Sunday, October 28, 2007

Sunday, October 21, 2007

கொலு முடிந்தது (10)








மேலே உள்ள மூன்று படங்களும்தான் என்வீட்டு சுடாத கொலு

மேலே உள்ளது என்னை வளர்த்த இந்தியன் வங்கியின் கொலு.


நவராத்திரி என்பது ஒன்பது இரவுகளோடு முடியவில்லை. 10ம் நாளான விஜயதசமியுடன் தான் விழா நிறைவு பெறுகிறது. எனவேஇ அது "தசரா' எனப்படுகிறது. விஜயதசமி என்றால் "வெற்றி தரும் 10ம் நாள்' என தமிழில் கூறலாம். போருக்கு புறப்பட்ட ராமன் ஒன்பது நாட்கள் சக்தி பூஜை செய்துஇ 10ம் நாளான விஜயதசமியன்று போர் துவங்கியதாக கூறப்படுகிறது.

எருமை உருவம் கொண்ட அசுரன் மகிஷன். அவனது தொல்லை தேவலோகத்தையும் விட்டு வைக்கவில்லை. அவனது மிருகத்தன்மை கண்டு மும்மூர்த்திகளும் அஞ்சினர். தேவலோக தலைமைப் பதவிக்கு குறி வைத்து அசுரகுல அரசன் மகிஷன் போரிட்டான். மிருகபல சேனையிடம் தேவர்படை தோல்வியுற்றது. தோல்வியடைந்த இந்திரனும்இ தேவாதி தேவர்களும் பிரம்மனிடம் முறையிட்டனர். அவர் திருமாலிடம் கூட்டிச் சென்றார். அனைவரும் சிவபெருமானை சந்தித்தனர்.மகிஷனின் கொடுமைகளை மும்மூர்த்திகளிடம் விளக்கினர். தேவர்கள் கொடுமைகளை பற்றி கேட்ட சிவபெருமானுக்கு கோபம் பொங்கியது. சாந்த ஸ்வரூபியான மாலவனுக்கும் மகிஷனின் கொடுமைகள் கோபத்தை ஏற்படுத்தியது. கண்கள் சிவந்து கோபாவேசமாக காணப்பட்ட இரு மூர்த்திகளுடன் பிரம்மனும் சேர்ந்து நின்றார். அந்த கோபக் கனல்களும் சாதுக்களின் வயிற்றிலிருந்து புறப்பட்ட தீபமும் ஜோதிவடிவாய் இணைந்து ஒன்றுபட்டது. அனைத்துமாக தேவியாக உருவம் பெற்றது.

சிவபெருமான் சூலமும்இ திருமாள் சக்கரமும் தேவேந்திரன் வஜ்ராயுதமும்இ யமதர்மன் தண்டாயுதமும்இ வருணன் போர் சங்கும்இ அக்னி தேவனின் சத்தாயுதமும்இ வாயு பகவான் காற்றினும் விரைவாக அம்பு வீசும் ஆயுதமும் அளித்தனர். ஆயுதம் தரித்த தேவிக்கு பிரம்மன் ஜபமாலையும்இ பாற்கடல் துõய ஆடைகளும்இ தெய்வசிற்பி அணிகலன்களும்இ சமுத்திர ராஜா பூமாலைகளும் இமயமலை சிம்மவாகனமும் தந்தனர்.
சர்வாலங்கரியாக அன்னை போருக்கு சித்தமானாள். அதையறிந்த மகிஷன் வெறிகொண்ட எருமையாய் தேவியை முட்டித் தள்ள முயன்றான். ஆனால்இ தேவியின் சக்தி முன்பு அவனது பலம் செல்லுபடியாகவில்லை. எருமை முகத்திலிருந்து பாதி வெளிவந்த நிலையில் மகிஷனை தேவி வதம் செய்துஇ "மகிஷாசுரமர்த்தினியாக' மாறினாள். மகிஷனை அழித்த தேவி விரதம் இருந்த காலம் நவராத்திரி. ஒன்பதாவது நாள் மகாநவமி. வெற்றி அளிக்கப் போகும் ஆயுதங்களை வைத்து தேவி பூஜை செய்த நாள் அது. எனவேஇ அதை ஆயுத பூஜை என்கிறோம். அசுரனை வெற்றிக் கொண்ட நாள் விஜயதசமி.

