Friday, October 15, 2010

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 15 10 2010




இன்றைய நாமம்







சிந்தூர திலகாஞ்சிதா


அம்பாளின் முகத்தில் திலகம் இருக்கிறதே அது எங்கே இருக்கிறது தெரியுமா இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கிறது. அதுவும் அது இளம் சிவப்பு வண்ணமான சிந்தூரத்தினால் ஒளி பெற்று விளங்குகிறது.சூரியன் உதிக்கும் முன்பு அருணந்தான் முதலில் தோன்றுவான் அதுவும் இளம் சிவப்பாகத்தான் இருக்கும் அதே மாதிரி மாலை சூரியன் அஸ்தமிக்கும்போதும் இளம் சிகப்பு வண்ணமான சிந்தூர நிறம்தான்.எப்படி சூரியன் எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும் இளம்  சிகப்பு  நிறத்தில் ஒளிவிட்டுப் பிரகாசிகின்றானோ அது மாதிரிதான் தேவியும் சிந்தூர திலகத்துடன் எல்லாஇடங்களிலும் எல்லா நேரத்திலும் பிரகாசிக்கிறாள்.

லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும் அவளச் சிகப்பு வர்ணத்தில் வர்ணிக்கப்படுகிறாள்."ரக்தவர்ணா,சிதக்னிகுண்டத்திலிருந்து உருவானவள்"" தோற்றதிற்கான நிறம் கொண்டாள்.ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில்"" ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா".இந்த உலகத்தின் மீது கொண்ட கருணையினால் சிகப்புவடிவம்கொண்டாள். அபிராமபட்டர் நீலி என்று கூறி விட்டு கடைசியில் சிந்தூர வர்ணத்தினாள் என்று முடிக்கிறார். இதன் அர்த்தம் என்ன.  வானவில்லின்  நிறங்களை வரிசைப் படுத்தும் போது VIGBOYR  ஊதாவில் V(நீலீ) ஆரம்பித்து சிகப்பில் R முடிக்கிறோம் அதனால்தான் அபிராமி  பட்டரும் எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில்தான் அதுதான் நீ என்கிற சிந்துர திலகாஞ்ச்சிதா என்கிற இளம் சிகப்பு நிறம்    


நாளை இன்னுமொரு நாமத்தைப் பார்க்கலாமா?

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 14 10 2010











இன்றைய நாமங்கள் 

திரிபுரா

படைத்தல்  காத்தல் அழித்தல் என்கிற முன்றுவகையான தொழில்களைச் செய்யும் பிரும்மா விஷ்ணூ, சிவன் ஆகிய மூவர்க்கும் மூத்தவள். சரி இவர்களே மிகவும் வயதானவர்கள் அவர்களுக்கும் மூத்தவள் என்றாள் மிகவும் வயதானவளா அம்மா நீ என்றால் அபிரமி பட்டரைக் கேட்கவேண்டும்.
"மூத்தவளே மூவாமுதல்வர்க்கும் மூத்தவளே பின் கரந்தவளே இளையவளே"
அம்மா நீ எல்லோருக்கும் மூத்தவளாக இருந்தாலும் இளயவளாகத்தான் எங்களுக்குக் காட்சியளிக்கிறாய்.




Thursday, October 14, 2010

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 13 10 2010



இன்றைக்கு  எடுத்துக் கொள்ளும் நாமங்கள்

 
ரதிப்பிரியா


ரதிதேவியின் பிரியத்துக்கு உரியவள். அப்படி என்ன ரதிதேவிக்கு பிரியம் லலிதா தேவியின் மீது?.சிவனால் ஸ்ம்கரிகப்பட்டு ரதியின் கணவரான மன்மதன் சாம்பலாகிவிட்டான். ரதிதேவி அம்பாளை வேண்டி அவனை மறுபடியும் உயிர்ப்பித்து தருமாறு வேண்டினாள். அம்பாள் மன்மதனை எங்கு எந்த உருவத்தில் ஆவாஹானம் செய்யலாம் என்று தேடி சரியான இடம் கிடைக்காமல் தன்னுடைய முகத்திலேயே அவனுக்கு இடம் கொடுத்து ரதிதேவியை திருப்த்திப் படுத்தி அவளின் பிரியத்துக்கு பாத்திரமானாள். இதை ஆதிசங்கரர் சௌந்தர்யலஹிரியில் "தவமுகமிதம் மன்மத ரதம் "என்று புகழ்கிறார்




அபிராமபட்டரும் "அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதிபதி சயமானது" என்று அதிசயப் படுகிறார். 



