Monday, October 11, 2010

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 11 10 2010


   பராசக்தி


மிகப்பெரிய சக்தியாக நிலைத்திருப்பவள்.அவளுடையபரிவார தேவதைகளுக்கும் சக்திகொடுப்பவள் அதனாலும் பராசக்தியாக விளங்குபவள்.பரம் என்று அழைக்கப்படும் சிவனுக்கே சக்தி அளிப்பவளாக இருப்பதாலும் பராசக்தி.இது நமக்கே புரிந்த ஒன்று.சக்தி இல்லாமல் சிவனால் ஒன்றும் செய்ய முடியாது.பொதுவாக எல்லோரும் சொல்லுவார்கள் உனக்குத்தான் சக்தியில்லையே பேசாமே சிவனேன்னு இருக்க வேண்டியதுதானே என்று.
 
கலிகல்மஷநாசினி



கலிகாலத்தில் ஏற்படும் கஷ்டங்களை போக்குபவள். கலிகாலத்தில்தான் அழிவுகளும் கஷ்டங்களும் அதிகம்.ஆனாலும் அந்த கஷ்டங்களையும் போக்கும் சக்தி படைத்தவள்தான் பராசக்தி.

நிஷ்பிரபஞ்சா.


இந்த பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்டவள். உலகத்தைப் படைத்தவள் அவள்தான் இருந்தாலும் பிரபஞ்சகட்டுப்பாட்டுக்குள் அவள்தன்னை ஈடுபடுத்திக் கொள்ளமாட்டாள்.கடவுள் என்ற பதம் மாதிரி. கடந்தும் இருப்பவள் உள்ளும் இருப்பவள் அதன்னால்தான் கடவுளென்று பெயர் வந்தது.அதுபோல பிரபஞ்சத்துக்கு உள்ளேயும் இருப்பாள் அதைக் கடந்தும் இருப்பாள்.அபிராமபட்டரும் இந்த தத்துவத்தை விட்டுவைக்கவில்லை. "பூத்தவளே பூத்தவண்ணம் பதிநான்கு உலகத்தையும் காத்தவளே, பின் கரந்தவளே" என்று புகழ்ந்தார்
நாளை சந்திப்போம் பட்டாணி சுண்டல் எடுத்துக்கொண்டு செல்லுங்கள் 

 

No comments: