்டு ரசியுங்கள்>"
நாளை புரந்தர தாசரின் பாக்யாதா லக்ஷ்மி பாரம்மா

கொசுறு
இந்த லலிதா ராகத்தில் நமது இளையராஜா அவர்கள் உன்னால் முடியும் தம்பி என்றபடத்தில் போட்ட இதழில் கதை எழுதும் நேரமிது பாட்டையும்

10 comments:

குமரன் (Kumaran) said...

யா தேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

மனிதன் said...

ஹிரண்மயிம் ராதா ஜயலஷ்மி குரலில் கேட்டு ரசித்தேன். இணைப்பு கொடுத்ததிற்கு நன்றிகள்.
வாழ்க வளமுடன்,
ராமச் சந்திரன்.

ambi said...

அருமையான விளக்கங்கள். லலிதா ராகத்தை விளக்கிய விதம் அருமையோ அருமை. மிக்க நன்றி.

*ahem, கிண்டில வரலக்ஷ்மி விரதம் உண்டா? என்ன சமையல் மெனு? (ஹிஹி, காரியத்துல கண்ண இருப்போம் இல்ல)... :p

உன்னால் முடியும் தம்பி - இந்த பாட்டு லலிதா ராகமா? ரொம்ப நாளா இருந்த சந்தேகம் தீர்ந்தது.

Geetha Sambasivam said...

ஹிஹி சார், நீங்க சொன்னீங்களேன்னு வந்தேன், ஆனால் பாருங்க வரலட்சுமி படத்தைச் சுடத் தான் நேரம் இருந்தது. சுட்டுக்கிட்டேன். நிதானமா வந்து கமென்டறேன். :D

@ஆப்பு, எப்போப் பார்த்தாலும் தீனி நினைப்பு தானா? உருப்பட்டாப்பல தான்! :P

மெளலி (மதுரையம்பதி) said...

அருமையான பதிவு தி.ரா.ச சார்....நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாருங்கள் குமரன் வந்து லக்ஷ்மி காயத்ரி சொன்னதற்கு நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

வர்ருங்கள் ராமசந்தரன். முதல் தடவையாக வரும்போதே லக்ஷ்மியின் பதிவில் வந்து பின்னூட்டம் இட்டீர்கள். இனி சகல் சம்பத்துகளும் வந்து சேரும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

நினைச்சேன் லலிதா, வசந்தா, இப்படி போட்டாத்தான் அம்பி வருவான்னு.

இந்த தரம் பண்டிகை சிங்கப்பூரில்தான் பையன் வீட்டில் மாமி அங்கே போயாச்சு. நானே வெறும் மோர்சாதம் தான் இதிலே ஆப்புக்கு மெனு லிஸ்ட் வேணுமாம்

ராவுத்தரே ராப்பட்டினியாம் குதிரைக்கு கோதுமை அல்வா கொடுக்கனுமாம்

நிங்களும் ராகத்தைப் பற்றி தெறிஞ்சுக்கனும்னு தான் கொசுறா
அதே ராகத்தில் வரும் சினிமா பாட்டையும் போட்டேன்
வருகைக்கு நன்றி.

ஆமாம் அங்கே தலைப் பண்டிகை உண்டா? உட்னே இந்த மாதிரி செலவு,
தங்கமணிக்கு வரலக்ஷ்மி நோன்புக்கு புடவை வாங்கனும்னா எங்க வீட்டில் பழக்கம் கிடையாதுன்னு சொல்லிவிடுவாய் என்று கீதா மேடம் சொன்னாங்க:D

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க மேடம். அவசரமா வ்ந்தாலும் சுடரத்துக்கும் அம்பிக்கு ஆப்புவைக்கவும் நேரம் இருக்கு.
மெதுவா வந்து படிங்க

தி. ரா. ச.(T.R.C.) said...

என்ன மௌளி சார் வந்துட்டு வெறும நன்றி சொல்லிட்டு போயிட்டீங்க! விஷ்யம் போரலையா