மகிஷாசுரன் போன்ற அசுர கணங்கள்இ இன்னும் உலகில் லஞ்சம்இ ஊழல் போன்ற வடிவங்களில் உள்ளன. அவற்றை அகற்றி அமைதியான வாழ்வு தர நவராத்திரி காலத்தில் தேவியை துதிப்போம்!
விஜயதசமி பண்டிகையன்று பல சுப நிகழ்சிகளும் தொடங்கப்படும். பல நிறுவனங்களில் புது கணக்கு துவங்குப்படும். பல புது நிறுவனங்களும் புதிதாக தொடங்கப்படும்.சரஸ்வதி பூஜை தினத்தன்று பூஜையில் வைக்கப்பட்டிருந்த புத்தகத்தை எடுத்து அம்மனை பிரார்த்தித்து வெற்றி பெற வேண்டும் என்று மாணவ, மாணவிகள் பூஜை செய்வார்கள்.


துர்கா லக்ஷ்மி சரஸ்வதி என்ற ஆரபி ராக சிவனின் பாடல் கீழே
ராகம்:- ஆரபி தாளம்:-ஆதி
பல்லவி
துர்கா லக்ஷ்மி சரஸ்வதி துணையடி பணிவாயே மனமே..(.துர்கா)
அனுபல்லவி
ஸ்வர்காபவர்க இன்பம் தருவாய் சுருதி புகழ்
பொருள் நவராத்ரியில் உள்ளன்போடு....(துர்கா0
சரணம்
முற்பிறப்புகளின் செய்வினை அழியவும்
மோகமும் கல்மனபேய்களும் அழியவும்
பொற்புயர் மங்கல தீபமும் விளங்கும்
புகழ்வுடன் மகிழ்வும் வாழ்வினில் துலங்கும்...(துர்கா)

சரஸ்வதி பூஜை தினத்தோடு நவராத்திரி விழா நிறைவடைந்து விடுவதான காரணத்தால் விஜயதசமி தினத்தன்று அம்மனுக்கு சுண்டல் நிவேதனம் கிடையாது.

இந்த பத்துநாட்களும் ஒரு விரதமாக எடுத்துக்கொண்டு பலவேலைகளுக்கு இடையில் பத்துநாட்களும் தேவியின் மீது பதிவு அமைந்ததற்கு அவளது ஆசியைத்தவிர என்செயல் ஒன்றுமில்லை.

தவறாமல் வந்து அன்னையின் ஆசியைப் பெற்ற அனைவருக்கும் (குறிப்பாக மின்னலுக்கு தினமும்வந்து என்னைஊக்குவித்தற்கு) ) நன்றி.
நாமும் ஆரத்தியுடன்(நன்றி டி டி) முடிப்போம்











Saturday, October 20, 2007

கொலுவுக்கு வாருங்கள் (9)






நவராத்திரியின் 9 நாள் பண்டிகையில் முக்கியமானதாக கருதப்படுவது சரஸ்வதி பூஜை.நான்முகன் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி. சரஸ்வதி கல்விக்கு அதிபதி. வெண்பட்டு உடுத்தி, கைகளில் வீணையும், ஏட்டுச்சுவடியும் ஏந்தி கல்விக்கும், ஏனைய கலைகளுக்கும், அதிபதியாக வெண் தாமைரையில் வீற்றிருக்கும் அம்பாள் சரஸ்வதி.அள்ள அள்ள குறையாத கல்வி செல்வத்தை வழங்கி அருள்பவள் சரஸ்வதி. எந்த செல்வங்களையும் விட கல்விச் செல்வம் மிக அவசியமானது. 'செல்வம் செல்வோம் என்று வரும், ஆனால், அழியாது நிலைத்து நிற்பது கல்வி செல்வம் தான்' . அவள் இருக்குமிடம் எதுவோ? பாரதியைப் பற்றி பாரதியின் பாடல் மூலமாகவே கேட்டுப்பாருங்கள்



வெள்ளைக் கமலத் திலே-அவள்



வீற்றிருப் பாள்,புக ழேற்றிருப் பாள்,



கொள்ளைக் கனியிசை தான்-நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,



கள்ளைக் கடலமு தை-நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே



பிள்ளைப் பருவத் திலே-எனைப்
பேணவந் தாளருள் பூணவந்தாள்.
வேதத் திருவிழி யாள்,-அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,



