-

சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே!
நடராஜனது ஐந்து சபைகள்தான் மேலேயுள்ளது. மதுரையில் பாருங்கள் வலது பாதம் தூக்கி ஆடுகிறார். அதான் ஊருக்கெல்லாம் ஒரு வழி என்றால் மதுரைக்காரர்களுக்கு மட்டும் தனி வழி.
திரு. மௌளி அவர்கள் போனபதிவுக்கு போட்ட பின்னுட்டத்தில் "இடது பதம் தூக்கி ஆடும் நடராஜனடி பணிவோமே"என்ற பாட்டை தருமாறு கேட்டிருந்தார். இதோ படமும் கருத்தும் முன்னே பாடல் பின்னே.
சென்னைக்கு அருகில் உள்ளது திருவாலங்காடு திருத்தலம். கரைக்கால் அம்மையாருக்கு சிவபதவி அளித்த இடம். நடராஜர் எட்டு கரங்களுடன் நடனம் ஆடும் தலம் ( ரவி எட்டுகைகள் இருக்கிறதா இல்லையா எண்ணிப்பார்த்து சொல்லுங்கள்)அபய கரம்,அருள் கரம்,அதிரமுழங்கும் உடுக்கை ஒரு கரம், திரிசூலம் ஒரு கரம், மான் ஒரு கரம் அக்னி ஒரு கரம், நாகபாசம் ஒரு கரம் மற்றும் நாட்டிய முத்திரையுடன் ஒர் கரம் ஆக எட்டு கரம்
உலகத்தின் சுழற்சிதான் நடராஜரின் நடனம்.அஜபா நடனம் என்றும் கூறுவார்கள். ஐயனின் வலக்கரத்திலுள்ள உடுக்கை படைத்தல் தொழிலையும், அபய கரம் காத்தல் தொழிலையும், இடக்கரத்தில் உள்ள அக்னி அழித்தல் தொழிலையும், முயலகனின் மேல் ஊன்றிய பாதம் திரேதம் எனப்படும் மறைத்தல் தொழிலையும் , தூக்கிய குஞ்சிதபாதம் முக்திக்கு காரணமாகி அருளல் தொழிலை குறிக்கின்றது. நம் பாபநாசம் சிவன் அவர்கள்
அவனது நடனத்தை இப்படி வர்ணிக்கிறார்:-
செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி
ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி
கங்கையை திங்களை கருத்த சடையில் தூக்கி
இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத........(காலைத்தூக்கி)
நந்தி மத்தளம் கூட்ட நாரதர் யாழ் தூக்க
தோம் தோம் என்று என் தாளம் சுருதியோடு தூக்க
சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னிமேல் கரம் தூக்க
முந்தும் வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க"
மேலும் கூறுகிறார்
கஞ்ஜ மலரிதழின் விழியாள்-ஓயாக்காதலுடன் சிவகாமி மணாளநின்
சரணம்கொஞ்சும் சதங்கை கலீர் கலீரென
குழவி இளம் பிறை பளீர் பளீரென
நஞ்சம் தவழும் நீல கண்டமும் மின்ன
ஒருநங்கை கங்கை சடையில் குலுங்க-நடமாடும் ஆடல் அரசே.
இந்தப்பின்னனியில் மேலே உள்ள ஆடலரசனின் படத்தை இந்த பாடலுடன்/<"இங்கே">"> கேட்டுப் பாருங்கள். மனதில்அவனது ஆனந்த நடனம் தெரியும்.
திருவாலங்காட்டில்தான் தன்காதிலிருந்த குண்டலம் கீழே விழுந்ததாக
பாவனையுடன் சிவன்அதை இடது காலால் எடுத்து அணிய அதுபோன்று செய்ய முடியாமல் சிவகாமி தோல்வியோடு தலை குனிந்தாளாம். ஆனால் நம் சிவனின் பார்வையோ வேறு மாதிரி இருக்கிறது.காளியுடன் ஆடும்போது தோற்றுவிடும் நிலையை அடையும் தருணத்தில் எங்கே நாம் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தினால் காதிலிருக்கும் குண்டலம் கீழே விழுவதுபோல விழவைத்து (அழுகுணி ஆட்டம் ஆடி) இடது காலால் எடுத்து பின்பு உயரத்தூக்கி அதை காதில் அணிந்ததாக இப்படி கூறுகிறார்
"சுபஞ்சேர் காளியுடனாடிப் படு தோல்வி யஞ்சி திருச்செவியிலணிந்த-மணித்தோடு விழுந்ததாக மாயங்காட்டியும் தொழும்பதம் உயரத்தூக்கியும்-விரிப்ரபஞ்சம் முழுதும் ஆட்டும் நின்திருப் பதம்தஞ்சமென உனை அடைந்தேன் பரிந்தென் திண்டாட்டம் கண்டு பரிசு தரும்துரையே சபை நடுவில் தத்திமி என்று ஆடும்
சரி இனி திரு. மௌளி கேட்ட பாடலுக்கு வருவோம்.திரு. சிவன் அவர்களின் அருமையான பாடல்களுள் ஒன்று.கமாஸ் ராகத்தில் அமைந்த இடது பதம் தூக்கி என்ற பாடல்.
