
ஸ்ரீ ராம ஜெயம்
மாதவம் செய்த மாதவள் அஞ்சனை மடிதனில் மலர்ந்தவனாம்
மாதவன் ராமன் தூதுவன் என்றே மாகடல் கடந்தவனாம் ---(மாதவம்)
மாதவன் ராமன் தூதுவன் என்றே மாகடல் கடந்தவனாம் ---(மாதவம்)
ராமனைப் போற்றிப் பாடிடும் நேரம் ரகசியமாய் வருவான்
கைத் தாளங்கள் போட்டு ஆனந்தமாக மனங்குளிர்ந்தே மகிழ்வான்
கண் மடல் மூடிமெய் மலர் சூடி செவி மடல் திறந்திடுவான்
நாதனின் காதை யாவும் கேட்டு விழி மழை சொரிந்திடுவான் ---(மாதவம்)
ராமனை நெஞ்சில் மாமலை கையில் சுமந்திடும் ஜெய ஹனுமான்
பீமனை அள்ளி மார்புடன் சேர்த்து அணைத்திடும் ஜெய ஹனுமான்
சந்தன வாசம் வீசிட எங்கும் வலம் வருவான் ஹனுமான்
நித்திலம் தன்னில் நித்தியம் வாழ்ந்து ஜெயம் தரும் ஜெய ஹனுமான்.. மாதவம்)
கோமகனாக வாழ்ந்திடும் சீலன் கோயில் நாம் அடைவோம்
கோசலை ராமன் நாமத்தைப்பாடி அவனருள் வேண்டிடுவோம்
வீழ்ச்சியை மாற்றி மீட்சிகள் சேர்க்கும் பாடிடு அவன் மகிமை
வான் மழை போல பூமழை வார்க்கும் மாருதி அவன் கருணை ---(மாதவம்)
நன்றி.. ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்திப்பாமாலை இரட்டைப்பாதை சேகர்
இன்று ஹனுமத் ஜயந்தி
வீர பராக்கிரமம் இருப்பினும் அரசகுலத்து அந்தஸ்துகள் இருப்பினும், புத்தி விசாலம் இருப்பினும் ,ஒருபடையை நிகர்த்த பலமுள்ள உடன் பிறப்பு கூடவெ இருப்பினும்,விதியின் வலியால் மனைவியை ஸ்ரீ ராமன் பிரிய நேரிட்டது.
மாதர்களை மனதளவிலும் தீண்டாத பிரும்மச்சாரி, கடும் ஒழுக்க சிந்தனை உடையவரும், புலன்களை அடக்கி ஆண்டு அதன் மீது ஆட்சி செலுத்த வல்லவரும்,இணயில்லாத பலம் மிக்கவரும்,அதே நேரம் பணிவும், பக்தியும் மிகுந்தவரும், இனிமையாகபேசுபவரும்,பேச்சில் வல்லமை உடையவரும்,சோர்வே இல்லாதவரும், தர்மத்தின் பக்கம் நிற்பவருமான ஸ்ரீஆஞ்சநேயரின் துணை தேவைப் பட்டது.ஒழுக்கமும், தர்மமும்தான் பொய்மையை வெல்ல மிக உதவி செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.வெறும் புஜ வலிமை போதாது.
மனித மனம் ஒரு வானரம். அதை அடக்கி ஆண்டு ஆட்சி செய்கிற விஷயம் ஹனுமான்.அப்படி அடக்கி ஆண்டதை அலட்டாது மிக வினயமாக எங்கு பார்த்தாலும் கைகூப்பி அமைதியாக புன்சிரிப்போடு ஹனுமான். தன்னை பாராட்டிக் கொள்ளாமல் தன் பலம் எத்தகையது என்றுதானே ஆராய்ச்சி செய்யாமல் பலம் இருக்கிறதா, இருந்து விட்டு போகட்டுமே என்று மிக மிக வினயமாக நின்ற நிறைகுடம் ஸ்ரீஹனுமான். அலட்டலும், அஹம்பாவமும் வாழ்க்கையாகப்போன இந்தக் காலத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் பராக்கிரமத்தை படிக்கிறபொழுது நாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் மிகுந்து வருகிறது. சுந்தர காண்டம் ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட துக்கத்தை மட்டும் சொல்லித்தரவில்லை. அதற்கு ஏற்பட்ட விடிவு நேரத்தையும் விவரிக்கிறது. மிகப் பெரிய நம்பிக்கையை ஊட்டுகிறது. நீங்கள் வெற்றி பெற்றாலும் புன்சிரிப்போடு நன்றி என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்க உங்களுக்கு உதவும்.