சீதக் கதிர்மதி யே-நுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்,



வாதத் தருக்க மெனுஞ்-செவி
வாய்ந்ததற் றுணிவெனுந் தோடணிந் தாள்,



போதமென் நாசியி னாள்,-நலம்
பொங்கு பல்சாத்திர வாயுடை யாள்.
கற்பனைத் தேனித ழாள்-சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையி னாள்,



சிற்ப முதற்கலை கள்-பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள்,சொற்படு நயமறி வார்-இசைதோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார்விற்பனத் தமிழ்ப்புல வோர்-அந்தமேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள்.

வாணியைச் சரண்புகுந் தேன்;-அருள்
வாக்களிப் பாளெனத் திடமிகுந் தேன்;



பேணிய பெருந்தவத் தாள்;-நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்,



பூணியல் மார்பகத் தாள்-ஐவர்
பூவை,திரௌபதி புகழ்க் கதையைமாணியல்



தமிழ்ப்பாட்டால்-நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே
!



வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்



வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;



கொள்ளை யின்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்!



உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;



கள்ள மற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத் துட்பொருளாவாள். (வெள்ளைத்)





மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,



மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;



கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள், கோத கன்ற தொழிலுடைத் தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள்இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)



வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள் பாட்டை நித்யஸ்ரீயின் குரலில் கேட்க செல்லவும் இங்கே



இன்று கொண்டகடலை சுண்டல்.












Thursday, October 18, 2007

கொலுவுக்கு வாருங்கள்( 7)

இன்று ஏழாவதுநாள் சரஸ்வதி தேவிக்குகந்த நாள் ஆரம்பம்.ஏழாம் நாளன்று சரஸ்வதி ஞான சக்தியாய்த் தோன்றுவதால் சரஸ்வதி தேவியை வெண் தாமரையால் அலங்கரித்து, பிலஹரி ராகம் பாடி, எலுமிச்சை சாதம் படைத்து வழிபட சரஸ்வதி கடாட்சம் கிட்டும், கல்வி சிறக்கும்


வாணி நீ அருள்வாய்! சரஸ்வதிக்கு உகந்த மலர் வெள்ளைத் தாமரை. சரஸ்வதிக்கு 'தூயாள்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. வெண்மை தூய்மைக்கு சான்று. சரஸ் என்றால் பொய்கை, நீர். வெள்ளம் போன்று கல்வியைப் பெருக்குவதால் சரஸ்வதி என்று அழைக்கப் பட்டாள். சரஸ் என்றால் அறிவு, ஒளி என்றும் பொருள். சூரியனுக்கு 'சரஸ்வான்' என்று பெயருண்டு


வட இந்தியாவில் கங்கையைப் போன்று சரஸ்வதி என்ற நதிஒன்று ஓடியதாக வேதங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. பின்பு அந்த நதி திசை மாறி எங்கோ மறைந்துவிட்டது.அந்த சரஸ்வதிஆறு எங்கே தோன்றியது? எங்கெல்லாம் ஓடி, எப்போது மறைந்தது என்பதைக் கண்டறிய நிபுணர்களைக் கொண்ட 'சரஸ்வதி ஆராய்ச்சிக் குழு' அமைக்கப்பட்டிருக்கிறது. திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலகாபாத் தலத்தில் கங்கை யமுனையோடு சரஸ்வதி ஊற்றுப்போன்று அந்தர் முகமாய் கலக்கின்றது என்றுநம்பப்படுகின்றது.


குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலையின் முதற்பாடல்

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளையுள்ளம்தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து, உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,உண்டாக்கும் வண்ணம்கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே
பொருள்
உலகு ஏழும் காத்து, அவற்றை உண்ட விஷ்ணுதுயில் கொண்டிருக்க, அவற்றைஅழிப்பவராகிய சிவன் பித்தனாகுமாறு, படைக்கும் ஆற்றல் கொண்ட பிரம்மன்சுவைக்கும்கரும்பான சகலகலாவல்லியே! உன்திருவடிகளைத்தாங்க, வெண்தாமரைக்கேஅல்லாமல், என்னுடைய தூய உள்ளமான, குளிர்ச்சி பொருந்திய தாமரைக்குத் தகுதிஇல்லையோ?