இறைவன் எப்படி ஆடுகின்றான் என்பதை எவ்வளவு விவரமாக வர்ணிக்கின்றார். புன்னகையோடு இடது காலை தூக்கி தில்லையிலே ஆடுகிறானாம். அவன் மட்டும் ஆடவில்லை அவனுடன் இந்தப் பூமியும் ஆடியது(சுழற்சி), தலைமேல் இருந்த கார்க்கோடகன் என்ற கொடிய பாம்பும் ஆட,பக்தர்கள்ஜெயஜெயவெனகோஷிக்க,புலிப்பாதமுனிவர்கண்குளிர்ந்து
கொண்டாட ஆடினார். ஆடியபோது ஆண்டவனின் கால் சிலம்புகள் கலீர் கலீர்என்று முழக்கமிட,தலையில் இருக்கும் பிறைச் சந்திரன் தலை இந்த பக்கமும் அந்தபக்கமும் ஆடும் போது பளீர் பளீர் என்று மின்ன, மைத்துனாரன திருமால் மத்தளம் வாசிக்க, சிவகாமி மணாளன் திருசிற்றம்பலத்தில் மகிழ்ச்சியோடு ஆடுகின்றான்
யார் வேண்டுமானாலும் எந்த ஊருக்கும் வேண்டுமானாலும் போங்கள். ஆனால் தப்பித் தவறிகூட பணடர்பூர் போய்விடாதீர்கள்.அப்படியே போனாலும் சந்திராபாகா நதிக்கரையில் இருக்கின்ற விட்டோபா பாண்டுரங்கணை மாத்திரம் பார்த்துவிடாதீர்கள். இடுப்பில் இரண்டு கையையும் வைத்துக்கொண்டு நிற்கிறானே யார் தெரியுமா அவன். "படா சித்தச் சோர மனமோஹன்' அவன் தொழிலே மனங்களை கொள்ளையடிப்பதுதான். அவனை நீங்கள் பார்த்துவிட்டால் அவ்வளவுதான்
"மேரா சித்தசோர விரஜமோஹன்" உங்களுடைய மனத்தையும் அபஹரித்துவிடுவான். ஓ.ஸ் அருணின் இந்த அபங்கம் "விட்டல.... விட்டல...'மிக அருமையானது.பாண்டுரங்கனின் கோவிலில் 24 மணிநேரமும் விட்டல விட்டல என்று நாமசங்கீர்த்தனம்தான்.கேட்டுத்தான்,பார்த்துத்தான் ரசியுங்களேன்.
வெள்ளைக் கமலத் திலே-அவள்
வீற்றிருப் பாள்,புக ழேற்றிருப் பாள்,
கொள்ளைக் கனியிசை தான்-நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,
கள்ளைக் கடலமு தை-நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
பிள்ளைப் பருவத் திலே-எனைப்
பேணவந் தாளருள் பூணவந்தாள்.
வேதத் திருவிழி யாள்,-அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,
சீதக் கதிர்மதி யே-நுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்,
வாதத் தருக்க மெனுஞ்-செவி
வாய்ந்ததற் றுணிவெனுந் தோடணிந் தாள்,
போதமென் நாசியி னாள்,-நலம்
பொங்கு பல்சாத்திர வாயுடை யாள்.
கற்பனைத் தேனித ழாள்-சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையி னாள்,
சிற்ப முதற்கலை கள்-பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள்,சொற்படு நயமறி வார்-இசைதோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார்விற்பனத் தமிழ்ப்புல வோர்-அந்தமேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள்.
வாணியைச் சரண்புகுந் தேன்;-அருள்
வாக்களிப் பாளெனத் திடமிகுந் தேன்;
பேணிய பெருந்தவத் தாள்;-நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்,
பூணியல் மார்பகத் தாள்-ஐவர்
பூவை,திரௌபதி புகழ்க் கதையைமாணியல்
தமிழ்ப்பாட்டால்-நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே!
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்!
உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத் துட்பொருளாவாள். (வெள்ளைத்)
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள், கோத கன்ற தொழிலுடைத் தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள்இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)
வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள் பாட்டை நித்யஸ்ரீயின் குரலில் கேட்க செல்லவும் இங்கே
இன்று கொண்டகடலை சுண்டல்.
