Friday, October 15, 2010

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 15 10 2010




இன்றைய நாமம்







சிந்தூர திலகாஞ்சிதா


அம்பாளின் முகத்தில் திலகம் இருக்கிறதே அது எங்கே இருக்கிறது தெரியுமா இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கிறது. அதுவும் அது இளம் சிவப்பு வண்ணமான சிந்தூரத்தினால் ஒளி பெற்று விளங்குகிறது.சூரியன் உதிக்கும் முன்பு அருணந்தான் முதலில் தோன்றுவான் அதுவும் இளம் சிவப்பாகத்தான் இருக்கும் அதே மாதிரி மாலை சூரியன் அஸ்தமிக்கும்போதும் இளம் சிகப்பு வண்ணமான சிந்தூர நிறம்தான்.எப்படி சூரியன் எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும் இளம்  சிகப்பு  நிறத்தில் ஒளிவிட்டுப் பிரகாசிகின்றானோ அது மாதிரிதான் தேவியும் சிந்தூர திலகத்துடன் எல்லாஇடங்களிலும் எல்லா நேரத்திலும் பிரகாசிக்கிறாள்.

லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும் அவளச் சிகப்பு வர்ணத்தில் வர்ணிக்கப்படுகிறாள்."ரக்தவர்ணா,சிதக்னிகுண்டத்திலிருந்து உருவானவள்"" தோற்றதிற்கான நிறம் கொண்டாள்.ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில்"" ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா".இந்த உலகத்தின் மீது கொண்ட கருணையினால் சிகப்புவடிவம்கொண்டாள். அபிராமபட்டர் நீலி என்று கூறி விட்டு கடைசியில் சிந்தூர வர்ணத்தினாள் என்று முடிக்கிறார். இதன் அர்த்தம் என்ன.  வானவில்லின்  நிறங்களை வரிசைப் படுத்தும் போது VIGBOYR  ஊதாவில் V(நீலீ) ஆரம்பித்து சிகப்பில் R முடிக்கிறோம் அதனால்தான் அபிராமி  பட்டரும் எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில்தான் அதுதான் நீ என்கிற சிந்துர திலகாஞ்ச்சிதா என்கிற இளம் சிகப்பு நிறம்    


நாளை இன்னுமொரு நாமத்தைப் பார்க்கலாமா?

1 comment:

Kavinaya said...

இப்போதான் பார்க்கிறேன். அன்னையின் நாமங்களை தொடரலாமே தி.ரா.ச. ஐயா?