சங்கீத பாடம் ஆரம்பிக்கும் போது இந்தப்பாடலைத்தான் முதலில் கற்றுத்தருவார்கள்.ஆரபி ராகத்தில் அமைந்த முத்துஸ்வாமி தீக்ஷதரின் பாடல்
ராகம்:- ஆரபி தாளம்:- ரூபகம்
பல்லவி
ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே பரதேவதே அம்ப .....(ஸ்ரீ சரஸ்வதி..)
(அனனை சரஸ்வதியேநமஸ்காரம் சகலதேவதைகளும் வணங்கும்அம்பாளே)
அனுபல்லவி
ஸ்ரீபதி கௌரிபதி குருகுஹவினுதே விதியுவதே..(ஸ்ரீ சரஸ்வதி)
(லக்ஷ்மியின் பதியான திருமாலும், உமாவின் பதியான சந்திரசேகரனும்,முருகனும் வணங்கும் எப்பொழுதும் இளமையாய் இருப்பவளே)
சரணம்
வாஸனாத்திரய விவர்ஜிதே வரமுனிவரவித மூர்த்தே
(அறம் பொருள் இன்பம் அளிப்பவளே,நாரதமுனிவருக்கு தாயே)
வாஸவாத்ய கிலனீசர வரவிதரன பகுகீர்த்தே
(எல்லாவித வாத்யங்களுக்கும் ஆதாரமாக இருந்துகொண்டும், பல சிறப்புகளையும் கொண்டவளே )
தரஹாஸ்யயுதமுகாம்புருகே அத்புதசராணம்புருகே
(எப்பொழுதும் புன்னகை பூத்த முகத்தவளே,அதிசயிக்கும் சரணங்களை உடையவளே)
ஸ்மசாரவித்யாபகே ஸகலமந்த்ராக்ஷ்ர குஹே ...(ஸ்ரீ சரஸ்வதி..)
(உலக வாழ்க்கையில் கல்விக்கு அதிபதியே, எல்லாமந்திரங்களுக்கும் உட்பொருளாய் உறைபவளே ஸ்ரீ சரஸ்வதியே வணக்கம்)

<"மும்பைஜெயஸ்ரீ பாடுகிறார் இங்கே"> "

இன்று பிரசாதம் கடலை பருப்பு சுணடல்


Wednesday, October 17, 2007

கொலுவுக்கு வாருங்கள் ( 6 )


இன்று ஆறாவது நாள் லக்ஷ்மிக்கு உரிய நாள்.


ஆறாம் நாளன்று மஹாலக்ஷ்மி இந்திராணியாகத் தோன்றுவதால் அன்று செம்பருத்திப் பூக்களால் அம்பாளை அலங்காரம் செய்து, நீலாம்பரி ராகம் பாடி, தேங்காய் சாதம் படைத்து வழிபட மனக் கவலைகள் எல்லாம் நீங்கும், விரோதங்கள் அகலும், வெற்றிகள் பல கிட்டும். நீலாம்பரி ராகம்மனதை சாந்தப்படுத்தும் ராகம்.அதில் மீனாக்ஷி அம்பாள் பேரில் உள்ள இந்தப்பாடலைக் கேளுங்கள்.
<"நித்யஸ்ரீயின் நீலாம்பரி"> ">



ஸ்ரீரங்கத்திலே போனால் பார்க்கலாம். ரங்கநாதரை சேவிக்க வேண்டுமானால் ஏகப்பட்ட தூரம் உள்ளே போகவேண்டும். தாயாரை சேவிக்க வேண்டுமானால் ஒரு க்ஷணத்திலே சேவித்து விட்டு வந்து விடலாம் - பக்கத்திலேயே இருக்கிறாள் அல்லவா ! மஹாலக்ஷ்மி உடனே கிடைக்கிறாள் நமக்கு! திருவேங்கடமுடையான் சந்நதிக்குத் தான் போங்களேன்... தாயரை சீக்கிரமாக பார்த்துவிடலாம். அவன் சேவை சுலபமாக சுலபமாக கிடைக்குமா! தாயாருக்கு எவ்வளவு காருண்யம் நம்மீது. நாம் சுலபமாகச் சேவிக்கும்படியாக ரொம்பக்கிட்டே நெருங்கி நிற்கிறாள். அவனை எப்போதும் அணுகியே இருக்கிறாள்
மஹாலக்ஷ்மியின் அருள் இருந்தால் போதுமே வேறு என்ன வேண்டும் நமக்கு.திரு. சிவன் அவர்கள் தனது சங்கராபரண ராகத்தில் அமைந்த "மஹாலக்ஷிமி ஜகன்மாதா" என்ற பாடலில் உள்ளம் உருகி அழைக்கிறார். பாடலைப் பார்ப்போமா