இன்றைய சுண்டல் சிகப்பு அவல்
நாளை சந்திப்போம்

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 12 10 2010



இன்று எடுத்துகொள்ள இருக்கும் நாமங்கள்


நாமபாராயணப் பீரிதா

லலிதா பரமேஸ்வரிக்கு மிகவும் பிடித்தது நாம பாராயணம்தான். அவளைவிட அவளது நாமப் பெருமையை நமக்கு உணர்த்துவதற்காகவே ஏற்பட்டது இது.கடவுளைவிட அவரது நாமம்தான் பெரியது என்பதற்கு சிறந்த உதாரணம் ராமரும் ஹனுமானும்தான்.சேது சமுத்ரத்தைக் கடப்பதற்கு ராமருக்கு தேவைபட்டது பெரிய வானரசேனை, கல் போன்றவைகள். ஆனால் ஹனுமானுக்கோ இவை ஒன்றும் தேவைப் படவில்லை.அவருக்கு கடலை சுலபமாக கடக்க உதவிசெய்தது அந்த ராம நாமம் மட்டும்தான்.அதுபோல்தான் எங்கெல்லாம் அம்பிகையின் நாமம் உச்சரிக்கப் படுகிறதோ அம்பிகை அந்த இடங்களிலெல்லாம் ஆனந்தமாக அமர்ந்திருப்பாள்.
 
 
இச்சாசக்தி ஞானசக்தி கிரியாசக்தி ஸ்வரூபிணி


ஆசைப்படும் சக்தியாகவும் அதற்கு வேண்டிய ஞானத்தைத் தரும் சக்தியாகவும் பின்பு அந்த ஆசையை பூர்த்தி செய்ய அவசியமான ஒன்றான செயப்பாடு சக்தியாகவும் விளங்குபவள்.மூன்று சக்திகளுக்கும் அவள்தான் தலைவி.வள்ளியை இச்சாசக்தியாகவும், தெயவயாணையை கிரியாசக்தியாகவும் குறிப்பிடுவார்கள். இந்த இரண்டு சக்திகளும் சேர்ந்தால் அது ஞானத்தில் சென்று முடியும். அந்த சக்திதான் முருகன் என்ற ஞனபண்டிதன்
 
சர்வாதாரா


எல்லாவற்றுக்கும் அவள்தான் ஆதாரமாகவும் இருக்கிறாள். இந்த பூமிதான் நமக்கெல்லாம் ஆதாரம் ஆனால் அந்த பூமியை உற்பத்தி செய்தவள் அம்பிகைதான் எனவே அதற்கும் ஆதாரமாக இருப்பதால் அவள்  ஸர்வாதராவாக இருக்கிறாள். இந்த உலகத்தை படைக்கும் நான்முகனுக்கும் அவளே ஆதாரம். மற்றும் அழிக்கும் தொழில் செய்யும் சிவனுக்கும் காக்கும் தொழில் செய்யும் மாதவனுக்கும் அவளேதான் ஆதாரம் அதனாலும் அவள் சர்வாதாரா என்று அழைக்கப் படுகிறாள்.இதயே அபிராம பட்டர் வாயிலாகப் பார்த்தால் நன்கு புரியும்.

நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும்நாரணனும்,அயனும் பரவும் அபிராமவல்லிஅடியிணையைப் பயன் என்று கொண்டவர். முத்தொழில் புரியும் மூவரும் தங்களது தொழில் சிறப்பாக நடைபெற உனது அடியயைத்தான் பற்றி இருக்கிறார்கள்



நாளை சந்திக்கலாம், இன்றைய சுண்டல் காரமணி

Monday, October 11, 2010

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 11 10 2010


   பராசக்தி


மிகப்பெரிய சக்தியாக நிலைத்திருப்பவள்.அவளுடையபரிவார தேவதைகளுக்கும் சக்திகொடுப்பவள் அதனாலும் பராசக்தியாக விளங்குபவள்.பரம் என்று அழைக்கப்படும் சிவனுக்கே சக்தி அளிப்பவளாக இருப்பதாலும் பராசக்தி.இது நமக்கே புரிந்த ஒன்று.சக்தி இல்லாமல் சிவனால் ஒன்றும் செய்ய முடியாது.பொதுவாக எல்லோரும் சொல்லுவார்கள் உனக்குத்தான் சக்தியில்லையே பேசாமே சிவனேன்னு இருக்க வேண்டியதுதானே என்று.
 
கலிகல்மஷநாசினி



கலிகாலத்தில் ஏற்படும் கஷ்டங்களை போக்குபவள். கலிகாலத்தில்தான் அழிவுகளும் கஷ்டங்களும் அதிகம்.ஆனாலும் அந்த கஷ்டங்களையும் போக்கும் சக்தி படைத்தவள்தான் பராசக்தி.

நிஷ்பிரபஞ்சா.


