
வாழ்க...வாழ்க... வளமுடன்
குடும்பத்தில் நல்லவை நடந்து மகிழ்ச்சிப் பொங்கட்டும்.
என்றும் அன்புடன் தி.ரா.ச.(TRC)
புத்தாண்டுக்கு என்ன எழுதலாம் என்று தேடியபோது
கண்ணில் பட்டு கருத்தைக் கவர்ந்தது
அவள் விகடனில் வந்த ஒரு கவிதை.:-
தண்ணீர் பஞ்சம் தொலைய வேண்டும்
தங்கம் விலை குறைய வேண்டும்
அழுகை இல்லா சீரியல் வேண்டும்
அழாமல் பிள்ளை சாப்பிட வேண்டும்
வாரா வாரம் அவுட்டிங் வேண்டும்
வஞ்சனை இல்லா ஷாப்பிங் வேண்டும்
சண்டை போடாத சர்வன்ட் வேண்டும்
சமையலில் உதவும் ஹஸ்பண்ட் வேண்டும்
வாக்கிங் இன்றி மெலிய வேண்டும்
வல்கர் சினிமா ஒழிய வேண்டும்
தொடர்பு விட்ட தோழிகள் வேண்டும்
தொல்லை தராத சொந்தங்கள் வேண்டும்
மயக்கம் இல்லாத மசக்கை வேண்டும்
மதியம் குட்டித் தூக்கம் வேண்டும்
மளிகைச் செலவு குறைய வேண்டும்
மாசக் கடைசியிலும் மகிழ்ச்சி வேண்டும்
வேண்டும் வேண்டும் இறைவா--என்
ஏக்கங்கள் எல்லாம் தீர்ப்பாயா
புன்னகை ததும்பும் வாழ்வை--நீ
புத்தாண்டு வரமாய் சேர்ப்பாயா!
நன்றி:- அவள் விகடன் எழுதியவர்:- மிஸஸ்.எக்ஸ்.
இது முற்றுப்பெறவில்லை நீங்களும் உங்கள் பங்குக்கு புதிய வருடத்தில் உங்கள் விருப்பங்களைச் எதிர்பார்ப்புக்களைச் சேர்க்கலாம்.
இதோ என் பங்குக்கு:-
குப்பை இல்லாத சென்னை வேண்டும்
தொப்பை இல்லாத போலீஸ் வேண்டும்