ராகம்:-சங்கராபரணம் தாளம்:- மிஸ்ர சாபு

பல்லவி

மஹாலக்ஷ்மி ஜகன்மாதா
மனமிரங்கி வரமருள்...............(மஹாலக்ஷ்மி)


அனுபல்லவி

மஹாவிஷ்ணுவின் மார்பெனும்
மணிபீடமதனில் அமர்ந்திடும்
மன்மதனை ஈன்றருளும் தாயே
தயாநிதியே மஹா மாயே........(மஹாலக்ஷ்மி)


சரணம்

பாற்கடல் தரும் கிருபாகரி
பரிந்துவந்தென்னை ஆதரி
பங்கஜ மலர் வளர் அன்னையே-- கடைக்கண்
பார் ராமதாஸன் பணியும்......(மஹாலக்ஷ்மி)


இந்தப் பாடலை மிக இளம் வயதிலேயே இசை உலகை தன் குரலினால் கவர்ந்த அதே மாதிரி இளம் வயதிலேயே மறைந்த திருமதி.வஸந்தகோகிலத்தின் குரலில் <"இங்கே கேட்கவும்">">

கீழே பாருங்கள் உங்களுக்காக மஹால்க்ஷ்மி தன் இருகைகளாலும் தங்கக் காசுகளை தாரளமாக அள்ளித்தருகிறாள் அள்ளிக்கொண்டுபோங்கள்.

இன்று வேர்க்கடலை சுண்டல்.

Monday, October 15, 2007

கொலுவுக்கு வாருங்கள்(4)

இன்று நான்காவது நாள். மஹாலக்ஷ்மி அன்னையைப் போற்றும் நாள்.
எனது முன்பதிவுகளிலிருந்து எடுத்தது ஆனால் இதற்கும் பொருந்துகிறது.
ஸகல ஸம்பத்துகளையும் அளிக்கும் அன்னை அவள்.ஒரு ஏழை அளித்த நெல்லிக்கனிக்காக ஆதிசங்கரர் கனகமழை பொழியவைத்தார்.அந்த கனதாதராஸ்தவத்தில் இப்படி ஆரம்பிக்கிறார்


அங்கம் ஹரே:புனகபூஷன மாச்ரயந்தீ

ப்ருங்காங்கனேவ முகலாபரணம் தமாலம்

அங்கீக்ரு தாகில விபூதி ரபாங்கலீலா

மாங்கல்ய தாஸ்து மம மங்கல தேவதாயா

மலர்களாலாலும் மலர்மொட்டுக்களாலும் அலங்கரிகப்பட்ட மரத்தை எப்படி வண்டுகள் சுற்றிக் கொண்டு மொய்த்துக்கொண்டு இருக்குமோ அதுபோல மஹாவிஷ்ணுவின் மார்பெனும் மணிப்பீடமதில் அமர்ந்துகொண்டு அவரையே எப்பொழுதும் அகண்ட கண்களால் பருகிக்கொண்டு இருக்கும் மஹாலக்ஷ்மிதாயே, நீ முழுக்கண்ணாலும் பார்க்கவேண்டாம்,கொஞ்சம் கடைக்கண்ணால் ஏழை மக்களையும் பார்த்து எல்லா செல்வங்களையும் வழங்குவாய் அம்மா என்று சொல்கிறவர் யார் தெரியுமா முற்றும் துறந்த மஹான் ஆதி சங்கரர். தன் பக்தர்களுக்காக லக்ஷ்மியிடம் கையேந்தி நிற்கிறார்.