இந்த பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்டவள். உலகத்தைப் படைத்தவள் அவள்தான் இருந்தாலும் பிரபஞ்சகட்டுப்பாட்டுக்குள் அவள்தன்னை ஈடுபடுத்திக் கொள்ளமாட்டாள்.கடவுள் என்ற பதம் மாதிரி. கடந்தும் இருப்பவள் உள்ளும் இருப்பவள் அதன்னால்தான் கடவுளென்று பெயர் வந்தது.அதுபோல பிரபஞ்சத்துக்கு உள்ளேயும் இருப்பாள் அதைக் கடந்தும் இருப்பாள்.அபிராமபட்டரும் இந்த தத்துவத்தை விட்டுவைக்கவில்லை. "பூத்தவளே பூத்தவண்ணம் பதிநான்கு உலகத்தையும் காத்தவளே, பின் கரந்தவளே" என்று புகழ்ந்தார்
நாளை சந்திப்போம் பட்டாணி சுண்டல் எடுத்துக்கொண்டு செல்லுங்கள் 

 

Sunday, October 10, 2010

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 10 10 10





இன்றைய பெயர்கள்
நித்யதிருப்தா
                                                 
எப்பொழுதும் திருப்தி அடைந்து சந்தோஷமாக இருப்பவள். ஆன்மாக்களாகிய தன் பக்தர்களிடத்தில் குறைகள் இருந்தாலும் அதை மனதில் கொள்ளாது அவர் செய்யும் வழிபாடுகளால் சாஸ்வதமாக திருப்தி அடைபவள்.அவளுக்கென்று எந்த ஆசைகளும் இல்லாததால் மட்டும் நித்ய திருப்தாவாக இருப்பவள்.அது மட்டுமல்ல அவளது அடியார்களின் ஆசைகளையும் தீர்த்து வைத்து அவர்களையும் நித்யதிருப்தாவாகச் செய்பவள்.அவள் அதற்குமேலும் அடியயார்களுக்கு ஆசையே வரதாவண்ணம் அவர்களை வழிப்படுத்தி அவர்களையும் வசப்படுத்துபவள். ஆசையை தீர்த்து வைப்பதைவிட ஆசையே ஏற்படமல் செய்வது மிகவும் உத்தமம். திருமூலர் அதனால்தான் அடித்து கூறினார்" ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடுயாயினும் ஆசை அறுமின்"    இன்றைய காலகட்டத்தில் அப்படி நித்யதிருப்தாவாக ஒரு மனிதன் இருக்க முடியுமா?


ஆம் இருந்தார் ஒருவர் நம்முடைய காலகட்டத்திலேயே. அவர்தான் மஹாகவி பாரதியார்.நாம் இன்றைக்கு எந்த விஷயங்கள் எல்லாம் சந்தோஷம் என்று நினைத்து திருப்தி அடைவது போல் நினைக்கிறோமோ அவைகள் ஒன்றுமே இல்லாமல் இருந்தும் நித்யதிருப்தாவாக இருந்தார் . வீடு வாசல் கிடையாது, உனவுக்கு வசதி கிடையாது உடுக்க துணிவகைகள் கிடையாது ஆங்கிலேயன் தொல்லை தாங்காமல் பாண்டிச் சேரிக்கும் சென்னைக்கும் அலைந்துகொண்டிருந்தார் . . இருந்தாலும் அவர் என்ன சொன்னார் தெரியுமா" எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா" நாமாக இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்போம்.அம்பிகையை முழுவதும் நம்பிவிட்டாவர்களுக்குத்தான் இது சாத்தியம்

                                          


  பக்தநிதி
    


பக்தர்களுக்கு மிகப்பெரிய நிதியாக விளங்குபவள். அடியவர்கள் எதை கேட்டாலும் அதை அவர்களுக்கு அளித்து என்றும் குறையாத நிதியாக விளங்குபவள்.மற்ற நிதிகள் எல்லாம் ஒருகாலத்தில் அழிந்துவிடும் திருப்தியளிக்காமல் போனாலும் போகலாம் ஆனால் பக்தர்களுக்கு அவள் அளிக்கும் பக்தி என்ற நிதி இருக்கிறதே அது அள்ள அள்ள குறையாது திருப்தியளிக்காமலும் போகாது.  
நிகிலேஸ்வரி

இந்த அண்ட சராசரத்துக்கும் ஈஸ்வரியாக இருப்பவள். அகிலமென்றால் உலகம். நிகிலம் என்றால் இந்த உலகத்தையும் சேர்த்து உள்ள ஈரேழு பதிநான்கு உலகத்திற்கும் ஈஸ்வரியாகவும் தலைவியாகவும் இருந்து காப்பவள்.மனித வர்கம்மட்டுமல்லாமல் புல், பூண்டு,புழு,மரம்,செடி, கொடி,பறவைகள்,பாம்பு,கல்,கணங்கள்,அசுரர்கள்,முனிவர்கள் மற்றும் ஒரு செல் உள்ள தாவரங்கள் ஆகிய எல்லாப் பதிநான்கு பிறப்புக்களுக்கும் அவள்தான் தாயாக இருந்து காக்கும் நிகிலேஸ்வரி.
 
சரி இன்றைய சுண்டலான கடலைபருப்பு சுண்டலை எடுத்த்க்கொண்டு நாளை  சந்திக்கலாம்