கீழே பாருங்கள் உங்களுக்காக மஹால்க்ஷ்மி தன் இருகைகளாலும் தங்கக் காசுகளை தாரளமாக அள்ளித்தருகிறாள் அள்ளிக்கொண்டுபோங்கள்.
நானும்தங்கமணியும்விழாவுக்கு5.30 மணிக்கேகிளம்பிவிட்டோம்.தேவி பராடைஸ் அரங்கமே அதிர்ந்து கொண்டு இருந்தது.கணேசனின் குடும்பத்தினரோடு எங்களுக்கு இருக்கை. அமர்ந்து கொண்டு வந்தவர்களை கணக்கெடுத்துக்கொண்டு இருந்தேன்.வந்தவர்கள் டைரெக்டர்கள் ஷங்கர்,ஸ் ஏ சந்திரசேகர்,கே ஸ் ரவிகுமார், ராமநாரயாண்,மற்றும் வைரமுத்து,ஒய் ஜி மஹேந்திரா,அப்பாஸ், அருண்விஜய்,திரையுலக பிரமுகர்கள் கூட்டம்தான்.சுசி. கணேசன் டென்ஷனோடு பரபரப்போடு அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தார். சரியாக 6.30 மணிக்கு ஆனந்த கண்ணனும் சுப்பிரியாவும் சன் டி வி சார்பில் வணக்கம் சொன்னார்கள்.
கந்தசாமி என்று பலத்த சப்தத்துக்கு இடையில் வ்ந்தார் கதாநாயகன் விக்ரம் சூட்டும் கோட்டும் அணிந்து மிகவும் இளையவராக டெரைலர் பாட்டை பாடியவண்ணம். பின்பு ஷெரேயாவும் ஒருபாடலுக்கு ஆடினார்.டிஜிடல் பானரில் விக்ரம் வானத்துக்கும் பூமிக்குமாக பல வேடங்களில் தூள் கிளப்பினார்.
![]()
![]()
இந்த விழாவில் பேசும்போது சுசி. கணேசன் கூறினார். படத்தின் சிறப்பு அம்சமே ஏழை பணக்காரன் வித்தியாசத்தின் விளவுகளை புதிய பார்வையில் சொல்லுவதுதான்.இதில் சிறப்பாக நடிக்கவும் பாத்திரத்தோடு ஒன்றி இருப்பதாற்கும் மிகக்கடுமையாக கட்டுப்பாட்டுடன்இருந்து தனது எடையில் 15 கிலோவைக் குறைத்தாராம் விக்ரம்(Professional commitment). மற்றும்ஒரு பாரட்டுக்குரியவிஷயம் கந்தசாமி படப்பிடிப்புக் குழுவினர் உசலம்பட்டிக்கு பக்கத்தில் இருக்கும் சங்கம்பட்டி- காந்திநகர் ஆகிய கிராமங்களைத் தத்துஎடுத்துக்கொண்டுஅவர்களுக்கு நல்ல ரோடு, பள்ளிக்கு சமையல்கூடம்,வசதியான மயானம் ஆகியவற்றை செய்து கொடுத்தார்கள்.பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் கிராமத்தை மறந்து நகரத்துக்கு வந்த மனிதர்களை மறுபடியும் கிராமத்துக் கூட்டிக்கொண்டு போனார். ஆனால் எதயும் புதுமையாகச் செய்யும் சுசி கணேசனோஒரு கிரமத்து மக்களையே தேவி பரடைஸுக்கு கூட்டிக்கொண்டு வந்தார். ஆமாம் சங்கம்பட்டி-காந்திநகர் மக்களையே கொண்டு வந்துவிட்டார் நன்றி சொல்லுவதற்கு.கிரமசேவையைப்பற்றி எல்லோரும் பேசுவார்கள் ஆனால் சிலரே செய்வார்கள்.
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்" ..........வள்ளுவன் சொன்னது.
விக்ரம்பலவேடங்களில்வந்தாலும் பெண்மணியாக நடித்த வேடம் மிகவும் பொருந்துகிறது.படத்தைப்பார்த்துவிட்டு சொல்லுங்கள்
![]()
இனி விக்ரம் பெண்களிடம் மாத்திரம் அல்ல ஆண்களிடமும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
![]()
மிகப் பிரபலமான டைரெக்டரான மணிரத்தினத்தின் மிகச் சிறந்த படைப்புக்களில் சில மௌனராகம்,நாயகன்,தளபதி,மற்றும் திரு. சுசி கணேசன் என்றெல்லாம் வந்தவர்கள் பேசினார்கள்ஆனால் ஆசானைக் காணவில்லை.
All that begins well must also end well.
படப்பிடிப்பு பூஜைக்கே இந்த பில்டப்ன்னா 100 ஆவது வாரம் பட விழாவுக்கு எப்படி இருக்குமோ?
Welldone Susi Ganesan Best of Luck