சங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரும் சிறந்த ஸ்ரீவித்யா உபசகருமான திரு. முத்துஸ்வாமி தீக்ஷ்தரும் லக்ஷ்மியின் மீது லலிதா ராகத்தில் "ஹிரண்மயிம்" என்ற கீர்த்தனத்தை இயற்றியுள்ளார்.லலிதா ராகமும் வசந்தா ராகமும் இரட்டைபிறவி சகோதரிகள் ஒரே ஒரு ஸ்வரம்தான் ப என்கிற பஞ்சமம்தான் கிடையாது லலிதாவில். அதைப்பற்றி பின்னால் விரிவாகப் பார்க்கலாம். ஒருசமயம் தீக்ஷ்தரை அவ்ர் மனைவி தனக்கு செல்வம் வேண்டும் என்பதாற்காக தஞ்சை மன்னரைப் புகழ்ந்து அவர் மீது கீர்த்தனை இயற்றிப் பாடி செல்வத்தைக் கேளுங்கள் என்று கேட்டாளாம். அதற்கு அவர் மறுத்து மனிதரைப் பாடமாட்டேன் என்று கூறி லக்ஷ்மியின் மீது இந்தக் கீர்த்தனையை பாடினார்


ராகம்: லலிதா தாளம்: ரூபகம்

பல்லவி

ஹிரண்மயிம் லக்ஷ்மீம் சதா பஜாமி

ஹீன மானவ ஆஸ்ரியம் த்வஜாமி-----(ஹிரண்மயீம்)

அனுபல்லவி

கிரதர சம்பிரதாயம் க்ஷிராம்புதி தனயாம்

ஹரிவத்ஸ்தலாலயாம் ஹரிணீம் கரனகிஸலயாம்

கரகமலத்ருத குவலயாம் மரகத மணிமய நிலயாம்------(ஹிரண்மயீம்)
சரணம்
ஸ்வேத தீபவாஸிணீம் ஸ்ரீகமலாம்பிகாம் பராம்
பூதபவ்ய விலாசணீம் பூசுர பூஜிதாம் வராம்
மாதராம் அப்ஜமாலினீம்
மாணிக்ய ஆபரணாதராம்
சங்கீத வாத்ய விநோதினீம்
கிரிஜாம் தாம் இந்திராம்
சீதகிரண நிபவதனாம்
ஸ்ருதசிந்தாமணி சதனாம் பீடவஸனாம்
குருகுஹ மாதுலகாந்தாம் லலிதாம்---- (ஹிரண்மயீம்)


ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் என்று தொடங்கும் ஸ்ரீசூக்தத்திலிருந்து முதல் அடியை எடுத்து தொடங்குகிறார்.
பல்லவி
தங்கமயமான வண்ணத்துடன் ஜொலிக்கும் லக்ஷ்மியைத்தான் நான் பாடுவேன் மற்றபடி ஒருபொழுதும் நான் மனிதர்களை பாடமாட்டேன்
அனுபல்லவி
அழிவில்லாத செல்வத்தைத் தருபவளும்
பாற்கடல் பெற்று எடுத்தவளும்
மஹாவிஷ்ணுவின் மார்பில் எப்பொழுதும்
கோவில் கொண்டு இருப்பவளும்
இளம் தளிரைப் போன்ற தனது செம்பஞ்சு சரணங்களை உடையவளும்
தனது கையினில் எப்பொழுதும் இருக்கும் தாமரையினால் அந்த பூவுக்கு அழகு சேர்ப்பவளும் இடுப்பில் மரகத மணி பச்சை ஒட்யாணத்தால் அலங்கரித்துக்கொண்டுஇருப்பவளுமானலக்ஷ்மியை மட்டும் தான்
நான் எப்பொழுதும் பாடுவேன்
சரணம்
வெண்மை ஓளிவிடும் தீபத்தில் வசிப்பவளும்
பூலோகத்தில் ஸ்ரீகமலாம்பிகையாக உருவெடுத்தவளும்
சகலபூதங்களும் அமைதியாக அவளிடத்தில் உறைபவளாகவும்
தேவர்களாலும் மனிதர்களாலும் பூஜிக்கப் பெற்று வரம் தருபவளாகவும்
உலகுக்கே தாயாக விளங்குபவளாகவும் தாமரைப் பூவில் அமர்ந்தவளும்
மாணிக்கம்,வைரம், முதலான நவரத்தினங்களால் அலங்கரித்துக் கொண்டு இருப்பவளும்
சங்கீதத்தையும் வேறு வேறு வத்யங்களயும் கேட்டு சந்தோஷிப்பவளாகவும்
சந்திரனனின் குளிர்ந்த கிரணங்களைப் போன்ற முகமுடையவளும்
அழகிய சிந்தாமணி மண்டபத்தில் இருக்கும் ரத்னபீடத்தில் அமர்ந்திருப்பவளும்
குருகுஹனான முருகனுக்கு மாமனான மஹாவிஷ்ணுவின் அன்பிற்கு உரியவளும் லலிதாதேவியுமான மஹாலக்ஷ்மியைத்தவிர வேறு யாரையும் பாடமாட்டேன்
என்ன ஒரு வார்த்தை ஜாலம். இதை எனக்கு தெரிந்தவரை மொழிபெயர்த்துள்ளேன். ஆஹா எப்படிப்பட்ட வர்ணனை. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது ஓம் என்ற பிரணவகார மந்திரத்திலிருந்து "ம்" (சங்கீதத்தில் முக்கியமான) மத்யம ஸ்வரமான (ம) என்ற அம்பாளுக்கு உகந்த பீஜாக்ஷ்ர மந்திரத்தை " ஹிரண்மயீம், ஹரிணீம்,தீபவாஸிணீம்,என்று எல்லாவார்த்தைகளும் "ம்" என்று முடிவு பெறும் வண்ணம் அமைத்துள்ளது மிக விசேஷமாகும்.ஸ்ரீ சூக்தத்திலும் இதே மாதிரி "ம்" என்ற ஸ்வரம் எல்லா இடத்திலும் வரும்
லலிதா ராகத்திற்கே உரிய சுத்த தைவதத்தை முக்கியமாக வைத்து விளையாடி இருக்கிறார்.பாட்டைக்கேட்டாலே லலிதா சஹஸ்ரநாமம் கேட்டால் போல் இருக்கும்
முருகனின்பக்தரான தீக்ஷதர் இதில்முருகனின் மாமனான விஷ்ணு என்று முத்திரை வைத்துள்ளார். மற்றும் கீர்த்தனையின் ராகமான லலிதாவையும் கடைசியில் கொண்டுவ்ந்து வைத்து முத்தாய்ப்பு வைத்துள்ளார்