ஜய ஜய ஹனுமான் கோஸாயி
கிருபா கரஹூ குருதேவெ கீ நாயீ
ஜய ஜய ஹனுமான் கோஸாயி
கிருபா கரஹூ குருதேவெ கீ நாயீ

































அம்பாளுக்கு ஆயிரம் நாமங்கள் மட்டும்தானா என்ன ! அவள்தானே நாமரூபா. எல்லா வார்த்தைகளும் அவளிடமிருந்துதான் உருவாகின.காளிதாசன் கூறும் போது வாகர்த்தாவி வசம் விருக்த்தவ் வாகர்த்த பிரபத்தியே, வார்த்தைகளும் அதிலிருந்து வரும் பொருளும் நீதான் என்கிறார்.இருந்தாலும் இந்த நவராத்ரி திருநாளில் எனக்குத் தெரிந்த வரை லலிதா ஸ்ஹஸ்ரநாமத்திலிருந்து சில நாமக்களை பற்றி எழுத எண்ணி அவளின் அருளோடு முயல்கிறேன் கொலுவும் உண்டு சுண்டலும் உண்டு. தினமும் வாருங்கள் வந்து அம்பிகையின் அருளுக்கு பாத்திரமாகுங்கள். முதல் நாமவாக உதயத்பானு ஸ்கஸ்ராபா என்ற நாமத்தை எடுத்துக்கொள்ளலாம்.அம்பிகையின் முகத்தைவர்ணிக்கும் எல்லோரும் இதை கையாண்டு இருக்கிறார்கள். அம்பாளுடைய முகாரவிந்தம் எப்படி இருக்கும் தெரியுமா? ஆயிரம் சூரியர்கள் விடிகாலையில் உதிக்கும் போது அதன் கிரணங்கள் எப்படி சிவப்பு வர்ணமாக இருக்குமோ அப்படி இருக்குமாம்.பின்னர், வேறு ஒரு இடத்தில் அவளது முகம் சரஸ்சந்திர நிபானனா சரத்காலத்தில் உதிக்கும் குளுமைபொருந்திய சந்திரனைப் போல் இருக்குமாம். இதென்ன எப்படி சூரியனைப் போலும் சந்திரனைப் போலும் இருக்குமா ஒருவரது முகம் முரன்பாடாக இருக்கிறதே என்கிறீர்களா? மகிஷாசுரன், மதுகைடபன், போன்ற அசுரர்களை வதைக்கும்போது உக்கிரமாக சிவந்து உத்யத்பானு ஸ்காஸ்ராபாவாக இருக்கும்.அபிராமி பட்டர்,போன்ற அடியார்களை காக்கும் போது ஸ்ரஸ்ச்ந்திர நிபானனாவாக இருக்கும்.ஒரு புலி காட்டில் தன் உணவுக்காக இரையை வேட்டையாடும்போது அதனுடைய முகத்தைப் பார்த்திருக்கிறீர்களா வெங்கண் சிவந்து வடிவால் முறுக்கி தன்கோரப்பற்களினால் கடித்து குதறி உக்கிரமாக உதயசூரியன்போல இருக்கும். அதுவே பிறந்து 2 நாட்களே ஆனா தன் குட்டிகளை காப்பதற்காக ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு தூக்கிக்கொண்டுபோகும்போது அதே பற்களைத்தான் உப்யோகித்து அதற்கு வலியில்லாமல் வாயில்கவ்விக் கொண்டு போகும். ஒரு சாதரண மிருகத்திற்கே வித்தியாசமான மறுபட்ட முகத்தோற்றம் கொண்டு வரும்போது அகிலாண்ட நாயகிக்கு இது ஒரு பெரிய விஷயமா? 
திருகடவூரில் காலசம்ஹாரமூர்த்தியின் சக்தியாகத் திகழ்பவள்பாலம்பிகை. அமுதகடேஸ்வரரின் ஷக்தியாக்த் திகழ்பவள் அபிராமி.திருக்கடவூர் என்பதுஅஷ்ட விரட்டத் தலங்களுள் ஒன்று. சிவன் வீரச்செயல் புரிந்த இடங்கள் எட்டு. அவற்றுள் காலனை காலால் உதைத்து அவனுடைய மமதையை ஸ்ம்ஹரித்துக் காலஸம்ஹார மூர்த்தியாக வடிவெடுத்த தலம் திருக்கடவூர். பாற்கடலைக் கடைந்து எடுத்து அமிர்தத்தைப் பகிர்ந்துகொள்வதற்காகத் தேவர்களும் அசுரர்களும் மாஹேஸ்வரனிடம் விண்ணப்பிக்க மஹாதேவனும் அமிர்தகடத்தை மானும் புலியும் பகையின்றி நட்புறவோடு நீர் உண்ணும் நிலையில் வைத்துப் பின்ண்ணக் கட்டளையிட , அவர்களும் அவ்வாறே பிஞ்சிசிலவனம் எனும் தலத்தில் அதனை வைத்துவிட்டு அனுஷ்டானத்திற்காகச் சென்றனர். திரும்ப வந்து பார்த்தபோது அமிர்தகடமானது சிவலிங்கமாக உருவெடுத்துப் பிஞ்சில வனத்திலேயே அமிர்தகடசே மூர்த்தியாகப் பிரதிஷ்டையானது 



