Tuesday, January 22, 2008

முப்பெரும் விழா



தென்பழனி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா




நாளை தைப் பூசம். இது முருகனுக்கு உகந்த நாள் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால் இன்று முப்பெரும் விழா எனபது நம்மில் பல பேருக்கு தெரியாது. என்ன அந்த மூன்று விழாக்கள் பார்க்கலாமா?

தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.


சிவனின் ஆனந்த நடத்தை நம்மால் நேரில் பார்க்க முடியாமா? அதனால்தான் நீலகண்ட சிவன் அவர்களின் பாடல் மூலமாக பார்க்கலாமா.நாம் எல்லோருக்கும் ஒரு ஆதங்கம் உண்டு கர்நாடக சங்கீதத்தை எதிர்காலத்தில் எப்படி இளம்தலைமுறையினர் காப்பாற்றப் போகிறார்கள் என்று.அந்தக் கவலையே வேண்டம் இந்த ஒன்பது வயது சிறுவன் என்ன போடு போடுகிறான் பாருங்கள். பக்க (பக்கா) வத்தியம் வாசிப்பவர்களும் சிறுவர்களே.

ராகம்:- பூர்விகல்யானி தாளம் :-ரூபகம்

பல்லவி

ஆனந்த நடமாடுவார் தில்லை
அம்பலம் தன்னில் அடிபணிபவருக்கு அபஜெயமில்லை....(ஆனந்த......)

அனுபல்லவி

தானந்தமில்லாதா ரூபன்
தஜ்ஜம் தகஜம் தகதிமி தளாங்கு தகதிமி என.. (ஆனந்த.....)

சரணம்

பாதி மதி ஜோதி பளீர் பளீரென
பாதச்சிலம்புகள் கலீர் கலீரென
ஆதிகரை உண்ட நீலகண்டம் மின்ன
ஹரபுர ஹரசிவ ஹரசங்கரா அருள்பர குருபரா என
அண்டமும் பிண்டமும் ஆடிட
எண்திசையும் புகழ் பாடிட..... (ஆனந்த
...)






தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

தந்தைக்கு ஞானகுருவாக இருந்து பிரணவ உபதேசம் செய்த ஞானபண்டித தென்பழனிவளர் முருகன் தேர் பவனி வ்ரும் நாளும் தைப் பூசத்தன்றுதான்.நகரத்தார்களின் செல்லப்பிள்ளையான முருகனைப் பார்பதற்காக நடைப்பயணமாக் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் செட்டி நாட்டிலிருந்து கால் நடையாக காவடி எடுத்துக்கொண்டு ஆடல் பாடலுடன் வருவது கண்கொள்ளாக் காட்சி. பணி நிமித்தமாக 1972 களில் கரைக்குடியில் இருந்தபோது கண்டு அனுபவித்த காட்சி இன்னும் கண்ணில் நிற்கிறது.சிறுவர் சிறிமிகள் கூட
மகிழ்ச்சியுடன் கல்ந்து கொள்வார்கள்.காலில் செருப்புகூட இல்லாமல் பழனி வரை செல்வது எளிதான காரியமில்லை. நம்பிக்கைதான் வழ்வு. அது வந்துவிட்டால் பலம், சக்தி தானே வந்துவிடும்.

இனி மும்பை ஜெயஸ்ரீ பாடிய முருகனின் மறுபெயர் அழகு என்ற பெஹாஹ ராகப் பாடலை பார்க்கவும் கேட்கவும்
ராகம்:- பெஹாஹ் தாளம்:- ஆதி

பல்லவி

முருகனின் மறு பெயர் அழகு
அந்த முறுவலில் மயங்குது உலகு

அனுபல்லவி

குளுமைக்கு அவன் ஒரு நிலவு
குமரா என சொல்லி பழகு

சரணம்

வேதங்கள் போற்றிடும் ஒலியே
உயர் வேலோடு விளையாடும் எழிலே
துறவிக்கும் விரும்பிடும் துறவே
துறவியாய் நின்றிடும் துறவே




-

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் சமாதியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.. அருட்பெரும் ஜோதி தனிப்பெரும்கருணை வள்ளலாரின் ஜோதி தரிசனமான நாளும் இன்றுதான்.. வள்ளலாரின் "ஒருமையுடன் நினது திருமலரடி" என்ற பிலஹரி ராகப் பாடல்
கொஞ்சும் சலங்கை படத்தில் திருமதி. ஸ் ஜானகி குரலில் காருக்குறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வரத்துடன் வெற்றி நடை போட்டு சாகாவரம் பெற்றது.இதோ அந்தப் பாடல்




-

13 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தைப்பூசம் அதுவுமா தெளிந்த பதிவு திராச!

//வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் சமாதியானார்//

ஆகா...இராமனின் நட்சத்திரம் புனர்பூசம். அன்று தானா இராமலிங்கரும் சித்தி அடைந்தார்! "ஒருமையுடன் நினது திருமலரடி" பாடல் அருமை! நம்ம கந்த கோட்டப் பாடல் தானே இது?