இனி பாடலை திருமதிகள் ராதா ஜெயலெட்சுமி அவர்களின் குரலின் மூலமாக <" இங்கே கேட்டு ரசியுங்கள்>"
சரி இனி முக்கிய வேலைக்கு வருவோம். இன்றைய சுண்டல் வெள்ளை கொத்துக் கடலை.பாட்டுக்கு வாயைத் திறப்பவர்கள் மட்டும் சுண்டலுக்கு வாயைத் திறக்கலாம் என்று சொன்னால் அம்பியும் மேடமும் சண்டைபோடுவார்கள் அல்லது சண்டைக்கு வருவார்கள்,ஆனால் என்ன மின்னல் மின்னினால் இவர்கள் எங்கேயோ போய் விடுவார்கள்

Sunday, October 14, 2007

கொலுவுக்கு வாருங்கள்(3)

இன்று மூன்றாவது நாள்.ஸ்ரீராஜராஜேஸ்வரிக்கு உரிய நாள்

திருமஹாவைத்யநாதசிவனின் அருமையான பாடல் அன்னையின் பேரில்
ராகம்:- ஜனரஞ்ஜனி தாளம்:- ஆதி

பல்லவி
பாஹிமாம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கிருபாகரி சங்கரி
பாஹிமாம்
அனுபல்லவி
ஏஹி சுகம் தேஹி சிம்ஹவாகினி தயாபிராவாகினி மோஹினி
சரணம்
பண்ட சண்ட முண்ட கண்டனி மஹிஷ பஞ்ஜனி ரஞ்ஜனி நிரஞ்ஜனி
பண்டித ஸ்ரீகுஹதாஸ போஷிணி சுபாஷிணி ரிபு பீஷணி வர பூஷணி
பாட்டும் பரதமுமாக கீழே பாருங்கள்



ஸ்ரீசக்ராதிபதியாகவும் இருப்பவளுமவளே.