தைப்பூசம் அன்று முருகனுக்கு விசேடம் என்பது அனைவரும் அறிந்ததே! ஆனா அதே தைப்பூசம் தில்லைப் பொன்னம்பலத்தானுக்கும் உகந்தது பற்றி சொன்னது மேலும் சிறப்பு! மருவத்தூரில் அன்னைக்கும் இதே நாள் சிறப்பல்லவா?

இலவசக்கொத்தனார் said...

நல்ல பாடல்கள். உங்களுக்கும் எனது தைப்பூச நல்வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

அபிலாஷ் பாடலைக் கேட்டு இரசித்தேன்.

குரலிலும் நாதஸ்வரத்திலும் அருட்பாவினைக் கேட்டு மனமகிழ்ந்தேன்.

தைப்பூசத்திற்கு அருமையான தேர்வுகள். நன்றி தி.ரா.ச.

ambi said...

நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்னி. :)

முப்பெரும் விழா என்றவுடன் நீங்க கலந்துகொண்டு தங்க காசு ஏதேனும் வாங்கிய விழாவோனு ஓடி வந்தேன். :))

Geetha Sambasivam said...

//முப்பெரும் விழா என்றவுடன் நீங்க கலந்துகொண்டு தங்க காசு ஏதேனும் வாங்கிய விழாவோனு ஓடி வந்தேன். :))//

@அம்பி, எப்போப் பார்த்தாலும் இதே நினைப்புத் தானா? நினைப்புத் தான் பொழப்பைக் கெடுக்கும், தெரியுமா? :P

@திராச, சார், ரொம்ப நன்னி, நன்னி, மூன்று போஸ்டாப் போட்டிருப்பேன், நானா இருந்தால், ஹிஹிஹி, அதான் மதுரையம்பதி கூட வந்து உ.கு. பெரிசாக் குத்திட்டுப் போயிட்டார். கொஞ்சம் வந்து பார்க்கிறது தானே? நாங்க தவறாம அட்டெண்டன்ஸ் கொடுக்கிறோமில்லை? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P

தி. ரா. ச.(T.R.C.) said...

நம்ப கந்தகோட்டம். கேஆர் ஸ் ஒரு நாள் நம்ப ரெண்டு பேரும் போனா அது நம்ப ஆயிடுமா? நம்ப முருகன்னு சொல்லுங்க பொருத்தமா இருக்கும். மேல் மருவத்தூரிலும் இன்றுதான்.நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

இலவசம் நன்றி உன் வாழ்த்துக்களுக்கு.

தி. ரா. ச.(T.R.C.) said...

குமரன் மும்பை ஜெயச்ரியின் முருகனின் மறு பெயர் அழகும் நல்ல பாட்டு. நன்றி வருகைக்கு

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி அடுத்த போஸ்ட் அதுதான்.சுயவிளம்பரம் வேண்டமா?

தி. ரா. ச.(T.R.C.) said...

கீதா மேடம் உன்களுடை பின்னுட்டங்களை நல்லா பாருங்க நங்க வந்தோமா இல்லையானூ தெரியும்.
எனக்கும் போட ஆசைதான் ஆனா டைம் இல்லை.

sury siva said...

வழக்கமாக சனிக்கிழமை அன்று நாங்கள் ஆஞ்சனேய சன்னதிக்கு செல்வது
உண்டு. இன்று கோவிலில் சிவ பெருமான் சன்னதியில் நின்று சிவ பஞ்சாட்சரம்
( நாகேந்த்ரஹாராய...) சொல்லும்போது உங்கள் நினைவு ஏனோ வந்து
சென்றது.

வீட்டுக்கு வந்து வழக்கமாக நண்பர்கள் பதிவுகளைப் பார்க்கும்போது,
உங்களது சிவ பெருமான் தில்லையில் ஆனந்த நடனத்தினைப் பற்றிக்
குறிப்பிட்டு, அதற்கான ஏற்றதொரு பாட்டினையும் தந்துள்ளீர்கள்.

1972 ல் பணி புரிந்ததாகச் சொல்வதால், இந்தக் கிழவனது
அடுத்த தலைமுறையாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

( அது என்ன தி. ரா. ச ? தில்லையிலா ராஜ சபை ? )

ஆசிகள் பல.
சுப்புரத்தினம்.
தஞ்சை. (இருப்பது சென்னை)

http://pureaanmeekam.blogspot.com
கருட தண்டகம் மற்றும் துர்கா,பூமி ஸூக்தம்
கேட்டு இன்புறவும்.‌

sury siva said...

http://www.youtube.com/watch?v=XI2uUjC5Xao

முருகனுக்கு தைப்பூச விழா எடுத்ததற்காக‌
இதோ பரிசு:
கேட்க‌ ! இன்புற‌ !

நிவிஷா..... said...

bhakthi mayam :)

thanks for coming by my blog
நட்போடு
நிவிஷா