எல்லோருக்கும் தெரிந்த பிடித்த அகத்திய கீதமான "ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாஸனேஸ்வரி" பாடல் இதே

ராகம்: செஞ்சுருட்டி தாளம்:- ஆதி

ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகேபுவனேஸ்வரி
அனுபல்லவி:
ஆகம வேத கலாமய ரூபிணி அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோஹரிஞான வித்யேஸ்வரி ராஜ ராஜேஸ்வரிஸ்ரீ….)
சரணம்:1 ராகம்: புன்னாகவராளி
பலவிதமாய் உன்னை ஆடவும் பாடவும் பாடிக் கொண்டாடும் அன்பர் பத மலர் சூடவும்
உலக முழுதும் உன்னை அகமுரக் காணவும் ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி (ஸ்ரீ….)
2. ராகம்: நாதநாமக்க்ரியா
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் உயரிய பெரியோர்கள் ஒன்றிடக் கூட்டிவைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன் ஊழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய் நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி (ஸ்ரீ….)
3. ராகம்: சிந்து பைரவி
துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய் தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய் அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி (ஸ்ரீ…)
இன்று பிரசாதம் மின்னலுக்காக அவல் புட்டு.நவராத்திரியில் ஒரு நாள் புட்டு படைப்பது என்பது சம்பிரதாயம். அதை எனக்கு நினைவூட்டிய மின்னலுக்கு நன்றி.அம்பி வருவதற்குள் வந்து விடு.அப்பறம் நான் கிராண்டி கிடையாது.

Saturday, October 13, 2007

கொலுவுக்கு வாருங்கள்(2)

இன்று இரண்டாம் நாள் நவராத்திரி பண்டிகை.இன்றும் துர்கா மாதாவான
ஈஸ்வரிதான் பிரதானம்.இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியை மூன்று
மூன்று நாட்களாக பிரித்து முறையே துர்கா, லக்ஷ்மி,சரஸ்வதியாக வழிபாடு.
ஈஸ்வரி என்றாலே ஜகதீஸ்வரி,அகிலாண்டேஸ்வரிதான் ஞாபகத்துக்கு வரும். திருச்சிக்கு அருகில் இருக்கும் திருவானைக்காவல் கோவிலில் குடிகொண்டு இருப்பவள்.அம்பாள் மிக அழகு! அதுவும், அர்த்த ஜாம பூஜைக்கு அலங்கரிக்கப்பட்ட அகிலாண்டேசுவரியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அவ்வளவு களை, அழகு, கம்பீரம். அகிலாண்டேசுவரி மிக உக்ரமான அம்பாள் என்றே கூறுவார்கள். நடு இரவில், சலங்கை ஒலி 'ஜல் ஜல்' என ஒலிக்க, அவள் கோவில் பிரகாரங்களை வலம் வருவதாக ஐதீகம்; இரு காதுகளிலும் ஆதி சங்கரர் அணிவித்த ஸ்ரீசக்ரத்தை தாடங்கம்என்கிற காதணிகளைஅணிந்து எதிரில்அமர்ந்து இருக்கும் ஆனை முகத்தோனுக்கும்,அடியவருக்கும் அருள்பாலிப்பவள். பார்க்கப் பார்க்க திகட்டாத ஜ்வலாமுகி அவள். ஸ்ரீ வித்யா உபாஸகரானதிரு.முத்துஸ்வாமிதீக்ஷ்தர்அவர்கள்திருவானைக்காவல்

உறைஅகிலாண்டேஸ்வரியின் மீது த்விஜாவந்திராகத்தில்அருமையானகீர்த்தனையைவழங்கியுள்ளார்.
இந்தப்பாட்டைக் கேட்டாலேஅம்மனை நேரில் பார்த்தஉணர்வு வரும். அதுவும் மும்பை ஜெயஸ்ரீ குரலில் கேட்டால் . கேட்டுப் பார்த்துதான் சொல்லுங்களேன்

<"அகிலாண்டேஸ்வரீம் ரக்ஷமாம் "> ">(மும்பை ஜெயஸ்ரீ)
<"திரு.சேஷகோபாலன் பாட்டை இங்கே கேட்கவும்">">

சரி பட்டைக் கேட்டாச்சா சுண்டல் பிரசாதம் வாங்கிச் செல்லுங்கள் .
சுண்டலைப் பற்றிய ஒரு வெண்பா

விருப்புடன் உண்ணவே வெந்த பருப்பில்
துருவிக் கலந்திட்ட தேங்காய் மிளகாயும்
உப்பும் கடுகுமிட்ட சுண்டலில் உண்டாம்
உடலுக் குற்ற புரதம்